Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, March 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“பாமகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சி!” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
    மாநிலம்

    “பாமகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சி!” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

    adminBy adminJune 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “பாமகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சி!” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காஞ்சிபுரம்: “திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. தங்கள் ஆட்சியின் தவறுகளை மறைத்து வெற்றி பெறலாம் என்று பாமகவுக்குள் இருக்கும் சூழ்ச்சிக்காரர்களை பயன்படுத்தி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது” என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

    காஞ்சிபுரம் மாவட்ட பாமக பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் மகேஷ்குமார் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் பேசியது: “சமீபத்தில் வரலாறு காணத வகையில் வன்னியர் சங்க மாநாட்டை நடத்தினோம். பத்து லட்சம் வன்னிய இளைஞர்கள் அந்த மாநாட்டில் திரண்டனர்.

    ‘வன்னிய சமூகத்துக்கு பெரும் துரோகத்தை திமுக இழைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் உரிய தரவுகளை திரட்டி வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பளித்த பிறகும் அந்த இடஒதுக்கீட்டை வழங்காமல் திமுக துரோகம் செய்தது. வன்னிய சமூகத்தில் இருந்து திமுகவுக்கு ஒரு ஓட்டு கூட செல்லக் கூடாது. அதற்கான பணிகளை செய்ய வேண்டும்’ என்று அந்த மாநாட்டுக்கு வந்த இளைஞர்களிம் கூறினேன்.

    அந்த மாநாட்டில் திரண்ட கூட்டம் திமுகவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. மக்கள் மத்தியில் திமுக அரசின் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தங்கள் அரசின் தோல்வியை மறைக்க பாமகவுக்குள் இருக்கும் சில சூழ்ச்சிக்காரர்களை பயன்படுத்திக் கொண்டு குழப்பத்தை உண்டாக்க திமுக முயற்சிக்கிறது. அவர்களின் எண்ணம் ஒரு போதும் வெற்றி பெறாது.

    காஞ்சிபுரம் மாவட்டம் என்பது திமுகவை உருவாக்கிய அண்ணா பிறந்த மண். இந்த மாவட்டத்தில் 6 சாராய ஆலைகள் செயல்படுகின்றன. இதில் 5 ஆலைகள் திமுகவினருக்கு சொந்தமானவை. அதனால்தான் திமுக மதுவிலக்கை கொண்டு வர தயங்குகிறது. என்னை இந்த சமூகத்துக்கும், கட்சிக்கும் துரோகம் செய்வதாக கட்டமைக்க முயல்கின்றனர். அப்படி இந்த கட்சிக்கோ, சமூகத்துக்கோ துரோகம் செய்தால் அந்த நாள் என் வாழ்வின் இறுதி நாளாக இருக்கும்.

    நாங்கள் வன்னியர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு கோரவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கோருவதே முன்னேறாமல் இருக்கும் சமூகங்களை கண்டறியத்தான். யார் முன்னேறாமல் உள்ளனரோ அவர்கள் அனைவருக்கும் இடஒதுக்கீட்டை கொடுக்க வேண்டும். தலித் மக்களின் இடஒதுகீட்டை மேலும் 2 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று வன்னியர் சங்க மாநாட்டில் கூட தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்” என்றார்.

    இந்த பொதுக் குழுக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை திருப்போரூர் பகுதிக்கு மாற்ற வேண்டும், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வர வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சக்திகமலாம்பாள், மாவட்டத் தலைவர் உமாபதி, நிர்வாகிகள் பொன்.கங்காதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கௌரவ் கபூர்: “நாங்கள் ஒரு மணி நேரம் பேசினோம், அது …”: கௌரவ் கபூர் இப்போது மனைவி கிருத்திகா கம்ராவுடன் தனது முதல் உரையாடலை வெளிப்படுத்துகிறார் மற்றும் அவர்களின் உறவை என்ன தொடர்கிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மஹாரேரா என்றால் என்ன? மகாராஷ்டிராவில் ஒவ்வொரு வீடு வாங்குபவர் மற்றும் டெவலப்பர் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கியமான விதிகள்
    • குல்தீப் யாதவின் மனைவியாக வரவிருக்கும் வன்ஷிகா சாதாவை சந்திக்கவும்: கான்பூரில் உள்ள சிறுவயது நண்பர்கள் முதல் வாழ்க்கைத் துணை மற்றும் தனிப்பட்ட தொழில்முறை வரை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள 5 தீவுகள் மற்றும் கடலோர இடங்களைப் பற்றி பயணிகள் அரிதாகவே கேட்கிறார்கள்
    • குல்தீப் யாதவ் இன்று வன்ஷிகா சாதாவை மணக்கிறார்: யுஸ்வேந்திர சாஹல் திருமண விழாக்கள், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் படங்களை விஐபி விருந்தினர்களிடையே பகிர்ந்து கொண்டார் – அனைத்து விவரங்களும் இங்கே

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.