Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பாமகவுடன் கூட்டணி; ஸ்டாலின் முடிவு செய்தால் ஏற்போம்: ராமதாஸை சந்தித்த பின் செல்வப்பெருந்தகை கருத்து
    மாநிலம்

    பாமகவுடன் கூட்டணி; ஸ்டாலின் முடிவு செய்தால் ஏற்போம்: ராமதாஸை சந்தித்த பின் செல்வப்பெருந்தகை கருத்து

    adminBy adminJune 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாமகவுடன் கூட்டணி; ஸ்டாலின் முடிவு செய்தால் ஏற்போம்: ராமதாஸை சந்தித்த பின் செல்வப்பெருந்தகை கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விழுப்புரம்: பாமகவுடன் கூட்டணி என்பதை முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தால், அதை ஏற்றுக்கொள்வோம் என்று ராமதாஸை சந்தித்த பின்னர், கு.செல்வப்பெருந்தகை கூறினார்.

    திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது. மரியாதை நிமித்தமாக சந்தித்து, அவரது உடல்நிலையை விசாரித்தேன். கூட்டணி குறித்து பேச வரவில்லை. ராமதாஸ்-அன்புமணியை சமாதானப்படுத்துவதும் எனது வேலையல்ல. அவர்கள் சமாதானமாக இருந்தால் மகிழ்ச்சி.

    திமுகவுடன் பாமக கூட்டணி என்பதை இண்டியா கூட்டணியின் தமிழக தலைவரான முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தால், அதை ஏற்றுக் கொள்வோம். திமுக கூட்டணி ஒற்றுமையாகவும், வலிமையாகவும் உள்ளது. மீண்டும் திமுக ஆட்சி அமையும்.

    பாமகவில் நிலவும் பிரச்சினைக்கு திமுகதான் காரணம் என்று புரிதல் இல்லாமல் அன்புமணி கூறியுள்ளார். பாஜகவை சமாதானப்படுத்துவதற்காக அப்படி சொல்லி இருக்கலாம். திமுக வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகின்றனர். குழப்பத்தை ஏற்படுத்தும் அரசியல், ஸ்டாலினுக்கு தெரியாது.

    பாஜகதான் பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. கூட்டணி கட்சிகளை உடைக்கும் கலையில் பாஜக கைதேர்ந்தது. அதன்படி அதிமுகவை கபளீகரம் செய்யப் போகின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும்.

    அதிமுகவுடன் கூட்டணி என்று கூறிவிட்டு, அண்ணா, பெரியாரை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிடுகின்றனர். இதை அதிமுகவினர் வேடிக்கைப் பார்க்கின்றனர். நேரு, இந்திரா காந்தி உள்ளிட்டோரை கொச்சைப்படுத்தி இருந்தால், நாங்கள் கூட்டணியில் ஒரு நொடி இருப்போமா?

    தலைவர்களை பலி கொடுத்து, அரசியல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? பாஜகவிடம் பயம் எதற்கு? இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    செந்தில் பாலாஜியின் சகோதரர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல ஐகோர்ட் அனுமதி

    August 8, 2025
    மாநிலம்

    டெல்லி காற்று மாசை வைத்து பட்டாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: இபிஎஸ் கருத்து

    August 8, 2025
    மாநிலம்

    பாமக வழக்கு விவகாரம்: ராமதாஸ், அன்புமணியிடம் தனது அறையில் பேச நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு

    August 8, 2025
    மாநிலம்

    விநாயகர் சதுர்த்தி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும்: இந்து முன்னணி அழைப்பு

    August 8, 2025
    மாநிலம்

    தேசிய தலைமை வங்கி பதவியில் சிறுபான்மையினர் புறக்கணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. ஆதங்கம்

    August 8, 2025
    மாநிலம்

    சமூக பொறுப்பு திட்டத்தில் சீரமைக்கப்பட்ட மணப்பாக்கம் ஏரி: பாசன வசதி பெறும் 150 ஏக்கர் விளை நிலங்கள்

    August 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • செந்தில் பாலாஜியின் சகோதரர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல ஐகோர்ட் அனுமதி
    • ஆணி கடித்தல் ஏன் ஒரு கெட்ட பழக்கத்தை விட அதிகம்: இது செப்சிஸ் போன்ற கடுமையான நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டெல்லி காற்று மாசை வைத்து பட்டாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: இபிஎஸ் கருத்து
    • ரக்ஷா பந்தன் 2025 க்கான விரைவான ஒப்பனை யோசனைகள்
    • பாமக வழக்கு விவகாரம்: ராமதாஸ், அன்புமணியிடம் தனது அறையில் பேச நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.