Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»புதிய டிஜிபியை தேர்வு செய்வதில் இழுபறி: தேர்வு பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பாததால் தொடரும் குழப்பம்
    மாநிலம்

    புதிய டிஜிபியை தேர்வு செய்வதில் இழுபறி: தேர்வு பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பாததால் தொடரும் குழப்பம்

    adminBy adminAugust 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புதிய டிஜிபியை தேர்வு செய்வதில் இழுபறி: தேர்வு பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பாததால் தொடரும் குழப்பம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழக காவல் துறை​யின் தலைமை டிஜிபி​யான சங்​கர் ஜிவால் ஆக. 31-ம் தேதி​யுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்​து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்​ளது.

    சீனி​யாரிட்டி அடிப்​படை​யில் 1990-ல் தேர்​வாகி தற்​போது டிஜிபிக்களாக உள்ள தீயணைப்​புத் துறை இயக்​குநர் சீமா அகர்​வால், 1992-ல் தேர்​வான ஆவின் விஜிலன்ஸ் டிஜிபி ராஜீவ்​கு​மார், அதே ஆண்​டில் தேர்​வான காவல் உயர் பயிற்​சியக டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் முறையே முதல் 3 இடங்​களில் உள்​ளனர். அடுத்தடுத்த இடங்​களில் டிஜிபிக்​களான அபய்​கு​மார் சிங், வன்​னியபெரு​மாள், மகேஷ்கு​மார் அகர்​வால், வெங்​கட்​ராமன், வினித்​தேவ் வான்​கடே உள்​ளனர்.

    வழக்​க​மாக புதிய சட்​டம்- ஒழுங்கு டிஜிபி பணி​யிடம் காலி​யாக உள்ள 3 மாதங்​களுக்கு முன்​னரே தமிழக அரசு அடுத்த தகு​தி​யான 8 பேரின் பட்​டியலை மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​துக்கு அனுப்​பிவைக்​கும். அதில், எந்த குற்​றச்​சாட்​டு​களுக்​கும் உள்​ளா​காத சீனி​யாரிட்டி மற்​றும் தகு​தி​யின் அடிப்​படை​யில் முதல் 3 இடங்​களில் உள்​ளோரின் பட்​டியலை மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் தமிழக அரசுக்கு மீண்​டும் அனுப்பி வைக்​கும். அதில், ஒரு​வரை தேர்வு செய்து தமிழக அரசு புதிய சட்​டம் ஒழுங்கு டிஜிபி​யாக நியமிக்​கும். இது​தான் நடை​முறை.

    இந்​நிலை​யில், ஆக. 31-ம் தேதி​யுடன் டிஜிபி சங்​கர் ஜிவால் பணி ஓய்வு பெற உள்ள நிலை​யில், புதிய டிஜிபியை தேர்வு செய்​வதற்​கான 8 பேர் பட்​டியலை தமிழக அரசு இது​வரை மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​துக்கு அனுப்பி வைக்​க​வில்லை என கூறப்​படு​கிறது. தற்​போதைய டிஜிபிக்கு பணிநீட்​டிப்பு வழங்​கப்​படலாம் என்​றும் கூறப்​பட்​டது. ஆனால், அந்த நடை​முறை உச்ச நீதி​மன்ற தீர்ப்​புக்கு எதி​ரானது என சுட்​டிக்​காட்​டப்​படு​கிறது.

    தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் இன்​னும் 8 அல்​லது 9 மாதங்​களில் நடை​பெற உள்​ளது. எனவே புதிய டிஜிபி, தங்​களுக்கு சாதக​மானவ​ராக இருக்க வேண்​டும் என தமிழக அரசு விரும்​புவ​தாக​வும், அதனாலேயே புதிய டிஜிபி தொடர்​பான பட்​டியலை மத்திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​துக்கு அனுப்பி வைக்​காமல் காலம் தாழ்த்​து​வ​தாக​வும் குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.

    இப்​போது கூடு​தல் டிஜிபிக்​களாக உள்ள டேவிட்​சன் தேவாசீர்​வாதம், சந்​தீப் மித்​தல், பால நாகதேவி உள்​ளிட்​டோருக்கு வரும் ஜனவரி மாதம் முதல் தேதி​யில் டிஜிபி​யாக பதவி உயர்வு வழங்​கப்பட உள்​ளது.

    எனவே, இவர்​களை​யும் சேர்த்து டிஜிபி பட்​டியலில் உள்ள யாரை​யா​வது ஒரு​வரை பொறுப்பு டிஜிபி​யாகவோ அல்​லது சிறப்பு டிஜிபியாகவோ சில மாதங்​கள் நியமிக்​கலாம். அதன் பிறகு தேர்​தல் நடை​முறை அமலுக்கு வந்த பின்​னர் தேர்​தல் ஆணை​யம் யாரை​யா​வது ஒரு​வரை சட்​டம் ஒழுங்கு டிஜிபி​யாக நியமிக்​கும் வரை அமைதி காக்​கலாம் என தமிழக அரசு நினைப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது.

    இதுஒரு​புறம் இருக்க, டிஜிபி சங்​கர் ஜிவால் ஓய்​வுக்​குபிறகு, பொறுப்பு டிஜிபி நியமிக்​க​வும் சங்​கர் ஜிவாலின் பணிக்​காலத்தை நீட்டிப்பு செய்​ய​வும் இடைக்​கால தடை விதித்​தும் டிஜிபி பதவிக்கு தகு​தி​யான ஐபிஎஸ் அதி​காரி​களின் பட்​டியலை தமிழக அரசு உடனடி​யாக தயார் செய்ய உத்​தர​விட​வும் கோரியும் மதுரை உயர் நீதி​மன்ற கிளை​யில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. மேலும், தமிழகத்​துக்கு புதிய டிஜிபி​யா, பொறுப்பு டிஜிபியா அல்​லது சிறப்​பு டிஜிபி​யா என போலீ​ஸார்​ குழப்​ப நிலை​யில்​ உள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ரூ.20,000-க்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம் நடக்கும் சொத்து பதிவு குறித்து வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயம்

    August 5, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்கள் தற்போதுள்ள பெயர்களிலேயே தொடர அனுமதி கோரி தமிழக அரசு மனு

    August 5, 2025
    மாநிலம்

    ஓடிபி பெற்று திமுக நடத்திய உறுப்பினர் சேர்க்கைக்கு விதித்த தடையை நீக்கக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

    August 5, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது: நீதிபதி வேதனை 

    August 5, 2025
    மாநிலம்

    திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்காமல் அலைக்கழிக்கிறது: இபிஎஸ்

    August 5, 2025
    மாநிலம்

    ‘விசுவநாதனும் சீனிவாசனும் வழி விடமாட்டேன்றாங்க!’ – புலம்பும் திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்

    August 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆந்திரா முழுவதும் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் – ‘ஸ்ரீ சக்தி’ திட்டம் ஆகஸ்ட் 15-ம் தேதி தொடக்கம்
    • ராஞ்ஜனா ‘ஏஐ’ கிளைமாக்ஸ்: ஆன்மாவைச் சிதைத்துவிட்டது – தனுஷ் கண்டனம்
    • ரூ.20,000-க்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம் நடக்கும் சொத்து பதிவு குறித்து வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயம்
    • தெய்வீக ஆற்றலுடன் எதிரொலிக்கும் 5 அறியப்படாத சக்தி பீத்தாஸ்
    • ராகுல் தலைமையில் 7-ம் தேதி இண்டியா கூட்டணி கூட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.