Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பாடத்திட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை வளர்ப்பதா? – முத்தரசன் கண்டனம்
    மாநிலம்

    பாடத்திட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை வளர்ப்பதா? – முத்தரசன் கண்டனம்

    adminBy adminJuly 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாடத்திட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை வளர்ப்பதா? – முத்தரசன் கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சிறுபான்மையினருக்கு எதிராக பகையும், வெறுப்பும் வளர்க்கும் பாடத்திட்டங்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதித்து இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், அவைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா முத்தரசன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், அக்பர், பாபர், அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் நடந்த சம்பவங்களை தொகுத்துக் கூறி, நடப்பு “இந்துத்துவா” அரசியல் கருத்தியலுக்கு ஆதரவு திரட்டவும் பெரும்பான்மை மதவெறியூட்டும் வகையிலும் விவரிக்கப்பட்டுள்ளது. இது, பள்ளி வயது குழந்தைகளின் மனதில் ஆரம்ப நிலையில் மதவெறி விஷ விதைகளை விதைக்கும் வன்மம் நிறைந்த செயலாகும்.

    கடந்த 13 ஆம் நூற்றாண்டிலும், அதற்கு சற்று முன்பும், பின்புமான காலகட்டத்தில் நடந்து போன சம்பவங்களாகும். சாதனைகளும், வேதனைகளும் நிறைந்த கடந்த கால நிகழ்வுகளை நிகழ்காலத்திலும் சரி, எதிர் காலத்திலும் சரி திருத்தியமைக்க முயல்வது வரலாற்றுப் புரட்டாகவே அமையும் என்பதை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் கருத்தில் கொள்ளாமல், நிகழ்கால அரசியல் தேவைக்கு வளைந்து கொடுத்திருப்பது ஏற்க தக்கதல்ல.

    சில வருடங்களுக்கு முன்பு கல்வி ஆராய்ச்சிக் குழுவில் வலுசாரியினர் நியமிக்கப்பட்டதன் விளைவுகள் வெளிப்பட்டுள்ளன. போர்க்களங்களிலும், யுத்த காலங்களிலும் பேரழிவுகள் ஏற்படுவது அதன் இயல்பான விளைவுகளாகும். இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக கிழக்கிந்திய கம்பெனியும், பிரிட்டீஷ் பேரரசும், இன்றைய இந்தியாவின் பல பகுதிகளில், செல்வ வளங்களை வகை, தொகையின்றி கொள்ளை அடித்துச் சென்றதை 18, 19 ஆம் நூற்றாண்டு வரலாறு பதிவு செய்துள்ளது.

    நிலப்பிரபுத்துவ ஆட்சி முறைகளையும், காலனி ஆதிக்க அடிமைத்தனத்தையும் வென்று, விடுதலை பெற்று, அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கி, மாநிலங்கள் இணைந்து ஒன்றியமாக அமைந்துள்ள நாட்டின், ஆட்சி நிர்வாகம் கூட்டாட்சி நெறிமுறைகளையும், மதச்சார்பற்ற பண்புகளையும் அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது. இங்கு அதிகார பரவலாக்கம், பயில்வோர் உணர்வுகளில் நிலைத்த சமாதானம், நீடித்த அமைதியும் நிலவ வேண்டும் என்ற சிந்தனையை வளர்ப்பதும், வலுப்படுத்துவதுமான பாடங்கள் தான் அதிகம் இன்றியமையாத் தேவையாகும்.

    இதற்கு மாறாக, மதவெறி நஞ்சு விதைகளை பிஞ்சு மனங்களில் விதைத்து, சிறுபான்மையினருக்கு எதிராக பகையும், வெறுப்பும் வளர்க்கும் பாடத்திட்டங்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதித்து இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், அவைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பொதுக்கூட்ட பேச்சுக்காக அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து திருமாவளவனுக்கு விலக்கு

    July 18, 2025
    மாநிலம்

    புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி முதல்வர் நேரில் பிறந்தநாள் வாழ்த்து: தடையை மீறி தவெக பேனர்

    July 18, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    July 18, 2025
    மாநிலம்

    தமிழகத்தின் நிதி, மொழி, கல்வியுரிமையை நிலைநாட்ட குரல்: திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்!

    July 18, 2025
    மாநிலம்

    தமிழக எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான ஊழல் வழக்கு: தவெக மனு மீது 12 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு

    July 18, 2025
    மாநிலம்

    முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான தேர்தல் வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வயதானவர்களுக்கு ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க சிறந்த 5 வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நீதிபதி வர்மா பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவருவது அரசு அல்ல: மத்திய அமைச்சர் விளக்கம்
    • பொதுக்கூட்ட பேச்சுக்காக அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து திருமாவளவனுக்கு விலக்கு
    • அழகிய பயணங்களுக்காக இந்தியாவில் 8 குறைவான ரயில் வழிகள்
    • குருகிராம் நில விவகார வழக்கில் ராபர்ட் வதேரா மீது அமலாக்க துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.