Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பிரிந்து சென்றவர்களை மீண்டும் கூட்டணியில் இணைக்க திட்டம்: ஓபிஎஸ், தினகரனை டெல்லிக்கு அழைக்கும் பாஜக
    மாநிலம்

    பிரிந்து சென்றவர்களை மீண்டும் கூட்டணியில் இணைக்க திட்டம்: ஓபிஎஸ், தினகரனை டெல்லிக்கு அழைக்கும் பாஜக

    adminBy adminSeptember 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிரிந்து சென்றவர்களை மீண்டும் கூட்டணியில் இணைக்க திட்டம்: ஓபிஎஸ், தினகரனை டெல்லிக்கு அழைக்கும் பாஜக
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை ஒருங்​கிணைத்​தால் தான் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் கரை சேர முடியும் என கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு 10 நாட்​கள் கெடு விதித்து செங்​கோட்​டையன் போர் கொடி தூக்​கிய நிலை​யில், செங்​கோட்​டையன் மற்​றும் அவரது ஆதர​வாளர்​களின் கட்சி பதவி​கள் பறிக்​கப்​பட்​டன. இதைத்​தொடர்ந்​து, ஹரித்​வார் செல்​வ​தாக கூறி​விட்டு சென்ற செங்​கோட்​டையன், டெல்​லி​யில் அமித் ஷா மற்​றும் நிர்​மலா சீதா​ரமனை சந்​தித்து பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளார்.

    இந்த சந்​திப்​பின் போது, 2026 தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சியை பிடிக்க வேண்​டுமென்​றால், ஒருங்​கிணைந்த அதிமுக​வுடன் தேர்​தலை சந்​திக்க வேண்​டும் என அமித் ஷாவிடம் செங்​கோட்​டையன் வலி​யுறுத்​தி​ய​தாக தெரி​கிறது.

    அது​மட்​டுமில்​லாமல், ஓபிஎஸ், தினகரனை டெல்​லிக்கு அழைத்து பேச்​சு​வார்த்தை நடத்த வேண்​டும் என அமித் ஷாவிடம் செங்​கோட்​டையன் கூறிய​தாக​வும் தெரி​கிறது. இதையடுத்​து, இரு​வரை​யும் டெல்​லிக்கு அழைத்து பேச பாஜக மேலிடம் திட்​ட​மிட்டு வரு​வ​தாக​வும், இதற்​கான ஏற்​பாடு​கள் நடை​பெற்று வரு​வ​தாக​வும் பாஜக வட்​டாரத்​தில் கூறப்​படு​கிறது.

    அதேசம​யம், பிரிந்​தவர்​கள் பிரிந்​தவர்​கள்​தான். அவர்​களை மீண்​டும் அதி​முக​வில் இணைப்​ப​தற்​கான வாய்ப்பு துளி​யும் இல்லை என கறார் காட்டி வரும் பழனி​சாமி​யிட​மும் அதி​முக ஒருங்​கிணைப்பு குறித்து சமா​தான பேச்​சு​வார்த்தை நடத்​த​வும் அதற்கு முன்பாக, பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரனிட​மும் ஆலோ​சனை நடத்​த​வும் பாஜக மேலிடம் திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

    இதற்​காக அவர் இன்று (11-ம் தேதி) டெல்லி செல்​கிறார். அங்கு அமித் ஷா, ஜெ.பி.நட்​டா, தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ் உள்​ளிட்​டோரை சந்​திக்​கிறார். அப்​போது, அதி​முக ஒருங்​கிணைப்பு குறித்து அவர் வலி​யுறுத்த உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

    இந்​தச் சூழலில் நயி​னார் நாகேந்​திரனிடம் ஆலோ​சித்த பிறகு ஒபிஎஸ், தினகரனை டெல்​லிக்கு அழைத்து சமா​தான பேச்​சு​வார்த்தையை நடத்த திட்​ட​மிட்​டிருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இதன்​மூலம் கூட்​ட​ணி​யில் ஏற்​பட்​டுள்ள சலசலப்​பு​களுக்கு முற்​றுப்​புள்ளி வைத்​து, பிரிந்து சென்​றவர்​களை ஒருங்​கிணைத்​து, பலமான கூட்​டணி அமைத்​து தேர்​தலை சந்​திக்​க பாஜக ஆயத்த​மாக வருவது தெரிகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விஜயகாந்த் சகோதரி காலமானார்: பிரேமலதா, சுதீஷ் அஞ்சலி

    September 11, 2025
    மாநிலம்

    நாமக்கல் சிறுநீரக திருட்டு சம்பவத்தால் உறுப்பு மாற்று அறுவைசி கிச்சைக்கு அனுமதி வழங்குவதில் தாமதம்

    September 11, 2025
    மாநிலம்

    இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை ஒப்புதல்

    September 11, 2025
    மாநிலம்

    முதல்வர் தலைமையில் காவலர் நாள் உறுதி ஏற்பு: டிஜிபி, ஆணையர் உள்பட 3 ஆயிரம் போலீஸார் பங்கேற்பு

    September 11, 2025
    மாநிலம்

    தெற்கு ரயில்வேயில் முதல் அம்ரித் பாரத் விரைவு ரயில்: ஈரோடு – பிஹார் ஜோக்பனி இடையே இயக்க ஒப்புதல்

    September 11, 2025
    மாநிலம்

    தமிழக அஞ்சல் துறை சார்பில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம்: செப்.22-க்குள் கருத்துகளை அனுப்பலாம்

    September 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குடியுரிமைக்கு முன் வாக்காளர் அட்டை பெற்ற சோனியா மீதான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
    • மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி: கொரியாவை வீழ்த்தியது இந்திய அணி
    • மீண்டும் வெளியாகிறது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’!
    • விஜயகாந்த் சகோதரி காலமானார்: பிரேமலதா, சுதீஷ் அஞ்சலி
    • நாசாவின் நுண்ணறிவு நில அதிர்வு அலைகளைப் பயன்படுத்தி புதிய ஆராய்ச்சி செவ்வாய் கிரகத்திற்கு ஒரு திட உள் மையத்தை வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.