Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, January 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் இருக்கை முன்பு தர்ணா: திமுக, காங். எம்எல்ஏகள் வெளியேற்றம்
    மாநிலம்

    புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் இருக்கை முன்பு தர்ணா: திமுக, காங். எம்எல்ஏகள் வெளியேற்றம்

    adminBy adminSeptember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் இருக்கை முன்பு தர்ணா: திமுக, காங். எம்எல்ஏகள் வெளியேற்றம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுச்சேரி: மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க கூட்டத்தை கூடுதல் நாட்கள் நடத்தக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவையை தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து திமுக, காங்கிரஸ், சுயேட்சை எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.

    புதுவை சட்டப்பேரவை இன்று (வியாழக்கிழமை) கூடியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக பேரவைத்தலைவர் செல்வம் இரங்கல் குறிப்புகளை வாசித்து,பேரவை முன்பு முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்யவேண்டிய ஏடுகளை சமர்பிக்கும்படி கோரினார். அப்போது சுயேட்சை எம்எல்ஏ நேரு குறுக்கிட்டு, சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் எனது தொகுதியில் 6-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதுபற்றி விவாதிக்க வேண்டும். இதற்காக சபையை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    அதேநேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்களும் ஒட்டுமொத்தமாக எழுந்து, புதுவையின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை குறைந்தபட்சம் 10 நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

    அப்போது பேரவைத்தலைவர் செல்வம், முதல்வருடன் கலந்து பேசி பேரவையை நடத்துவது குறித்து தெரிவிக்கப்படும். தற்போது இருக்கையில் அமருங்கள் என கூறினார். ஆனாலும் தொடர்ந்து திமுக, காங்கிரஸ், சுயேச்சை எம்எல்ஏக்கள் பேசினர். அப்போது சுயேச்சை எம்எல்ஏ நேரு மற்றும் இதர எம்எல்ஏக்கள் மைக்குகள் அணைக்கப்பட்டன.

    தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மட்டும் பேசினார். இந்த நேரத்தில் சுயேச்சை எம்எல்ஏ நேரு, தனது இருக்கையிலிருந்து வெளியேறி, முதல்வர் ரங்கசாமியிடம் சென்று ஒரு மனு அளித்தார். பின்னர் பேரவைத்தலைவர் இருக்கை முன்பு நின்று வாக்குவாதம் செய்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பேரவைத்தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர்.

    இதனால் சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் சட்டப்பேரவையை நடத்த இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து பேரவைத்தலைவர் செல்வம், தர்ணா செய்யும் உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக பேரவையிலிருந்து வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து சபை காவலர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சிவாவை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது எதிர்கட்சித் தலைவர் சிவா, அராஜகம் ஒழிக, ஜனநாயக படுகொலை என கோஷமிட்டார். அதைத்தொடர்ந்து , திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாக தியகராஜன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், சுயேச்சை எம்எல்ஏ நேரு ஆகியோரையும் சபையிலிருந்து வெளியேற்றினர்.

    தொடர்ந்து வெளியேற்றப்பட்ட எம்எல்ஏக்கள் மைய மண்டப நுழைவுவாயில் அருகே தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதனிடையே சபை நடவடிக்கைகள் தொடர்ந்தது. பேரவை நிகழ்வுகல் 45 நிமிடங்களில் நிறைவடைந்தது. அதன்பிறகு எம்எல்ஏக்களும் போராட்டத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆய்வகங்கள் எதையும் தவறாகச் சொல்வதற்கு முன்பே தைராய்டு பிரச்சனை தொடங்குகிறது: மருத்துவர்கள் ஆரம்ப அறிகுறிகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அதிதி ராவ் ஹைடாரி ஒரு காப்பக அங்கரகா குர்தா அணிந்து நவீன நேர்த்தியுடன் நகங்களை அணிந்துள்ளார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • செயற்கைக்கோள்கள் பூமிக்கு திரும்பாமல் எப்படி விண்வெளியில் தங்கியிருக்கும் மற்றும் அதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த நாளின் உறவு குறிப்பு: மகிழ்ச்சியான பிணைப்புகளுக்கு சகோதரி ஷிவானியின் அறிவுரை: “உறவுக்குச் செல்லுங்கள்…” | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் வாஷிங் மெஷின் மற்றும் ட்ரையரை குறைந்த கட்டணம் மற்றும் சிறந்த ஆற்றல் பயன்பாட்டிற்கு இயக்க இதுவே சிறந்த நேரம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.