Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»புதுச்சேரியில் பதவிக்காக போட்டி நிலவும் சூழலில் பாஜக அமைச்சர், 3 நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமா – பின்னணி என்ன?
    மாநிலம்

    புதுச்சேரியில் பதவிக்காக போட்டி நிலவும் சூழலில் பாஜக அமைச்சர், 3 நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமா – பின்னணி என்ன?

    adminBy adminJune 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புதுச்சேரியில் பதவிக்காக போட்டி நிலவும் சூழலில் பாஜக அமைச்சர், 3 நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமா – பின்னணி என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுச்​சேரி: கட்​சிக்​குள் பதவிக்​காக போட்டி நில​வும் சூழலில், புதுச்​சேரி பாஜக அமைச்​சர் சாய் ஜெ.சர​வணன்​கு​மார் மற்​றும் பாஜக நியமன எம்​எல்​ஏக்​கள் 3 பேர் ராஜி​னாமா செய்​தனர். புதுச்​சேரி​யில் 2021-ல் நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வென்ற என்​.ஆர்​.​காங்​கிரஸ் – பாஜக கூட்​டணி ஆட்சி அமைந்​தது. தேஜக கூட்​ட​ணி​யின் புதுச்​சேரி தலை​வ​ரான ரங்​க​சாமி முதல்​வ​ரா​னார். இரு கட்​சிகளுக்​கும் தலா இரு அமைச்​சர் பதவி​கள் ஒதுக்​கப்​பட்​டன.

    பாஜகவைச் சேர்ந்த செல்​வம் பேர​வைத் தலை​வ​ராக​வும், அமைச்சர்களாக நமச்​சி​வா​யம், சாய் ஜெ.சர​வணன்​கு​மார் ஆகியோரும் பொறுப்​பேற்​றனர். மேலும், பாஜகவைச் சேர்ந்த ராமலிங்​கம், அசோக்​பாபு, வெங்​கடேசனுக்கு நியமன சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் பதவி வழங்​கப்​பட்​டது.

    இந்​நிலை​யில், பாஜக எம்​எல்​ஏக்​கள் ஜான்​கு​மார், கல்​யாணசுந்​தரம், ரிச்​சர்ட் ஆகியோர் அமைச்​சர் அல்​லது வாரி​யத் தலை​வர் பதவி வழங்​கு​மாறு வலி​யுறுத்தி வந்​தனர். வேறு சிலர் நியமன எம்​எல்ஏ பதவி​களை கேட்டு வந்​தனர். பதவி வழங்​காத​தால் கட்​சிக்​குள் அதிருப்தி நில​வியது.

    இந்​நிலை​யில், டெல்​லி​யில் இருந்து வந்த பாஜக மேலிடப் பொறுப்​பாளர் நிர்​மல்​கு​மார் சுரா​னா​விடம், மாநில உள்​துறை அமைச்​சர் நமச்​சி​வா​யம், கட்​சி​யின் மாநிலத் தலை​வர் செல்​வகணபதி எம்​.பி. உள்​ளிட்​டோர் ஆலோ​சனை நடத்​தினர். பின்​னர் அவர்​கள் முதல்​வர் ரங்​க​சாமியை நேற்று சந்​தித்து பேசினர். பின்​னர், சாய் ஜெ.சர​வணன்​கு​மார் முதல்​வரிடம் ராஜி​னாமா கடிதத்தை வழங்​கி​னார்.

    தொடர்ந்​து, ஆளுநர் மாளிகை சென்ற முதல்​வர் ரங்​க​சாமி, துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதனை சந்​தித்​தார். பின்​னர் ரங்​க​சாமி செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “அமைச்​சர் ஜெ.சர​வணன்​கு​மார் அளித்த ராஜி​னாமா கடிதத்தை ஆளுநர் ஏற்​றுக்​கொண்​டார். அவர் ராஜி​னாமா செய்​தது, பாஜக உட்​கட்சி விவ​காரம்” என்​றார். ராஜி​னாமா குறித்து சாய் ஜெ.சர​வணன்​கு​மாரிடம் கேட்​டதற்​கு, “பிரதமரின் உத்​தர​வுப்​படி எனது பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளேன்” என்​றார்.

    புதிய அமைச்சர்… இதற்​கிடை​யில், நியமன எம்​எல்​ஏக்​களான ராமலிங்​கம், வெங்​கடேசன், அசோக்​பாபு ஆகியோ​ரும் பேர​வைத் தலை​வரிடம் ராஜி​னாமா கடிதத்தை அளித்​தனர். அவர்​களுக்​குப் பதிலாக காரைக்​கால் தொழில​திபர் ராஜசேகர், முன்​னாள் எம்​எல்ஏ தீப்​பாய்ந்​தான், மூத்த நிர்​வாகி முதலி​யார்​பேட்டை செல்​வம் ஆகியோர் நியமன எம்​எல்​ஏக்​களாக நியமிக்​கப்​படலாம் என்றும், பாஜக சார்​பில் புதிய அமைச்​ச​ராக எம்​எல்ஏ ஜான்​கு​மார்​ தேர்​வு செய்​யப்​பட உள்​ள​தாக​வும்​ தெரிகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுகவை கண்டித்து 2 மாதம் பாஜக தொடர் ஆர்ப்பாட்டம்

    September 23, 2025
    மாநிலம்

    துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

    September 23, 2025
    மாநிலம்

    காவல், தீயணைப்புத் துறைக்கு புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

    September 23, 2025
    மாநிலம்

    தமிழகம் முழுவதும் 1,231 கிராம சுகாதார செவிலியர்கள் நியமனம்: பணி ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

    September 23, 2025
    மாநிலம்

    70 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க டெண்டர்: தமிழக மின் வாரிய அதிகாரிகள் தகவல்

    September 23, 2025
    மாநிலம்

    காந்தி ஜெயந்தி தினத்தில் கிராம சபைக் கூட்டம்: ஆசிரியர்கள் பங்கேற்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

    September 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திமுகவை கண்டித்து 2 மாதம் பாஜக தொடர் ஆர்ப்பாட்டம்
    • லுகோவோரின் என்றால் என்ன? மன இறுக்கத்திற்கு இது எவ்வாறு உதவுகிறது? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
    • ஜிஎஸ்டி சீர்திருத்தம்: ஆவின் நெய், பனீர் விலை குறைப்பு
    • காவல், தீயணைப்புத் துறைக்கு புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.