Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பூத் கமிட்டிகளை வலுப்படுத்த அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை
    மாநிலம்

    பூத் கமிட்டிகளை வலுப்படுத்த அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை

    adminBy adminJune 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பூத் கமிட்டிகளை வலுப்படுத்த அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சட்டப்பேரவை தேர்தல், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில், கட்சி வளர்ச்சி பணிகள், கூட்டணி தொடர்பாக விவாதிக்க ஜூன் 24, 25-ம் தேதிகளில் 42 மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, முதல் நாளான நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடந்தது. இதில் சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட நிர்வாகிகள் காலையும் பின்னர் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்ட நிர்வாகிகளை பிற்பகலிலும் பழனிசாமி சந்தித்தார்.

    இதில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால், அனைவரும் இப்போது இருந்தே தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். பூத் கமிட்டியை வலுப்படுத்தும் பணிகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு முகவர்களை நியமித்து, அதற்கான பட்டியலை தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அப்போது பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

    அதேபோல், விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு வெளியாகும். அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று பழனிசாமி தெரிவித்தார். மேலும் கூட்டணி விவகாரம் தொடர்பாக நான் பார்த்து கொள்கிறேன்.

    நீங்கள் அனைவரும் திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்பட வேண்டும். அதற்காக, பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு, சமூக வலைதள பயிற்சி கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    இரண்டாம் நாளாக இன்று காலை திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கும், பிற்பகல் 3.30 மணிக்கு, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்களை கைது செய்ததைக் கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

    August 27, 2025
    மாநிலம்

    கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடி முறைகேடு புகார்: டீன் பொறுப்பில் இருந்து சவுந்தரராஜன் நீக்கம்

    August 27, 2025
    மாநிலம்

    ஜெகதீப் தன்கர் விவகாரம்: ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படும் – செல்வப்பெருந்தகை தகவல்

    August 27, 2025
    மாநிலம்

    திருவானைக்காவல் கோயிலில் நயினார் நாகேந்திரன் தியானம்

    August 27, 2025
    மாநிலம்

    28, 29-ல் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்

    August 27, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் 66,000 தொழில்முனைவோருக்கு ரூ.5,490 கோடி கடன்:  அமைச்சர் தகவல்

    August 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் புரட்டாசி மாதத்தில் ஒருநாள் பெருமாள் கோயில் சுற்றுலா
    • ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி அட்லர் காலமானார்
    • தூய்மைப் பணியாளர்களை கைது செய்ததைக் கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
    • முடி வளர்ச்சிக்கான வெங்காய சாறு: அதை எவ்வாறு பிரித்தெடுப்பது, அதைப் பயன்படுத்துவது, ஏன் பாலிவுட் திவாஸ் சத்தியம் செய்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கேரளா பல்கலை.யில் திருநங்கைகளுக்காக விடுதி திறப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.