Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, January 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»புதுச்சேரியில் புதிய விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும்: முதல்வர் ரங்கசாமி
    மாநிலம்

    புதுச்சேரியில் புதிய விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும்: முதல்வர் ரங்கசாமி

    adminBy adminJuly 28, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புதுச்சேரியில் புதிய விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும்: முதல்வர் ரங்கசாமி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுச்சேரி: புதுச்சேரி அரசு, ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மணவெளித் தொகுதி டி.என்.பாளையம் மற்றும் பாகூர் தொகுதி மணப்பட்டு கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை முதல்கட்டமாக முறையே 236 மற்றும் 82 நபர்களுக்கு இலவச மனைப் பட்டாவாக வழங்கும் விழா தவளக்குப்பம் நாணமேடு அருகில் இன்று நடைபெற்றது.

    இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச மனைப் பட்டாக்களை வழங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், எம்எல்ஏக்கள் கே.எஸ்.பி.ரமேஷ், செந்தில்குமார், அரசு செயலர்(நலம்) முத்தம்மா, ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடன் கலந்து கொண்டனர்.

    பின்னர் விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: குடிசை வீடு இல்லாத மாநிலமாக புதுச்சேரி திகழ வேண்டும் என்பது தான் நமது எண்ணம். அந்த எண்ணம் 90 விழுக்காடு நிறைவேறியுள்ளது. கல் வீடுகள் கட்டப்பட்டதால், தீ விபத்துகள் புதுச்சேரியில் குறைந்துள்ளது. ஒவ்வொரு திட்டத்தையும் மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அரசு செயல்படுத்தி வருகிறது. எந்த மாநிலத்திலும் சிறப்புக்கூறு நிதி பட்டியலின மக்களுக்கு தனியாக ஒதுக்கவில்லை. பல ஆண்டுக்கு முன்பே புதுச்சேரியில் தான் சிறப்புக்கூறு நிதியை அரசு ஒதுக்கியது. வழக்கமாக ஒதுக்கப்படும் நிதியை விட இந்த ஆண்டு ரூ.150 கோடி உயர்த்தி ரூ.525 கோடி ஒதுக்கியுள்ளோம்.

    பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நல்ல வீடு இருந்தால் அவர்களுக்கு மதிப்பு ஏற்பட்டு, வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் உயரும். பட்டிலின மக்களின் குழந்தைகளின் கல்வி சிறப்பாக இருக்க வேண்டும். அரசு பள்ளியிலும் பிள்ளைகள் படிக்க வேண்டும். விருப்பம் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பதற்கான நிதியை அரசு கொடுக்கும். இதுபோல் ரூ.65 கோடியை அரசு கொடுத்துள்ளது.

    மருத்துவம், கால்நடை மருத்துவம், பொறியியல், கலை அறிவியல், செவிலியர் கல்லுாரிகள் என அனைத்து கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு முடிப்பவர்களுக்கு தேவையான உயர்கல்வி கிடைக்கிறது. அவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளோம். அனைத்து கல்வியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும்.

    மனைப் பட்டா எந்த பாகுபாடும் இன்றி தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் அரசு வேலை வாய்ப்பு நினைத்துக் கூட பார்க்க முடியாமல் இருந்தது. ஆனால் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 5,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் 1,000 அரசு பணியிடங்கள் நிரப்பட இருக்கிறது. இலவச மனைப் பட்டா முன்பு 400 சதுர அடி வழங்கப்பட்டது. இப்போது முதன்முதலில் 800 சதுர அடியில் இலவச மனைப் பட்டா வழங்கப்படுகிறது. இதில் அனைவரும் வீடு கட்ட வேண்டியது முக்கியம்.

    பட்டியலின மக்கள் கல்வீடு கட்டும் திட்டத்தில் ரூ.7 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன். விரைவில் அந்த ரூ.7 லட்சம் வழங்கப்படும். எஸ்சி, எஸ்டி மக்களுக்கான ஒவ்வொரு திட்டத்திலும் உதவித்தொகை உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் குறித்து அறிந்துகொள்ள சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. அதற்கான விண்ணப்பங்கள் இந்தாண்டு வரவேற்கப்பட்டிருக்கின்றது. நிறைய இடங்களில் இலவச மனைப்பட்டா கிடைக்கவில்லை என்ற கோரிக்கை இருந்து கொண்டிருக்கிறது. இடம் கையகப்படுத்துவதில் சிரமம் இருக்கிறது.

    இதனால் கிராமப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி, எல்லோருக்கும் வீடு என்ற நிலையை அரசு உருவாக்கும். அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும். தொடர்ந்து இலவச அரிசி வழங்கப்படும். அதனுடன் 2 கிலோ கோதுமை கொடுக்கப்படும். முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது. அவை காலத்தோடு கிடைக்கிறது.

    புதிதாக 10 ஆயிரம் விண்ணப்பங்கள் முதியோர் தொகை பெறுவதற்காக இருக்கின்றது. 10 ஆயிரம் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு அடுத்த மாதமே வழங்கப்படும். குடும்பத் தலைவிக்கு அறிவித்த உதவித் தொகை கொடுக்கப்படும். விடுபட்டவர்களுக்கு குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 விரைவில் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அலுமினியத் தாளின் எந்தப் பக்கம் “வலது”? பளபளப்பான மற்றும் மந்தமான பக்கங்களுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஸ்டீபன் ஸ்பென்சர் பிட்மேனை சந்திக்கவும்: ஆன்லைன் வெறுப்பின் செல்வாக்கின் கீழ் மிசிசிப்பி ஜெப ஆலயத்தை எரித்ததற்காக டீன் பேஸ்பால் வீரர் சிறையில் அடைக்கப்பட்டார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குடியரசு தின ஒத்திகைக்காக ஜனவரி 21 முதல் டெல்லி வான்வெளி மூடல்: 600 விமானங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவின் மிக நீளமான கங்கா விரைவுச்சாலை உ.பி.யில் அடுத்த மாதம் திறக்கப்படும்: பாதை, ஃபாஸ்டேக் கட்டண முறை, வேகமான பயணம் மற்றும் பல | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஈரான் பதட்டங்கள் மற்றும் பிராந்தியத்தில் புதிய வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் 2018 ‘மத்திய கிழக்கு போலீஸ்காரர்’ ட்வீட்டிற்காக டிரம்ப் ட்ரோல் செய்யப்பட்டார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.