Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பூந்தமல்லி: தாறுமாறாக ஓடிய குடிநீர் லாரி வாகனங்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழப்பு
    மாநிலம்

    பூந்தமல்லி: தாறுமாறாக ஓடிய குடிநீர் லாரி வாகனங்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழப்பு

    adminBy adminJuly 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பூந்தமல்லி: தாறுமாறாக ஓடிய குடிநீர் லாரி வாகனங்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில் தாறுமாறாக ஓடிய குடிநீர் லாரி, வாகனங்கள் மீது மோதியதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆவடியில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி ஒன்று, இன்று காலை சென்று கொண்டிருந்தது. மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் அழகுராஜா(31), ஓட்டிச் சென்ற அந்த லாரி பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த இரு வாகனத்தின் மீது மோதிவிட்டு வேகமாக சென்றது.

    இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திருவேற்காடு அடுத்த சுந்தரசோழபுரத்தைச் சேர்ந்த தேவி( 40) மற்றும் கிருஷ்ணன் (52) ஆகிய இருவர் காயமடைந்தனர். தொடர்ந்து, அந்த லாரி, மற்ற இரு சக்கர வாகனங்கள், கார்களை இடித்து தள்ளிவிட்டு சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. இதனால், மின் கம்பம் மற்றும் மின்சார கம்பிகள் கீழே சாய்ந்தன. இச்சம்பவத்தில், சாலையில் நடந்து சென்ற, சேலத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளியான தனபால் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த, அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவர்கள் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை பிடித்து, மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கி லாரி கண்ணாடிகளை கற்களால் உடைத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், சம்பவ இடம் விரைந்து, தனபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . கிருஷ்ணன், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் குறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்களில் ஒருவரான தேவி, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற கிருஷ்ணன்(52) என்பவருடன் லிப்ட் கேட்டு சென்ற போது விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கோயில்களின் உண்டியல் காணிக்கை, வாடகை கட்டணம் எங்கே போகிறது? – இந்து முன்னணி மாநிலத் தலைவர் கேள்வி

    August 1, 2025
    மாநிலம்

    ‘அண்ணாச்சி கொடுக்கச் சொன்ன அந்த அஞ்சும் வரல..!’ – ஸ்ரீவில்லி. சேர்மனுக்கு எதிராக கொந்தளிக்கும் திமுக நிர்வாகிகள்

    August 1, 2025
    மாநிலம்

    உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் மருத்துவம் திட்டங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

    August 1, 2025
    மாநிலம்

    வைகோவால் கைவிடப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்: மல்லை சத்யா அழைப்பு

    August 1, 2025
    மாநிலம்

    தமிழக அரசை கண்டித்து பிரச்சார பயணம்: பி.ஆர்.பாண்டியன் தகவல்

    August 1, 2025
    மாநிலம்

    சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் அவசியம்: திருமாவளவன் வலியுறுத்தல்

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கோயில்களின் உண்டியல் காணிக்கை, வாடகை கட்டணம் எங்கே போகிறது? – இந்து முன்னணி மாநிலத் தலைவர் கேள்வி
    • சென்னையில் ரூ.35 லட்சத்தில் 7 ஆவின் ஜங்ஷன் பாலகங்கள் சீரமைப்பு பணி: ஒப்பந்தப்புள்ளி கோரியது ஆவின் நிறுவனம்
    • மார்பக புற்றுநோய்: கோவிட் -19 எவ்வாறு செயலற்ற மார்பக புற்றுநோய் செல்களை எழுப்பக்கூடும், ஆய்வு குழப்பமான ஆதாரங்களைக் காட்டுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது: 26 துப்பாக்கிகள் பறிமுதல்
    • ‘அண்ணாச்சி கொடுக்கச் சொன்ன அந்த அஞ்சும் வரல..!’ – ஸ்ரீவில்லி. சேர்மனுக்கு எதிராக கொந்தளிக்கும் திமுக நிர்வாகிகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.