Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»புதுச்சேரி கடலில் ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் இருவர் மீட்பு
    மாநிலம்

    புதுச்சேரி கடலில் ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் இருவர் மீட்பு

    adminBy adminJune 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புதுச்சேரி கடலில் ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் இருவர் மீட்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுச்சேரி: புதுச்சேரி கடலில் ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் இருவரை இன்று மீட்கப்பட்டனர். இதனிடையே, கடற்கரை கற்களில் சிக்கிய ஒடிசா நபரை போலீஸார் மீட்டனர்.

    புதுவை கடல் ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை கடலில் தோன்றக்கூடிய பெரிய அலைகள் குளிப்பவர்களை கடலுக்குள் இழுத்து சென்று விடுகிறது. இதனால் கடல் அழகை ரசித்து குளிக்கும் சுற்றுலா பயணிகள் பலர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து புதுவை கடற்கரைகளில் ஆபத்தான கடல் பகுதி, குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி, சுற்றுலா வரும் இளைஞர்கள் தொடர்ந்து குளித்து வருகின்றனர். அப்போது கடல் அலைகளில் சிக்குபவர்களை காப்பாற்ற சுற்றுலா கடலோர பாதுகாவலர்கள் (லைப் கார்டு) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடல் அலையில் சிக்கியவர்களை காப்பாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 21) என்ற கல்லூரி மாணவர் தனது நண்பர் ஹேமநாதனுடன் (21) நேற்று இரவு புதுவைக்கு சுற்றுலா வந்தார். புதுவையில் இன்று பாண்டி மெரீனா கடற்கரைக்கு சென்றார். அங்கு கடல் அலையில் கால்களை நனைத்து விளையாடி கொண்டிருந்தனர்.

    அப்போது கடலுக்குள் சிறிது தூரம் சென்றனர். அப்போது ராட்சத அலை அவர்களை சுருட்டி கடலுக்குள் இழுத்து சென்றது. இதைக் கண்ட சுற்றுலா கடலோர பாதுகாவலர்கள் உடனடியாக ஓடிச்சென்று கடலில் குதித்து அவர்களை காப்பாற்றினர். தொடர்ந்து அவர்களை ஒதியஞ்சாலை போலீசில் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    கடற்கரை கற்களில் கால் சிக்கி பரிதவித்த ஒடிசா தொழிலாளி: புதுவை நகராட்சி அலுவலகம் எதிரே ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி அமர்ந்திருந்தார். மது போதையில் இருந்த அவர் கற்கள் கொட்டிய பகுதியில் அமர்ந்திருந்தபோது, திடீரென அவரின் கால் கற்களின் இடுக்கில் சிக்கியது. இதனால் அவர் காலை எடுக்க முடியாமல் அலறினார். இதைக்கண்ட சுற்றுலா பயணிகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீஸார் அங்கு வந்து சுற்றுலா பயணிகளுடன் இணைந்து தொழிலாளியின் காலை கற்களில் இருந்து மீட்டனர். தொடர்ந்து அவரை அங்கிருந்து தூக்கி மணல் இருக்கும் பகுதியில் அமர்த்தினர். அங்கு அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவரை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை

    December 2, 2025
    மாநிலம்

    வலுவான வேட்பாளர் போட்டியிட்டால் தவெகவுக்கு வெற்றி: ஏ.சி.சண்முகம் கருத்து

    December 2, 2025
    மாநிலம்

    தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் நாமக்கல் ஏஎஸ்பியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

    December 2, 2025
    மாநிலம்

    எஸ்ஐஆரில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது – தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தவெக வலியுறுத்தல்

    December 2, 2025
    மாநிலம்

    தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டுவில் அணை ​கட்ட முடியாது: அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

    December 2, 2025
    மாநிலம்

    2026 அமைச்சரவையில் தேமுதிக இடம்பெறும்! –  பிரேமலதா நம்பிக்கை

    December 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தோட்டா தரணிக்கு ‘செவாலியே’ விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    • சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை
    • மீண்டும் அதிரடி காட்டிய தங்கம் விலை: பவுனுக்கு ரூ.2080 உயர்வு
    • ஆமி ஷூமரின் வியத்தகு எடை இழப்பு: 50 பவுண்டுகள் இழக்க தூண்டிய நோய்க்குறி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜம்மு நக்ரோடாவில் பாஜக வேட்பாளர் தேவயானி வெற்றி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.