Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பிரிவு உபசார விழாவில் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தலைமைச் செயலர் புகழாரம்
    மாநிலம்

    பிரிவு உபசார விழாவில் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தலைமைச் செயலர் புகழாரம்

    adminBy adminSeptember 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிரிவு உபசார விழாவில் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தலைமைச் செயலர் புகழாரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் காவல் துறை சிறப்பாக பணியாற்றியதால் தமிழகத்தில் பெரிய அளவில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை என்று தலைமைச் செயலர் முருகானந்தம் தெரிவித்தார்.

    தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது.

    இதற்கு தலைமை வகித்து தலைமைச் செயலர் நா.முருகானந்தம் பேசியதாவது: முதல்வரின் சீரிய தலைமையில் தொழில் துறை மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் தமிழகம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண், நான் முதல்வன் போன்ற முன்னோடி திட்டங்களால் மாணவர் சேர்க்கை விகிதம் 48-ல் இருந்து 75 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரு மாநிலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட, சட்டம் – ஒழுங்கு சீராக இருக்க வேண்டும்.

    தமிழகத்தைப் பொருத்தவரை, டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் காவல் துறை சிறப்பாக பணியாற்றியதால், மற்ற மாநிலங்கள்போல, பெரிய அளவில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை. இக்கட்டான சூழல்களை சமயோசிதமாக கையாள, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரும் உரிய ஆலோசனைகளை வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

    அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா பேசும்போது, ‘‘காவல் துறையில் புலன் விசாரணைக்கு என தனிப் பிரிவு உருவாக்க கோரியதை ஏற்று, டிஜிபி சங்கர் ஜிவால் நிறைவேற்றினார். எதிர்காலத்தில் இத்திட்டம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்’’ என்றார்.

    என்றென்றும் காவல் துறைக்கு உதவியாக, உறுதுணையாக இருந்ததாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்துக்கு சங்கர் ஜிவால் தனது ஏற்புரையில் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில், டிஜிபி (நிர்வாகம்) ஜி.வெங்கட்ராமன், அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் கோகுல கிருஷ்ணன், பிரதாப், ராஜ் திலக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஒரே மேடையில் இபிஎஸ் – அண்ணாமலை பரஸ்பரம் நெகிழ்ச்சி!

    September 1, 2025
    மாநிலம்

    திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் 2-வது நாளாக உண்ணாவிரதம்

    September 1, 2025
    மாநிலம்

    “நம்பகத்தன்மையற்ற பழனிசாமியை நம்பி எப்படி கூட்டணிக்குச் செல்ல முடியும்?” – இரா.முத்தரசன் நேர்காணல்

    September 1, 2025
    மாநிலம்

    அரசு ஊழியர்களை ஓய்வுபெறும் நாளில் பணிநீக்கம் செய்யக்கூடாது

    September 1, 2025
    மாநிலம்

    சென்னையில் முதல்முறையாக நிகழ்ந்த மேக வெடிப்பு: பல பகுதிகளில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது

    September 1, 2025
    மாநிலம்

    பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் பதவியேற்றார்: கோப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார் சங்கர் ஜிவால்

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒரே மேடையில் இபிஎஸ் – அண்ணாமலை பரஸ்பரம் நெகிழ்ச்சி!
    • திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் 2-வது நாளாக உண்ணாவிரதம்
    • சுமார் 4 கிலோ கத்தரிக்காயை உற்பத்தி செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்க விவசாயி!
    • “நம்பகத்தன்மையற்ற பழனிசாமியை நம்பி எப்படி கூட்டணிக்குச் செல்ல முடியும்?” – இரா.முத்தரசன் நேர்காணல்
    • இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி: பெப்சி, கோக-கோலா, கேஎப்சியை புறக்கணிக்கும் இந்தியர்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.