Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பூவை ஜெகன்மூர்த்திக்கு கண்டனம் முதல் ஏடிஜிபி ஜெயராம் கைது வரை – சிறுவன் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன?
    மாநிலம்

    பூவை ஜெகன்மூர்த்திக்கு கண்டனம் முதல் ஏடிஜிபி ஜெயராம் கைது வரை – சிறுவன் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன?

    adminBy adminJune 17, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பூவை ஜெகன்மூர்த்திக்கு கண்டனம் முதல் ஏடிஜிபி ஜெயராம் கைது வரை – சிறுவன் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான புரட்சி பாரம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்தார். சீருடையில் நேரில் ஆஜரான ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம், நீதிபதி உத்தரவின்பேரில் உயர் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார்.

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமியின் மூத்த மகன் தனுஷும்(23), தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான வனராஜாவின் மகள் விஜயயும் (21) காதலித்து வந்துள்ளனர். வீட்டைவிட்டு வெளியேறி கடந்த ஏப்ரல் 15-ம் தேதி சென்னையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இதை விரும்பாத வனராஜா, தனதுமகளை மீட்க திட்டமிட்டார். காவல் உதவி ஆய்வாளராக இருந்த மகேஸ்வரி மூலமாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தியின் உதவியை நாடியுள்ளார்.

    இதை தொடர்ந்து, வனராஜா, அவரது உறவினர்கள், மகேஸ்வரி ஆகியோர் கடந்த ஜூன் 6-ம் தேதி தனுஷ் வீட்டுக்கு சென்றனர். தம்பதிகள் அங்கு இல்லாததால், தனுஷின் தாயை மிரட்டிவிட்டு, அங்கிருந்த அவரது 17 வயது இளைய மகனை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. போலீஸில் தனுஷின் தாய் இதுகுறித்து புகார் கொடுத்த நிலையில், சிறுவனை கடத்தி சென்றவர்கள் அவனை மறுநாள் அதிகாலை சென்னை மீனம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். சிறுவன் கடத்தலுக்கு ஆயுதப்படை ஏடிஜிபியான எச்.எம்.ஜெயராமின் காவல் வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    கடத்தல் சம்பவம் தொடர்பாக திருவாலங்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, தொழிலதிபர் வனராஜ், அவரது உறவினர்கள் மணிகண்டன், கணேசன், மகேஸ்வரி, பூந்தமல்லி துத்தம்பாக்கம் வழக்கறிஞர் சரத்குமார் ஆகிய 5 பேரை கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். இந்த நிலையில், ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை அவசர மனுவாக விசாரிக்குமாறு கடந்த ஞாயிறன்று முறையிடப்பட்டது. ஆனால், மறுநாள் விசாரிப்பதாக நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.

    அதன்படி, நீதிபதி வேல்முருகன் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெகன்மூர்த்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ‘‘இந்த வழக்குக்கும், ஜெகன்மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை’’ என வாதிட்டார். போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன், ‘‘சிறுவன் கடத்தல் சம்பவம் நடந்தபோது, முன்னாள் காவல் அதிகாரி மகேஸ்வரியும், ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவும் பூந்தமல்லியில் உள்ள ஓட்டலில் இரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணி வரை பேசியுள்ளனர். கடத்தலுக்கு ஏடிஜிபி டிஜிபி ஜெயராம் தனது காரை கொடுத்து அனுப்பியுள்ளார். போலீஸார்தான் அந்த வாகனத்தை ஓட்டியுள்ளனர். இந்த கடத்தலில் அதிக அளவில் பணம் கைமாறியுள்ளது. ஜெகன்மூர்த்தியை விசாரித்தால் உண்மைகள் தெரியும்’’ என்றார்.

    இதையடுத்து, எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியும், ஏடிஜிபி ஜெயராமும் பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராகநீதிபதி உத்தரவிட்டார். ஏடிஜிபி ஜெயராம் 2.30 மணிக்கு ஆஜரானார். வழக்கறிஞர்கள் புடைசூழ வந்த ஜெகன்மூர்த்தி 3.45 மணிக்கு ஆஜரானார். அப்போது, எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியிடம் நீதிபதி வேல்முருகன் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதன் விவரம்: உங்களை நம்பி 80 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள் என்றெல்லாம் அவர்களுக்கு தெரியட்டும் என்றுதான்ஆஜராக உத்தரவிட்டேன். ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் சம்பாதிக்கத்தான் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்களா. 2 பேர் காதல் திருமணம் செய்ததற்காக வீடு புகுந்து மிரட்டி, சிறுவனை கடத்துவீர்களா.சட்டம் இயற்றும் இடத்தில் உள்ள நீங்கள் சட்டத்தை மதித்து நடந்திருக்க வேண்டும். மாறாக, 2 ஆயிரம் பேரை நிறுத்தி போலீஸ் விசாரணைக்கு இடையூறு செய்துள்ளீர்கள்.

    எம்.பி., எம்எல்ஏ, போலீஸ் அதிகாரிகள் யாராக இருந்தாலும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது. (அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி) இந்த வழக்கில் ஏடிஜிபிக்கு தொடர்பு இருப்பது கண்கூடாக தெரிந்தும், அவரது பெயரை எஃப்ஐஆரில் ஏன் சேர்க்கவில்லை. உயர் அதிகாரிஎன்பதால் காப்பாற்ற நினைக்கிறீர்களா. அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே, ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து, அவரிடம் போலீஸார் விசாரிக்க வேண்டும். அதேபோல, எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியும் கூட்டத்தை கூட்டாமல் தனியாக போலீஸ் விசாரணைக்கு சென்று ஒத்துழைப்பு தரவேண்டும்.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். ஏடிஜிபி ஜெயராமை உயர் நீதிமன்றத்திலேயே போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனுடன் டிஜிபி சங்கர் ஜிவால் அவசர ஆலோசனை நடத்தினார்.

    முக்கிய பொறுப்புகள் வகித்தவர்: கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கர்நாடகாவில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.எம்.ஏ., எம்.பில் படித்தவர். 1996 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக தமிழக பிரிவில் பொறுப்பேற்றார். நாமக்கல், தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் ஆரம்பகால பணியை தொடங்கிய ஜெயராம், தமிழக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். திறம்பட பணி செய்பவர், அனைவரிடமும் சகஜமாக, எளிமையாக பழகக்கூடியவர் என்று பெயரெடுத்த ஜெயராம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    உங்களுடன் ஸ்டாலின்… எங்களுடன் எடப்பாடியார்..! – ஏட்டிக்குப் போட்டி செய்கிறதா அதிமுக?

    August 1, 2025
    மாநிலம்

    பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாட்டுக்கான திருநங்கையர் நல கொள்கை வெளியீடு

    August 1, 2025
    மாநிலம்

    பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்த பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் ஓபிஎஸ்

    August 1, 2025
    மாநிலம்

    ரிதன்யாவின் செல்போன் தடயவியல் சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    August 1, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    August 1, 2025
    மாநிலம்

    ஓசூரில் கடந்த 3 மாதங்களில் தெரு நாய்கள் கடித்து 446 பேர் பாதிப்பு!

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்களுடன் ஸ்டாலின்… எங்களுடன் எடப்பாடியார்..! – ஏட்டிக்குப் போட்டி செய்கிறதா அதிமுக?
    • பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாட்டுக்கான திருநங்கையர் நல கொள்கை வெளியீடு
    • பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்த பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் ஓபிஎஸ்
    • ரிதன்யாவின் செல்போன் தடயவியல் சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
    • தமிழகத்தில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.