Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»புனைவு வரலாற்றை தொல்லியல் ஆதாரங்களால் முறியடிக்க வேண்டும்: மத்திய தொல்லியல் துறை இயக்குநர் கருத்து
    மாநிலம்

    புனைவு வரலாற்றை தொல்லியல் ஆதாரங்களால் முறியடிக்க வேண்டும்: மத்திய தொல்லியல் துறை இயக்குநர் கருத்து

    adminBy adminSeptember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புனைவு வரலாற்றை தொல்லியல் ஆதாரங்களால் முறியடிக்க வேண்டும்: மத்திய தொல்லியல் துறை இயக்குநர் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: புனைவு வரலாற்றை தொல்​லியல் ஆதா​ரங்​களால் முறியடிக்க வேண்​டும் என்று மத்​திய தொல்​லியல் துறை இயக்​குநர் அமர்​நாத் ராமகிருஷ்ணா கூறி​னார்.

    தமிழ்​நாடு முற்​போக்கு எழுத்​தாளர் கலைஞர்​கள் சங்​கம் (தமுஎகச) சார்​பில் சிந்​து​வெளி நாகரி​கம் உலகுக்கு அறிவிக்​கப்​பட்ட நூற்​றாண்டு நிறைவு கருத்​தரங்​கம் மதுரை விராட்​டிபத்​தில் நேற்று நடை​பெற்​றது. மாநில செயற்​குழு உறுப்​பினர் ச.தமிழ்ச்​செல்​வன் தலைமை வகித்​தார். மாநிலத் தலை​வர் மதுக்​கூர் ராமலிங்​கம் முன்​னிலை வகித்​தார். சிந்​து​வெளி ஆய்​வாள​ரும், முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி​யு​மான ஆர்​.​பால​கிருஷ்ணன், சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் ஆதவன் தீட்​சண்யா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

    இதில் மத்​திய தொல்​லியல் துறை இயக்​குநர் அமர்​நாத் ராமகிருஷ்ணன் பேசி​ய​தாவது: கடவுள் நாகரி​கத்தை படைக்​க​வில்​லை. மனிதர்​கள்​தான் நாகரி​கத்தை படைத்​துள்​ளனர். தற்​போது நாகரி​கம் பற்​றிய புனை​வுக் கதைகளைத்​தான் வரலாறாகப் பார்த்​துக் கொண்​டிருக்​கிறோம். ஆதா​ரங்​கள் அடிப்​படை​யில் கட்​டமைக்​கப்​படு​வது​தான் வரலாறு. கீழடி அகழாய்வு குறித்து இன்​னும் முழு​மை​யான அறிக்​கையை நான் அளிக்​க​வில்​லை. அதற்​குள் அண்ணா பல்​கலைக்​கழக மாணவர்​கள் மணலூர் கீழடியை மகா​பாரதத்தை தொடர்​புபடுத்தி புனைவு நூலாக்​கி​யுள்​ளனர்.

    புனைவு வரலாற்றை தொல்​லியல் ஆதார வரலாற்​றால் முறியடிக்க வேண்​டும். வரலாற்றை புனை​வு​களோடு கட்​டமைக்​கலாம். அதை தொல்​லியல் சான்​றாககட்​டமைக்க முடி​யாது. சங்க இலக்​கி​யங்​கள் மனித இலக்​கி​யங்​களை பேசும் மகத்​தான இலக்​கியங்க​ளாகும். கீழடி அகழாய்வு அறிக்​கையை மாற்ற வேண்​டும் என்​றனர், அதை மறுத்து விட்​டேன். கீழடி அறிக்கை வெளிவ​ராத​தால், அந்த வரலாற்றை மக்​களுக்கு எடுத்​துச் சொல்​ல​ முடிய​வில்​லை.

    காஞ்​சிபுரத்​தில் சென்னை பல்​கலைக்​கழக மாணவர்​களால் 1975-82-ம் ஆண்டு வரை 7 ஆண்​டு​கள் அகழாய்வு செய்த அறிக்​கையை இன்​னும் முழு​மை​யாக வெளி​யிட​வில்​லை. தமிழகம் முழு​வதும் கிடைத்த கருப்பு சிவப்பு நிற பானை ஓடு காஞ்​சிபுரத்​தில் மட்​டும் கிடைக்​காதது முக்​கிய செய்​தி. அதற்கு காரணம் காஞ்​சிபுரம் சங்க கால நகரம் கிடை​யாது. மக்​களுக்கு தெரியப்​படுத்​தி​ய​தால்​தான் கீழடி வாழ்ந்து கொண்​டிருக்​கிறது.

    அகழாய்வு குறிப்புகள்…காஞ்​சிபுரம் பற்​றிய அறிக்கை வந்​திருந்​தால் வரலாற்று பார்வை மாறி​யிருக்​கும். மொழியை காப்​பாற்​றிக் கொண்டு வாழ்​பவர்​கள் தமிழர்​கள். இன்று வரை சங்க இலக்​கி​யங்​களை தொல்​லியல் எச்​சங்​களோடு ஒப்​பிட​வில்​லை. புனை​வு​கள் வரலாறு ஆகாது. தமிழகத்​தின் பல அகழாய்​வு​ குறிப்​பு​கள் மக்​களுக்கு சென்று சேர​வில்​லை. சேர்ந்​தால்​தான் வரலாற்​றின் உண்​மைத்​தன்மை புரி​யும். இவ்​வாறு அவர் பேசி​னார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்தில் மோசமான ஆட்சி நடப்பதால் விஜய்யின் தாக்குதல் திமுக மீது மட்டுமே இருக்க வேண்டும்: தமிழிசை கருத்து

    September 21, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 17 பாலியல் குற்றங்கள்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

    September 21, 2025
    மாநிலம்

    பாஜகவை தடுத்து நிறுத்​தும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது: மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

    September 21, 2025
    மாநிலம்

    அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: ஜவாஹிருல்லா கண்டனம்

    September 21, 2025
    மாநிலம்

    சுரண்டை அருகே குளத்தில் தண்ணீர் எடுக்கும் விவகாரம்: அதிமுக எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்

    September 21, 2025
    மாநிலம்

    தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடியில் கப்பல் கட்டும் தளங்கள்: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் மோசமான ஆட்சி நடப்பதால் விஜய்யின் தாக்குதல் திமுக மீது மட்டுமே இருக்க வேண்டும்: தமிழிசை கருத்து
    • விண்மீனின் மறைக்கப்பட்ட அதிசயங்களை வெளிப்படுத்தும் 8 தாடை-கைவிடுதல் பால்வீதி படங்களை நாசா பகிர்ந்து கொள்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாடு முழுவதும் மருத்துவர் எண்ணிக்கையை சீராக உயர்த்த மத்திய அரசு உறுதி: தேசிய மருத்துவ ஆணைய தலைவர் தகவல்
    • தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 17 பாலியல் குற்றங்கள்: நயினார் நாகேந்திரன் கண்டனம்
    • விண்கல் மழை அல்லது சனி குப்பைகள்? உமிழும் ஸ்ட்ரீக் திகைப்புகள் டெல்லி-என்.சி.ஆர் ஸ்கைலைன் | இந்தியா செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.