Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘பாஜக நமக்கு எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை’ – இபிஎஸ் வெளிப்படை
    மாநிலம்

    ‘பாஜக நமக்கு எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை’ – இபிஎஸ் வெளிப்படை

    adminBy adminSeptember 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘பாஜக நமக்கு எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை’ – இபிஎஸ் வெளிப்படை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, நமக்கு ஆட்சியில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    சென்னை வடபழனியில் திங்கட்கிழமை (செப்.15) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது தனது ஆட்சியில் தான் எதிர்கொண்ட நெருக்கடி சூழல், பாஜக உடனான கூட்டணி, உட்கட்சி விவகாரம் குறித்தும் பேசினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:

    “வரும் 16-ம் தேதி முதல் பல மாவட்டங்களில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருவண்ணாமலையில் மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டது. இதில் 17, 18 ஆகிய தேதிகளில் தருமபுரியில் நமது எழுச்சி பயணம் இருந்தது. மழை காரணமாக அந்த சுற்றுப்பயணம் வேறொரு தேதியில், அதாவது இந்த மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவித்தோம்.

    உடனடியாக இன்று பத்திரிகையில் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார். உள்கட்சி விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார் என கூறப்பட்டது. பத்திரிகையாளார்களே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது.

    நான் சொல்வதை எழுதிக் கொள்ளுங்கள். எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை விட தன்மானம்தான் முக்கியம். அதை இமியளவும் விட்டுக்கொடுக்க மாட்டோம். சில பேரை கைக்கூலியாக வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டுக்கொண்டு உள்ளீர்கள். அந்த கைக்கூலி யார் என்பதை அடையாளம் கண்டுவிட்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும். சில பேர் அதிமுக அரசை கவிழ்க்க பார்த்தார்கள். அவர்களை மன்னித்து, அரவணைத்து, துணை முதல்வர் பொறுப்பை கொடுத்தோம். இருந்தும் திருந்தியபாடில்லை. புனிதம் மிக்க அதிமுக தலைமை கழகத்தை அடித்து நொறுக்கினார்கள். அவர்களை நாங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா? அது தொண்டனின் சொத்து.

    உன்னொருவர் அதிமுக அரசை கவிழ்க்க 18 சட்டமன்ற உறுப்பினர்களை கடத்தி சென்றார். அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா? இதை யார் ஏற்றுக் கொள்வார்கள்? நான் தொண்டனாக இருந்து உயர்ந்திருக்கிறேன். எனக்கு உறுதியான எண்ணமும், மனநிலையும், அஞ்சா நெஞ்சமும் உண்டு. என்னை யாரும் விரட்டி விட முடியாது.

    இதுவரை கடந்த காலத்திலும் சரி, அதிமுக ஆட்சியிலும் சரி, இப்போதும் சரி மத்தியில் இருப்பவர்கள் யாரும் நமக்கு எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை. நமக்கு நன்மைதான் செய்தார்கள்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சிலர் கட்சியை கபளீகரம் செய்யப் பார்த்தார்கள். அதிமுக ஆட்சியை மத்தியில் இருந்தவர்கள் தான் காப்பாற்றி கொடுத்தார்கள்.

    நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. வள்ளுவர் சொன்னபடி நன்றியோடு நாங்கள் இருக்கிறோம். எனவே மத்திய பாஜக அரசுக்கு நன்றியோடு இருக்கிறோம். அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இதில் அரசியல் வியூகம் உள்ளது. கூட்டணி சேர்வது அரசியல் நகர்வு. இது தேர்தல் சார்ந்தது. எதிர்க்கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம்.

    இதே திமுக பாஜக உடன் 1999, 2001 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தார்கள். அப்போது பேசாதவர்கள் இப்போது ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பயம் வந்துவிட்டது.

    மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக நமக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கவில்லை. பல ஆயிரம் கோடி திட்டங்களை கொடுத்துள்ளார்கள். அதனால்தான் நிதி வழங்கி வருகிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக இப்படி பேசி வருகிறது” என்று தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் தொடக்கம்

    September 16, 2025
    மாநிலம்

    இந்த முறை திமுக நிக்கணும்… திண்டுக்கல் சீனிவாசனுக்கு திகில் கொடுக்கும் திமுக!

    September 16, 2025
    மாநிலம்

    வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை

    September 16, 2025
    மாநிலம்

    நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் முதல்முறையாக இளைஞரணி உருவாக்கப்பட்டது திமுகவில்தான்: உதயநிதி பெருமிதம்

    September 16, 2025
    மாநிலம்

    வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விஜய் சொல்வதை மக்களே ஏற்கமாட்டார்கள்: அமைச்சர் கருத்து

    September 16, 2025
    மாநிலம்

    “3-ம் இடத்துக்கு சீமானுக்கும் விஜய்க்கும் இடையேதான் போட்டி” – அமைச்சர் ஐ.பெரியசாமி

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் தொடக்கம்
    • உடன்குடி அனல்மின் நிலையத்தில் சோதனை மின்னுற்பத்தி தொடக்கம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
    • இந்த முறை திமுக நிக்கணும்… திண்டுக்கல் சீனிவாசனுக்கு திகில் கொடுக்கும் திமுக!
    • சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவின் படை!
    • வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.