Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“பிஹாரில் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது மிகப் பெரிய மோசடி” – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
    மாநிலம்

    “பிஹாரில் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது மிகப் பெரிய மோசடி” – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    adminBy adminJuly 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “பிஹாரில் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது மிகப் பெரிய மோசடி” – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருப்பத்தூர்: பிஹாரில் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது மிகப் பெரிய மோசடி என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரத்தின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.63 லட்சத்தில் டயாலிசிஸ் மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்பி, மாங்குடி எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கார்த்தி சிதம்பரம் எம்பி, பேசுகையில், “ஐந்து சதவீத மக்கள் தொகை கொண்ட தமிழகம், நாட்டுக்கு 12 சதவீத மருத்துவர்களை உருவாக்கி வருகிறோம். இது தொடர வேண்டும் என்றால் தமிழகம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் தமிழர்களுக்கு இருக்க வேண்டும்” என்றார்.

    பின்னர் ப.சிதம்பரம் பேசியவது: “இருபது ஆண்டுக்களுக்கு முன், இந்த அளவுக்கு சிறுநீரகம் பாதிப்பட்டோர் இல்லை. ஆனால், தற்போது 100 பேரில் ஒருவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதற்கு இப்பகுதியில் கிடைக்கும் தண்ணீர்தான் காரணமா என்று தெரியவில்லை.

    அரசு கட்டிடங்கள் குறைந்தது 50 ஆண்டுகள் நிலைத்திருக்கும் வகையில் தரமாக கட்ட வேண்டும். புதிதாக கட்டப்பட்ட பாலங்கள், கட்டிடங்கள் 4 நாட்களில் இடிந்து விழுகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கல்லணை, தாஜ்மஹால் இன்றும் நிலைத்து நிற்கின்றன. கட்டிடக் கலை மீது பழுது இல்லை, கட்டிட கலைஞர்கள் மீதுதான் பழுது உள்ளது. கட்டிடக் கலை விதிப்படி ஒப்பந்ததாரர் கட்டிடத்தை கட்டினால் நிச்சயம் 50 ஆண்டுகள் கட்டிடம் நிலைத்து நிற்கும்” என்று பேசினர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறும்போது, “மகாராஷ்டிரா மாநிலத்தில் போலி வாக்காளர்களை சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் பிஹாரில் செய்ய முடியாமல், வாக்காளர்களை நீக்கியுள்ளனர். தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன், வாக்காளர் பட்டியலை திருத்தியது தவறு. 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கியது மிகப் பெரிய மோசடி.

    மேலும், அம்மாநில நிரந்தர குடியுரிமையுள்ள பலர் வெவ்வேறு மாநிலங்களில் பணி செய்கின்றனர். அவர்கள் தேர்தலுக்கு வாக்களிக்க பிஹாருக்கு செல்ல மாட்டார்களா? மக்களவைத் தேர்தல் முடிந்த 12 மாதத்துய்க்குள் 22 லட்சம் பேர் இறந்துவிட்டார்களா? இந்த வாக்காளர் பட்டியலை வைத்துதானே மோடி பிரதமரானார்.

    போலி வாக்குப்பதிவை தடுக்க வேறு வழிகள் உள்ளன. தேர்தல் ஆணையம் புல்டோசர் வைத்து வாக்காளர் பட்டியலை மாற்றம் செய்கிறது. அதற்குத்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். தமிழக முதல்வரும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு நன்றி. தேர்தல் ஆணையத்துக்கு மட்டும் புத்தி இருக்கு. எதிர்ப்பு தெரிவிப்போருக்கு புத்தி பேதலிச்சு போச்சா?” என்று ஆவேசமாக கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மின்வாரிய ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு

    September 3, 2025
    மாநிலம்

    386 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது: துணை முதல்வர் உதயநிதி வழங்குகிறார்

    September 3, 2025
    மாநிலம்

    தொழில்நுட்பக் கோளாறு: திருச்சி – சார்ஜா ஏர் இந்தியா விமானம் ரத்து; பயணிகள் அவதி

    September 3, 2025
    மாநிலம்

    ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதை விரிவாக்கம்: திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பே பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம்

    September 3, 2025
    மாநிலம்

    மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு: அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

    September 3, 2025
    மாநிலம்

    முதன்முறையாக கச்சத்தீவுக்கு பயணம்: இலங்கை அதிபர் பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பெண்களில் மாரடைப்பு அறிகுறிகள்: அசாதாரண அறிகுறிகள் பெண்கள் பெரும்பாலும் அந்த தாமத நோயறிதல் மற்றும் சிகிச்சையை இழக்கிறார்கள்
    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகுப்பு: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்
    • ’கட்டா குஸ்தி 2’ படப்பூஜையுடன் பணிகள் துவக்கம்
    • மின்வாரிய ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு
    • சிறந்த ஆக்ஸிஜன் ஓட்டத்திற்கு நடக்கும்போது முயற்சிக்க 5 சுவாச நுட்பங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.