Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பல்லவராயர் கால கல்வெட்டு கண்டெடுப்பு
    மாநிலம்

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பல்லவராயர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

    adminBy adminSeptember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பல்லவராயர் கால கல்வெட்டு கண்டெடுப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுக்கோட்டை: இலுப்​பூர் அரு​கே​யுள்ள மாராயப்​பட்டி கிராமத்​தில், புதுக்​கோட்​டையை ஆட்சி செய்த சிவந்​தெழுந்த பல்​ல​வ​ராயர் எனும் மன்​னர்​, சிவன் கோயிலுக்கு நிலத்தை கொடை​யாக வழங்​கியதை குறிக்​கும் கல்​வெட்டு கண்​டறியப்​பட்​டுள்​ளது.

    புதுக்​கோட்டை மாவட்​டம் இலுப்​பூர் வட்​டம் மாராயப்​பட்​டியைச் சேர்ந்த கல்​லூரி மாணவி தீபி​கா, அங்​குள்ள கண்​டனி குளத்து வயல்​வெளி​யில் ஊன்​றப்​பட்​டுள்ள கற்​பலகை ஒன்​றில் எழுத்​துகள் இருப்​ப​தாக அளித்த தகவலின்​பேரில், பேராசிரியர் முத்​தழகன், பாண்​டிய நாட்டு பண்​பாட்டு மையத்​தைச் சேர்ந்த தொல்​லியல் ஆர்​வலர்​கள் நாராயண​மூர்த்​தி, ராகுல் பிர​சாத் குழு​வினர் அங்கு சென்று ஆய்வு செய்​த​போது, தான கல்​வெட்டு இருந்​தது கண்​டறியப்​பட்டு உள்​ளது.

    தொடர்ந்​து, இந்த கல்​வெட்டு குறித்து முத்​தழகன் கூறியது: மாராயப்​பட்டி கண்​டனி வயலின் நடுவே கால​முனி கோயி​லின் எல்​லை​யாக வணங்​கப்​பட்டு வரும் கல் தூணுக்கு எதிரே ஊன்​றப்​பட்​டிருக்​கும் 3 அடி உயரம், இரண்​டே​கால் அடி அகலம் கொண்ட கற்​பல​கை​யின் ஒரு​புறத்​தில், ஆனந்த வருடம் ஆவணி 6-ம் நாள் ஆரியூர் அழகிய சொக்​க​நாத சுவாமிக்கு சிவந்​தெழுந்த பல்​ல​வ​ராயர், இந்த கண்​டனி வயலில் உள்ள நிலங்​களை சர்வ மானிய​மாக வழங்​கிய செய்தி எழுதப்​பட்​டுள்​ளது. மேலும், இந்த தானத்​துக்கு தீங்கு நினைப்​பவர்​கள் சிவதுரோகி​களாக கருதப்​படு​வர் எனவும் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

    கல்​வெட்​டில் குறிப்​பிடப்​பட்​டுள்ள சிவந்​தெழுந்த பல்​ல​வ​ராயர், கி.பி. 17-ம் நூற்​றாண்​டில் புதுக்​கோட்டை மாவட்​டத்​தில் வெள்​ளாற்​றுக்கு வடக்கே உள்ள பகு​தி​களை ஆட்சி செய்த பல்​ல​வ​ராயர் மரபின் கடைசி அரசர் ஆவார். சிவபக்​த​ரான இவர், இந்த நிலக் கொடை போலவே குடுமி​யான்​மலை, திருக்​கோகர்​ணம் கோயில்​களுக்​கும் பல்​வேறு தானங்​களை வழங்​கி​யுள்​ளார்.

    சேதுபதி அரசருடன் பிணக்கு: சிவந்​தெழுந்த பல்​ல​வ​ராயர் உலா’ எனும் நூல் இவர் மீது பாடப்​பெற்ற உலா நூலாகும். 96 வகை சிற்​றிலக்​கி​யங்​கள் இவர் மீது பாடப்​பெற்றன என்று இந்​நூல் கூறுகிறது. ராம​நாத​புரம் சேதுபதி அரசருடன் ஏற்​பட்ட பிணக்கு காரண​மாக இவர் கண்​டதே​வி​யில் கொல்​லப்​பட்​டார். அதன்​பிறகே, தொண்​டை​மான் அரசர்​களுக்கு புதுக்​கோட்​டை​யின் ஆட்​சிப் பொறுப்பு வழங்​கப்​பட்​டது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

    மேலும், கல்​வெட்டு குறிக்​கும் அழகிய சொக்​க​நாத சுவாமி என்​பது அரு​கில் உள்ள ஆரியூர் சிவன் கோயி​லின் இறைவன் பெய​ராகும். இந்த கல்​வெட்​டில் கூறப்​படும் கண்​டனி வயலில் விளை​யும் நெல்​லில் ஒரு குறிப்​பிட்ட பங்கை கோயிலுக்கு இன்​றள​வும் இப்​பகுதி விவ​சா​யிகள் வழங்கி வரு​வ​தாக மாராயப்​பட்டி மக்​கள் தெரிவிக்​கின்​றனர்.

    இந்த கல்​வெட்டு பலகை​யின் மற்​றொரு பக்​கத்​தில் சூரியன், சந்​திரன் மற்​றும் திரிசூலத்​தின் கோட்​டுரு​வங்​கள் செதுக்​கப்​பட்​டுள்​ளன. இவை சிவன் கோயிலுக்கு வழங்​கப்​படும் தானத்​தைக் குறிக்​கும். மேலும், இந்த கல்​வெட்டு பலகைக்கு எதிரே ஊன்​றப்​பட்​டுள்ள கல் தூணில் திரிசூலம் செதுக்​கப்​பட்​டுள்​ளது. இந்த தூண், கல்​வெட்​டில் தானமளிக்​கப்​பட்​ட​தாக குறிப்​பிடப்​படும் நிலத்​தின் எல்​லை​யைக் குறிக்​கும் சூலக்​கல் ஆகும்.

    கி.பி. 1674-ல்.. கண்​டனி குளத்​தின் கரை​யில் வழி​பாட்​டில் உள்ள கால​முனி கோயி​லின் எல்​லை​யாக இந்த சூலக்​கல்லை உள்​ளூர் மக்​கள் வணங்கி வரு​கின்​றனர். இந்த கல்​வெட்டு கி.பி. 1674-ல் எழுதப்​பட்​டிருக்​கலாம் எனக் கருதப்​படு​கிறது. மேலும், புதுக்​கோட்டை வரலாற்​றில் முக்​கி​யத்​து​வம் வாய்ந்த கல்​வெட்​டு​களில்​ இது​வும்​ ஒன்​றாகும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அரசியலில் விஜய் மிகப்பெரிய உந்து சக்தியாக இருப்பார்: துரை வைகோ எம்.பி பேட்டி

    September 7, 2025
    மாநிலம்

    “நயினாரால் தான் வெளியேறினேன்; எடப்பாடியை ஏற்பதற்கு வாய்ப்பே இல்லை” – டிடிவி தினகரன்

    September 7, 2025
    மாநிலம்

    தினகரன், அதிமுக பிரச்சினை குறித்து கருத்து சொல்ல எனக்கு தகுதி இல்லை: தமிழிசை விளக்கம்

    September 7, 2025
    மாநிலம்

    அதிமுகவில் மட்டுமல்ல, கூட்டணியிலும் ‘பவர்’ – ‘அசால்ட்’ எடப்பாடியின் அசாதாரண நகர்வுகள்!

    September 7, 2025
    மாநிலம்

    பொள்ளாச்சி மயானத்தில் தயார் நிலையில் இருந்த 20+ புதைகுழிகளை கண்டு மக்கள் அதிர்ச்சி!

    September 7, 2025
    மாநிலம்

    செங்கோட்டையனுக்கு ஆதரவாக கோபியில் 2-வது நாளாக தொடரும் அதிமுகவினரின் ‘மாஸ்’ ராஜினாமா

    September 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அரசியலில் விஜய் மிகப்பெரிய உந்து சக்தியாக இருப்பார்: துரை வைகோ எம்.பி பேட்டி
    • மொத்த சந்திர கிரகணம் 2025 காரணமாக வைஷ்னோ தேவி கோயில் தர்ஷான் நேரம் மாற்றப்பட்டது; புதிய கால அட்டவணை வழங்கப்பட்டது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “நயினாரால் தான் வெளியேறினேன்; எடப்பாடியை ஏற்பதற்கு வாய்ப்பே இல்லை” – டிடிவி தினகரன்
    • தினகரன், அதிமுக பிரச்சினை குறித்து கருத்து சொல்ல எனக்கு தகுதி இல்லை: தமிழிசை விளக்கம்
    • ‘பாஜக பின்னணியில் தேர்தல் ஆணையம்’ – வாக்கு திருட்டு விவகாரத்தில் கார்கே விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.