Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும், மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை” – புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்
    மாநிலம்

    “பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும், மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை” – புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்

    adminBy adminMay 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும், மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை” – புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுச்சேரி: “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை,” என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவத்தை பாராட்டி, புதுச்சேரியில் தேசியக் கொடி ஏந்தி பாஜக சார்பில் வெற்றி பேரணி இன்று நடைபெற்றது. புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணிக்கு பாஜக மாநில தலைவர் செல்வகணபதி தலைமை தாங்கினார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், அசோக்பாபு மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பேரணியில் அனைவரும் கையில் தேசியக் கொடி ஏந்தியும், 70 அடி நீளம் கொண்ட தேசியக் கொடியுடனும் பங்கேற்றனர். பேரணியானது அண்ணா சாலை வழியாக சென்று அஜந்தா சிக்னல் அருகே முடிவடைந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியது: “காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா சென்ற அப்பாவி பொதுமக்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். தீவிரவாதிகளின் செயலை கண்டிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி ‘ஆபரேஷன் சிந்தூர்’ திட்டத்தை துவக்கி, இந்தியா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி, தீவிரவாத அமைப்புகளை அடியோடு அழித்தார்.

    அதுமட்டுமின்றி யார், யாரெல்லாம் அந்த அமைப்புகளுக்கு ஆதரவாக இருந்து அந்தக் கொடூரமான செயலை செய்தார்களோ அவர்களை கொன்று அழிக்கின்ற மகத்தான பணியை இந்திய ராணுவ வீரர்கள் மிகச் சிறப்பான முறையில் செய்து முடித்திருக்கின்றார்கள். அவர்களுடைய அந்த சிறப்பை போற்றுகின்ற வகையில் புதுச்சேரி மாநில பாஜக சார்பில் பேரணி நடைபெற்றுள்ளது.

    தீவிரவாதத்துக்கு எதிராக பிரதமரின் அத்தனை நடவடிக்கைகளுக்குப் பின்னால் நாம் நிற்கின்றோம். ராணுவ முப்படை தளபதிகளுக்கும், வீரர்களுக்கும் நமது இந்திய நாடே பின்னால் நிற்கின்றது. அதில் புதுச்சேரி மாநிலமும் சேர்ந்து ஆதரவு, பாராட்டுக்களை தெரிவிக்கின்றது என்ற உள்ளுணர்வோடு உணர்ச்சி பொங்க இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளோம்.

    எப்போதும் பிரதமர் எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை. பிற நாடுகளுடன் நட்போடு இருப்பதைத்தான் அவர் விரும்புவார். இரு தினங்களுக்கு முன்பு கூட பிரதமர் நேரடியாக பஞ்சாப் விமான படை தளத்துக்கு சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். எந்தவித தாக்குதலுக்கும், அணு ஆயுதங்களுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். எந்தவித தாக்குதலையும் எதிர்கொள்ளவதற்கும், பதிலடி கொடுக்கவும் தயாராக இருக்கின்றோம் என்று சவால் விடுத்திருக்கின்றார்.

    அத்தகைய நெஞ்சுரமிக்க தலைவரான பிரதமர் நரேந்திர மோடி எந்தவொரு நாட்டுக்கும் பயந்துபோவதோ, அடிபணிந்துபோவதோ அவரது வாழ்க்கை வரலாற்றிலேயே கிடையாது. புதுச்சேரியைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கான அனைத்து சலுகைகளும் துறையின் மூலம் வழங்கிக் கொண்டிக்கின்றோம். துணை ராணுவத்தினருக்கான அத்தனை சலுகைகளும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

    September 14, 2025
    மாநிலம்

    இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும்: பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் 

    September 14, 2025
    மாநிலம்

    சிம்பொனிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தேன்: தமிழக அரசு பாராட்டு விழாவில் இளையராஜா உருக்கம்

    September 14, 2025
    மாநிலம்

    கருவின் பாலினத்தை தெரிவித்தால் நடவடிக்கை: அரசு மருத்துவர்களுக்கு மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

    September 14, 2025
    மாநிலம்

    பாஜகவை விமர்சிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை: நயினார் நாகேந்திரன் கருத்து

    September 14, 2025
    மாநிலம்

    வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக எந்த போராட்டத்துக்கும் தயார்: பாமக தலைவர் அன்புமணி உறுதி

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 50% வரியால் இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல்
    • ​​​​​​​பிஹாரில் ரூ.27,000 கோடியில் 2,400 மெகாவாட் மின் உற்பத்தி: அதானி பவர் நிறுவனம் தகவல்
    • மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 ஆண்டு சிறைக்கு பின் விடுதலையானவர் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு மனு
    • ​​​​​​​மியான்மரில் 2 பள்ளிகள் மீது தாக்குதல்: மாணவர்கள் 19 பேர் உயிரிழப்பு; ராணுவம் மீது கிளர்ச்சியாளர்கள் புகார்
    • துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு என் மகள் அநாகரிகமாக எதுவும் பேசவில்லை: திஷா பதானி தந்தை விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.