Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பாரத் பந்த்: தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் – அமைச்சர் சிவசங்கர் தகவல்
    மாநிலம்

    பாரத் பந்த்: தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் – அமைச்சர் சிவசங்கர் தகவல்

    adminBy adminJuly 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாரத் பந்த்: தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் – அமைச்சர் சிவசங்கர் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ​நாடு​தழு​விய வகை​யில் இன்று நடை​பெறும் பொது வேலை நிறுத்​தத்​துக்கு தமிழகத்​தில் பல்​வேறு தொழிற்​சங்​கங்​கள் ஆதரவு தெரி​வித்​துள்​ள​தால், அரசு சேவை​கள், வங்​கிப்​ பணி​கள் முடங்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், தமிழகத்​தில் பேருந்​துகள் வழக்​கம்போல் இயங்​கும் என அமைச்​சர் சிவசங்​கர் தெரி​வித்​துள்​ளார்.

    பொதுத்​துறை நிறு​வனங்​களை தனி​யாருக்கு தாரை வார்க்​கக்​கூ​டாது, தொழிலா​ளர்​களுக்கு எதி​ரான 4 சட்​டங்​களை திரும்​பப்​பெற வேண்​டும், பொதுத்​துறை நிறு​வனங்​களில் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும், மத்​திய- மாநில அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை மீண்​டும் கொண்​டுவர வேண்​டும் என்​பது உள்​ளிட்ட 17 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தேசிய அளவில் இன்று பொது வேலைநிறுத்​தப் போராட்​டத்​துக்கு மத்​திய தொழிற்​சங்​கங்​கள் அழைப்பு விடுத்​துள்​ளன.

    தமிழகத்​தில் ஆளும் திமுக​வின் தொழிற்​சங்​க​மான தொமுச, சிஐடி​யு, ஏஐடி​யுசி உள்​ளிட்ட தொழிற்​சங்​கங்​களும் இப்​போராட்​டத்​துக்கு ஆதரவு தெரி​வித்​துள்​ளன. இதுத​விர ஜாக்டோ – ஜியோ, வரு​வாய் சங்​கங்​களின் கூட்​டமைப்பு மற்​றும் மாநில மையம், அகில இந்​திய வங்கி ஊழியர்​கள் சங்​கம் உள்​ளிட்ட பல்​வேறு அமைப்​பு​களும் இந்த போராட்​டத்​தில் இணை​கின்​றன. இதனால் அரசு சேவை​கள், வங்கி சேவை​கள், பொது போக்​கு​வரத்து சேவை​களில் பாதிப்பு ஏற்​படும் சூழல் உரு​வாகி​யுள்​ளது.

    ‘நோ ஒர்க் நோ பே’- இந்​நிலை​யில், இன்று வேலை நிறுத்​தத்​தில் ஈடு​பட்​டால், ‘நோ ஒர்க் நோ பே’ என்ற அடிப்​படை​யில் ஊதி​யம் வழங்​கப்​ப​டாது என்று தலை​மைச்​செயலர் நா.​முரு​கானந்​தம் எச்​சரித்​துள்​ளார்.

    விடுப்​பு​கள் அனு​ம​திக்​கப்​ப​டாது: இதுதொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட அரசாணை​யில், இந்த நாளில் மருத்​துவ விடுப்பு தவிர்த்து தற்​செயல் விடுப்பு மற்​றும் இதர விடுப்​பு​கள் அனு​ம​திக்​கப்​ப​டாது என்​றும் அரசு ஊழியர்​களுக்​கான பணி நடத்தை விதி​களை மீறக்​கூ​டாது என்​றும் அனைத்து துறை​களும் காலை 10.15 மணிக்கு துறை​களில் ஊழியர்​களின் வருகை விவரங்​களை மனிதவள மேலாண்​மைத்​துறைக்கு தெரிவிக்க வேண்​டும் என்​றும் கூறி​யுள்​ளார். இதனிடையே பேருந்து சேவை​யில் பாதிப்பு இருக்​காது என்று அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர் தெரி​வித்​துள்​ளார். இதைதொடர்ந்து போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர்​களுக்கு துறை செயலர் பணீந்​திர ரெட்டி அனுப்​பிய கடிதத்​தில், ‘அட்​ட​வணைப்​படி பேருந்து இயக்​கப்​படு​வதை கட்​டுப்​பாட்டு அறை அமைத்து கண்​காணிக்க வேண்​டும்.

    பணிமனைக்கு போலீஸ் பாது​காப்​புக்கு ஏற்​பாடு செய்ய வேண்​டும். பேருந்து இயக்​கத்தை தடுக்​கும் சம்​பவம் நேர்ந்​தால் உடனடி​யாக மாவட்ட சட்ட ஒழுங்கு அதி​காரி​களை அணுக வேண்​டும். 2 மணி நேரத்​துக்கு ஒரு முறை பேருந்து இயக்​கம் குறித்து அரசுக்கு தெரிவிக்க வேண்​டும்’ என்று கூறி​யுள்​ளார். மேலும் வார ஓய்வு எடுக்க வேண்​டாம் என்​றும் அதை ஈடு செய்ய மற்​றொரு நாள் வழங்​கப்​படும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. பணிக்கு வராதவர்​கள் மீதும், வேலைநிறுத்​தத்​தில் பங்​கேற்​கு​மாறு தூண்டி விடு​வோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும் என எச்​சரிக்​கப்​பட்​டுள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கடலூர் அருகே கேட் கீப்பர் அலட்சியத்தால் விபத்து: பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

    July 9, 2025
    மாநிலம்

    மதுரையிலேயே அரசு பணி வழங்க வேண்டும்: அஜித்குமாரின் சகோதரர் திடீர் ஆதங்கம்

    July 9, 2025
    மாநிலம்

    அஜித்குமார் மீதான திருட்டு வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: ஆக. 20-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

    July 9, 2025
    மாநிலம்

    மாநில நிதி தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிப்பு

    July 9, 2025
    மாநிலம்

    அவிநாசி இளம்பெண் ரிதன்யாவின் பெற்றோரை நேரில் சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல்

    July 9, 2025
    மாநிலம்

    “கோவை தொழில் வளர்ச்சி, விமான நிலைய விரிவாக்கத்துக்கு உறுதுணை!” – பழனிசாமி வாக்குறுதி

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கடலூர் அருகே கேட் கீப்பர் அலட்சியத்தால் விபத்து: பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழப்பு
    • மதுரையிலேயே அரசு பணி வழங்க வேண்டும்: அஜித்குமாரின் சகோதரர் திடீர் ஆதங்கம்
    • அஜித்குமார் மீதான திருட்டு வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: ஆக. 20-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
    • மாநில நிதி தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிப்பு
    • அவிநாசி இளம்பெண் ரிதன்யாவின் பெற்றோரை நேரில் சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.