Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»புதுச்சேரிக்கு மத்திய அரசு ரூ.129 கோடி சிறப்பு நிதி வழங்கியுள்ளது: முதல்வர் ரங்கசாமி தகவல்
    மாநிலம்

    புதுச்சேரிக்கு மத்திய அரசு ரூ.129 கோடி சிறப்பு நிதி வழங்கியுள்ளது: முதல்வர் ரங்கசாமி தகவல்

    adminBy adminAugust 8, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புதுச்சேரிக்கு மத்திய அரசு ரூ.129 கோடி சிறப்பு நிதி வழங்கியுள்ளது: முதல்வர் ரங்கசாமி தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுச்சேரி: மத்திய அரசு, புதுச்சேரிக்கு ரூ.129 கோடி சிறப்பு நிதி வழங்கியுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கிமூலம் ரூ.4,750 கோடி கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நமது அரசு பொறுப்பேற்ற பிறகு புதுச்சேரியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. குறிப்பாக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

    அதற்கான நிதி சொந்த வருவாய் மூலமாகவும், மத்திய அரசின் உதவியோடும் பல நிலைகளில் பணிகள் பொதுப்பணி மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் நடந்து வருகிறது. மத்திய அரசு மாநிலங்களுக்கான சிறப்பு உதவிக்கான திட்டம் மூலம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ரூ.200 கோடி கொடுக்க அனுமதி அளித்திருக்கின்றது.

    அதில் ரூ.129 கோடி ஒதுக்கி கொடுத்துள்ளது. புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் நிறுவுதல், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்தவும், விரிவான சுற்றுலா ஆய்வை வலுப்படுத்தவும் பேருந்து நிறுத்துமிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 14 பணிகளுக்கு பணியானை வழங்கப்பட்டு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள நிதியை பெறுவதற்கு பணிகளுக்கான திட்டங்கள் அனுப்பப்பட உள்ளது.

    ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் புதுச்சேரி அரசுக்கு ரூ.4,750 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் நடைபெறவுள்ள பணிகள் இரண்டு தவணையில் இந்த நிதி புதுச்சேரி அரசுக்கு கிடைக்கும். 50 ஆண்டுகள் கழித்து இந்த கடனை திருப்பி செலுத்த வேண்டும். வட்டி மிகவும் குறைவு. இந்த நிதியில் வரும் 5 ஆண்டுகளுக்கு பணிகள் நிறைவேற்றப்படும்.

    இதில் வாட்டர் சப்ளைக்கு ரூ.2,030 கோடி, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.1000 கோடி, பாதாள சாக்கடை திட்டம் ரூ.200 கோடி, சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாடு ரூ.1,170 கோடி உள்ளிட்டவை அடங்கும். ரூ.4750 கோடி கடன் பெறும்போது மக்கள் மீது வரிகள் எதுவும் விதிக்கப்படாது. பிஆர்டிசி ஊழியர்கள் ரூ.10 ஆயிரம் ஊதியம் உயர்த்தி கேட்டனர். அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் உயர்த்தி கொடுத்துள்ளோம். பயணப்படி 25 சதவீதம் உயர்த்தி கேட்டனர். முதல்கட்டமாக உயர்த்திக்கொடுக்க கூறியுள்ளோம். இதனால் போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்புவதாக கூறியுள்ளனர்.

    மின்சார பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேட்டரி சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் 25 பேருந்துகள் ஓரிரு மாதங்களில் வந்துவிடும். பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய கேட்டுள்ளனர். முதல்கட்டமாக ஊதிய உயர்வு உள்ளிட்டவை செய்துள்ளோம். அவர்கள் வைக்கும் எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியுமா என்று சொல்ல முடியாது. நிதிநிலைக்கு ஏற்ப செய்யப்படும் என்றார்.

    அப்போது பல வளர்ச்சிப் பணிகள் நடப்பதாக கூறுகிறீர்கள். ஆனால் பொதுப்பணித்துறையில் நிறைய ஊழல் நடப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர், கடந்த 5 ஆண்டுகளில் எதையுமே செய்யமுடியாத அரசில் இருந்தவர்கள், தற்போது வளர்ச்சி பணிகள் நிறைய நடக்கும்போது மக்களிடம் ஏதேனும் குறையை சொல்ல வேண்டும் என்ற நிலையில் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

    யார் வேண்டுமானலும் எது வேண்டுமானாலும் சொல்லாம். அவர்களால் ஒரு அரசு பணியிடத்தைக்கூட நிரப்ப முடியவில்லை. ஆனால் தற்போது 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது எதிர்கட்சியில் இருப்பவர்கள் குறைசொல்கின்றனர். குறைகள் சொல்வது என்பது வழக்கமான ஒன்றுதான் என்று கூறினார்.

    தொடர்ந்து மத்திய அரசு எல்லாவற்றையும் செய்தாலும் கூட மாநில அந்தஸ்து வழங்காமல் உள்ளதே என்ற கேள்விக்கு, மாநில அந்தஸ்து குறித்து வலியுறுத்தப்படும். அது நமது உரிமை. மத்திய அரசிடம் நிதிகேட்டு பெறுவது என்பது வேறு, மாநில அந்தஸ்து பெறுவது என்பது வேறு. மாநில அந்தஸ்து கேட்பதை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அந்த கோரிக்கை எப்போதும் இருக்கும். தேவைப்பட்டால் சிறப்பு சட்டப்பேரவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவோம்.

    கடலூர் மாவட்டத்துக்கு பிரதமர் வரவுள்ளார். கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் சந்திப்பீர்களா என்று கேட்டதற்கு, இருக்கலாம் என்றார். அமைச்சர் ஜான்குமாருக்கு எப்போது இலாகா ஒதுக்கப்படும் என்ற கேள்விக்கு, `எப்போது வேண்டுமானாலும் ஒதுக்கப்படும்’ என்று பதிலளித்தார்.

    தொடர்ந்து முதல்வர் வரும் மழைக்காலத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் மழை தண்ணீர் வடிய பல நாட்கள் ஆனது. ஆனால் இப்போது 2 மணி நேரத்தில் மழைநீர் வடிந்துவிடுகிறது. புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மார்த்தாண்டம் கிணற்று தண்ணீரில் பெட்ரோல், டீசல் கலந்ததால் பரபரப்பு

    August 8, 2025
    மாநிலம்

    அதிமுக ஆட்சி அமைந்த உடன் பட்டாசு தொழிலாளர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும்: இபிஎஸ் உறுதி

    August 8, 2025
    மாநிலம்

    இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் மீனவர்கள் வேலை நிறுத்தம்

    August 8, 2025
    மாநிலம்

    புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் முழுக்க ஏசி மயமானது!

    August 8, 2025
    மாநிலம்

    ‘தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் செய்த பாவம் என்ன?’ – மாநில கல்விக் கொள்கை மீது எல்.முருகன் 11 கேள்விகள்

    August 8, 2025
    மாநிலம்

    சென்னையில் நாளை 15 இடங்களில் குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர் கூட்டம்

    August 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மார்த்தாண்டம் கிணற்று தண்ணீரில் பெட்ரோல், டீசல் கலந்ததால் பரபரப்பு
    • சர்வதேச பூனை நாள் 2025: பாரசீகத்திலிருந்து வங்காள பூனை வரை- உலகில் 5 மிக அழகான மற்றும் பிரபலமான செல்லப்பிராணி பூனை இனங்கள்
    • அதிமுக ஆட்சி அமைந்த உடன் பட்டாசு தொழிலாளர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும்: இபிஎஸ் உறுதி
    • மக்கள் ஏன் குறட்டை விடுகிறார்கள்? அதன் காரணங்கள், அபாயங்கள் மற்றும் சிகிச்சை விருப்பங்களை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து, 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 முக்கிய அம்சங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.