சென்னை: பிரதமர் மோடி வரும் ஆக. 26-ம் தேதி மீண்டும் தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி கடந்த 26-ம் தேதி 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார். தூத்துக்குடியில் 26-ம் தேதி ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, அன்றிரவு விமானம் மூலம் திருச்சி சென்ற பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சந்தித்து பேசினார். பின்னர், 27-ம் தேதி கங்கை கொண்ட சோழபுரம் சென்றார். பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் ராஜராஜ சோழன் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், ஆக.26-ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோயில், திருவண்ணாமலை கோயில்களில் தரிசனம் செய்ய இருப்பதாகவும், தரிசனத்தை முடித்துவிட்டு, சிதம்பரத்தில் மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.