Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பாமகவில் மோதல் நீடிப்பு: வழக்கறிஞர் பாலு, 20 மாவட்ட நிர்வாகிகளை நீக்கினார் ராமதாஸ்
    மாநிலம்

    பாமகவில் மோதல் நீடிப்பு: வழக்கறிஞர் பாலு, 20 மாவட்ட நிர்வாகிகளை நீக்கினார் ராமதாஸ்

    adminBy adminJune 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாமகவில் மோதல் நீடிப்பு: வழக்கறிஞர் பாலு, 20 மாவட்ட நிர்வாகிகளை நீக்கினார் ராமதாஸ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விழுப்புரம்: பாமக தலைவர் அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வழக்கறிஞர் பாலுவை, சமூக நீதி பேரவைத் தலைவர் பதவியில் இருந்து கட்சி நிறுவனர் ராமதாஸ் நீக்கம் செய்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோரிடையே இன்னும் முழுமையான சமரசம் ஏற்படவில்லை. கட்சியின் மூத்த நிர்வாகிகள், குடும்ப உறுப்பினர்களும் பலமுறை முயற்சித்தும், முழு உடன்பாடு எட்டப்படவில்லை.

    கடந்த 5-ம் தேதி காலை ராமதாஸை அன்புமணி சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல, ஆடிட்டர் குருமூர்த்தி, அதிமுக முன்னாள் நிர்வாகி சைதை துரைசாமி ஆகியோரும் சந்தித்துப் பேசினர். தொடர்ந்து, சென்னையில் உள்ள மகள் வீட்டில் 3 நாட்களாக ராமதாஸ் முகாமிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திண்டிவனம் அடுத்த தைலாபுரத்துக்கு திரும்பிய ராமதாஸ், தனது வழக்கமான அதிரடி நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கிறார்.

    அன்புமணியின் ஆதரவாளரான மாநிலப் பொருளாளர் திலகபாமா உட்பட 45 மாவட்ட நிர்வாகிகளை ஏற்கெனவே ராமதாஸ் கட்சியை விட்டு நீக்கியிருந்தார். இந்நிலையில், சென்னையில் அன்புமணி நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற சமூக நீதி பேரவை மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலுவை, பதவியில் இருந்து ராமதாஸ் நேற்று நீக்கியுள்ளார். அவருக்கு மாற்றாக வழக்கறிஞர் கோபு என்பவரை நியமித்துள்ளார். இதேபோல, 20-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர்களையும் நீக்கிவிட்டு, புதியவர்களை நியமனம் செய்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஸ்டிக்கர் முதல் பூத் கமிட்டி வரை: களத்தில் சொதப்புகிறதா விஜய்யின் தவெக?

    July 26, 2025
    மாநிலம்

    பிரதமர் மோடி செல்லும் இடங்களில் காங். கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை தகவல்

    July 26, 2025
    மாநிலம்

    “அரசு ஊழியர் நலனில் பின்தங்கிய நிலையில் தமிழகம்” – பழைய ஓய்வூதிய திட்ட இயக்க தேசிய தலைவர் பேச்சு

    July 26, 2025
    மாநிலம்

    ராமநாதபுரம் சமஸ்தான சொத்துகள் விற்கப்படுவதாக புகார் – போலீஸ் விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

    July 26, 2025
    மாநிலம்

    தமிழகம் வரும் பிரதமரிடம் மாநில அரசு சார்பில் மனு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

    July 26, 2025
    மாநிலம்

    முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

    July 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஸ்டிக்கர் முதல் பூத் கமிட்டி வரை: களத்தில் சொதப்புகிறதா விஜய்யின் தவெக?
    • “இந்த ஆட்சியை ஆதரிப்பது வருத்தமாக இருக்கிறது!” – நிதிஷ் குமார் மீது சிராக் பாஸ்வான் தாக்கு
    • ‘தலைவன் தலைவி’ வசூல் அதிகரிப்பு: படக்குழுவினர் மகிழ்ச்சி
    • பிரதமர் மோடி செல்லும் இடங்களில் காங். கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை தகவல்
    • ‘புஷ்பா 2’ பற்றி நெகட்டிவாக பேசினாரா ஃபகத் பாசில்?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.