Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
    மாநிலம்

    பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    adminBy adminJune 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலை​வரும், எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் ராம்சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா, எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோர் ஆஜராகி, கடத்தப்பட்ட சிறுவன் மனுதாரரின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்படவில்லை என்றும், இந்த கடத்தலில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகக்கூறி மனுதாரர் மீது உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் வாதிட்டனர்.

    அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் மனுதாரரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே முன்ஜாமீன் அளிக்கப்படுகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸார் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம். இதற்கிடையே ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டிருந்தால் சாட்சிகளை கலைக்க மாட்டேன் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் எனவும் உத்தரவாதம் பெற்று ரூ.25,000-க்கான பிணைப் பத்திரத்துடன் அவரை சொந்த ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

    முன்னதாக, திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ் என்பவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த விஜயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது மகளை மீட்பதற்காக தனுஷின் வீட்டுக்கு வந்த விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா, முன்னாள் எஸ்ஐ மகேஸ்வரி உள்ளிட்ட 5 பேர் அங்கிருந்த தனுஷின் 17 வயது தம்பியை காரில் கடத்திச் சென்றதாக புகார் எழுந்தது.

    இந்த கடத்தலுக்கு கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியும், போலீஸ் ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் ஆகியோரும் உதவியதாக கூறப்படுகிறது. அதையடுத்து போலீஸார் ஜெகன்மூர்த்தி மீதும் வழக்குப்பதிவு செய்தனர். ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இவர்கள் இருவரிடமும் போலீஸார் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், பணப்பரிமாற்றம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டனர். ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து அவர் தலைமறைவானார் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஆக.30-ல் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

    August 23, 2025
    மாநிலம்

    விஜய் அரசியல் நடிகராக இல்லாமல் மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும்: பாஜக

    August 23, 2025
    மாநிலம்

    சென்னை: தேங்கிய மழை தண்ணீரில் மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

    August 23, 2025
    மாநிலம்

    மீனவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்: பழனிசாமி உறுதி

    August 23, 2025
    மாநிலம்

    கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுரவரம் சுதாகர் ரெட்டி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    August 23, 2025
    மாநிலம்

    நோய் தடுப்பு மருந்து துறையில் 6,000 செவிலியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப எதிர்ப்பு!

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மீண்டும் இணையும் விஷால் – அஞ்சலி கூட்டணி
    • ஆக.30-ல் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்
    • தெரு நாய்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி: வேலை செய்யும் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விவசாயிகளின் நலன்களில் இந்தியா சமரசம் செய்யாது: அமெரிக்க வரிகளுக்கு ஜெய்சங்கர் கடும் எதிர்ப்பு
    • பல படங்களில் திருப்தியின்றி நடித்துள்ளேன்: சமந்தா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.