Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பெண் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்​டதாக குற்றச்சாட்டு: விசாரணையை தொடங்க ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    பெண் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்​டதாக குற்றச்சாட்டு: விசாரணையை தொடங்க ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminSeptember 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பெண் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்​டதாக குற்றச்சாட்டு: விசாரணையை தொடங்க ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தூய்​மைப் பணி​யாளர்​கள் போராட்​டத்​தின்​போது பெண் வழக்​கறிஞர்​கள் தாக்​கப்​பட்​ட​தாக, போலீ​ஸார் மீதான குற்​றச்​சாட்டு குறித்து ஓய்​வு​பெற்ற நீதிபதி தனது விசா​ரணையை தொடங்க உயர் நீதி​மன்​றம் அனு​ம​தி​யளித்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி 5-வது மற்​றும் 6-வது மண்​டலத்​தில் தூய்​மைப் பணி​களுக்​கான பொறுப்பை தனி​யாரிடம் ஒப்​படைத்​ததை எதிர்த்து தூய்​மைப் பணி​யாளர்​கள், மாநக​ராட்சி அலு​வல​கம் முன்​பாக தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

    பின்​னர், உயர் நீதி்மன்ற உத்​தர​வுப்​படி போராட்​டத்​தில் ஈடு​பட்ட தூய்மை பணி​யாளர்​களை போலீ​ஸார் அப்​புறப்​படுத்​தி​ய​போது பெண் வழக்​கறிஞர்​கள் உள்​ளிட்ட 12 வழக்​கறிஞர்​களை போலீ​ஸார் தாக்​கிய​தாகக் கூறி, உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. அந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, இதுதொடர்​பாக ஓய்​வு​ பெற்ற நீதிபதி வி.​பார்த்​திபன் தலை​மை​யில் ஒருநபர் ஆணை​யம் அமைத்து விசா​ரிக்க உத்​தர​விட்​டனர்.

    இந்​நிலை​யில், இந்த உத்​தரவை மாற்​றியமைக்​கக் கோரி போலீ​ஸார் தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​ட​தால், ஒருநபர் ஆணை​யம் தொடர்​பான உத்​தரவை மற்​றொரு அமர்வு நிறுத்தி வைத்​தது. இந்​நிலை​யில், வழக்​கறிஞர்​களை போலீ​ஸார் தாக்​கியது தொடர்​பான பொதுநல வழக்கு விசா​ரணை தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​த​வா, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் நடந்​தது. அப்​போது இந்த விவ​காரத்​தில், ஒருநபர் ஆணை​யம் அமைத்​தது தொடர்​பான வழக்​கும் சேர்த்து விசா​ரிக்​கப்​பட்​டது.

    பாதிக்​கப்​பட்ட வழக்​கறிஞர்​கள் தரப்​பில் வழக்​கறிஞர்​கள் ஆர்​.சங்​கரசுப்​பு, ஆர்​.கிருஷ்ணகு​மார் ஆகியோர் ஆஜராகி, “இது தொடர்​பாக விசா​ரிக்க ஒருநபர் ஆணை​யம் அமைத்து ஏற்​கெனவே விசா​ரித்த முதல் அமர்வு உத்​தர​விட்​டது. ஆனால், எங்​களுக்கு எந்​தவொரு நோட்​டீஸும் கொடுக்​காமல் அந்த வழக்கை விசா​ரித்த இரண்​டாவது அமர்​வு, ஒருநபர் ஆணை​யத்​தின் விசா​ரணையை நிறுத்தி வைத்​துள்​ளது” என்​றனர்.

    அதற்கு அரசு கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன் ஆஜராகி, “மனு​தா​ரர்​கள் தங்​களது கோரிக்​கை​யில் ஒருநபர் ஆணை​யம் அமைக்க வேண்​டும் என கோராத​போது, அரசு தரப்​பில் விளக்​கம் கோராமல் அப்​போதைய அமர்வு ஒருநபர் ஆணை​யம் அமைத்து உத்​தர​விட்​டது. அப்​படியே அமைப்​ப​தாக இருந்​தா​லும் வேறு ஒரு​வர் தலைமையில் ஆணை​யம் அமைக்​கலாம்” என்​றார்.

    அப்​போது நீதிப​தி​கள், நடந்த சம்​பவம் குறித்து இருதரப்​பும் ஒரு​வர் மீது ஒரு​வர் புகார் கூறிக்​கொண்டே சென்​றால் பிரச்​சினைக்​குத் தீர்வு கிடைக்​காது. ஓய்​வு​பெற்ற நீதிபதி வி.​பார்த்​திபன் தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட ஒருநபர் ஆணை​யத்தை கண்டு ஏன் தமிழக அரசு அச்​சப்பட வேண்டும். எனவே, இதுதொடர்​பாக ஓய்​வு​பெற்ற நீதிபதி தனது விசா​ரணையை தொடங்​கலாம் என உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை அக்​.10-ம்​ தேதிக்​கு தள்ளிவைத்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ரூ.105 கோடி இன்சூரன்ஸ் மோசடிகளை விசாரிக்க உத்தரவு

    September 20, 2025
    மாநிலம்

    “அணைகள் விவகாரத்தில் திமுக செய்வது வாக்கு வங்கி அரசியல்” – ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

    September 20, 2025
    மாநிலம்

    “விவசாயிகளின் வயிற்றில் அடித்து, நெல் கொள்முதலில் பல கோடி ரூபாய் கமிஷன்” – திருவாரூரில் விஜய் காட்டம்

    September 20, 2025
    மாநிலம்

    சிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம் சென்னையில் 300 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்: உதயநிதி வழங்கினார்

    September 20, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

    September 20, 2025
    மாநிலம்

    ‘சென்னை குடிநீர் செயலி’ – செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழாவில் முதல்வர் அறிமுகம்

    September 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரூ.105 கோடி இன்சூரன்ஸ் மோசடிகளை விசாரிக்க உத்தரவு
    • ‘மோடிக்கு ட்ரம்ப் அனுப்பும் பரிசுகள்…’ – எச்1பி விசா கட்டண உயர்வை முன்வைத்து காங். விமர்சனம்
    • “எப்போதுமே தேசத்தின் ஆதரவு எங்களுக்கு உள்ளது” – பாக். உடனான போட்டி குறித்து சூர்யகுமார் யாதவ்
    • “அணைகள் விவகாரத்தில் திமுக செய்வது வாக்கு வங்கி அரசியல்” – ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
    • பெரியவர்களால் நுகரப்படும் பொதுவான பானங்கள், குழந்தைகளுக்கு இந்த மூலப்பொருள் உள்ளது, இது கொடிய பெருங்குடல் புற்றுநோயை எரிபொருளாகக் கொண்டுள்ளது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.