Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்
    மாநிலம்

    பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்

    adminBy adminJune 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி – பரந்தூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கிமீ தொலைவில் மாதவரம் – சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பணிமனை, மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. அனைத்து பணிகளையும் 2028-ம் ஆண்டில் முடிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையே, புதியதாக பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்தை இணைக்கும் வகையில், புதிய மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இது, இரண்டாம் கட்டத்தில் நடக்கும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி மெட்ரோ திட்டத்தில், பரந்தூர் வரை 53 கிமீ மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதி தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்பித்தது.

    இதற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்து நேற்று அரசாணை வெளியிட்டது. முதல்கட்டமாக, பூந்தமல்லி – சுங்கவார்சத்திரம் வரையில் 27.9 கிமீ தொலைவு மெட்ரோ ரயில் திட்டம் ரூ.8,779 கோடியில் அமைக்கப்படும். மத்திய, மாநில அரசின் பங்களிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் நடக்கும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை அடுத்து, விமான நிலையம் – கிளாம்பாக்கம், பூந்தமல்லி – பரந்தூர், கோயம்பேடு – ஆவடி ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இதையடுத்து, மத்திய அரசின் ஒப்புதலை பெற்று, இந்த திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். மெட்ரோ ரயில்களின் சேவை விரிவாக்கம் வாயிலாக, பொதுமக்கள் பொது போக்குவரத்து பயன்படுத்துவது அதிகரிக்கும். மேலும், சென்னையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து பெரிய பங்களிப்பாக இருக்கும்.

    பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ விரிவாக்க திட்டத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன், நிறுவனம் தேர்வு செய்து முதல்கட்டமாக, பூந்தமல்லி – சுங்கவார்சத்திரம் இடையே மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி!” – ‘பதவிப் பறிப்பு’ மசோதா மீது மு.க.ஸ்டாலின் காட்டம்

    August 20, 2025
    மாநிலம்

    ஜெ.தீபாவுக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை

    August 20, 2025
    மாநிலம்

    ஒடிசா பெண்ணுக்கு முதல் உதவி அளித்து பிரசவிக்க உதவிய பெண் காவலருக்கு டிஜிபி நேரில் பாராட்டு!

    August 20, 2025
    மாநிலம்

    “தவெக மாநாடு எவ்வித திருப்புமுனையையும் ஏற்படுத்தாது” – அப்பாவு கருத்து

    August 20, 2025
    மாநிலம்

    சென்னைக்குள் நுழைய கூடாது என பாஜக நிர்வாகி நெடுங்குன்றம் சூர்யாவுக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்

    August 20, 2025
    மாநிலம்

    ஆகாஷ் பாஸ்கரன் விவகாரம்: அமலாக்கத் துறை உதவி இயக்குநர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்க மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி
    • “இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி!” – ‘பதவிப் பறிப்பு’ மசோதா மீது மு.க.ஸ்டாலின் காட்டம்
    • இருதயநோய் நிபுணர் 90 நிமிட உடற்பயிற்சி ஆரம்பகால இறப்பு அபாயத்தை 15%குறைக்கும்; நீண்ட ஆயுள் ரகசியங்களைப் பற்றி வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜெ.தீபாவுக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை
    • சர்வதேச பயணத்தை வழிநடத்தும் உலகின் முதல் 10 இடங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.