Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பாஜக சூழ்ச்சியால் ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
    மாநிலம்

    பாஜக சூழ்ச்சியால் ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    adminBy adminJuly 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாஜக சூழ்ச்சியால் ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசியவர் கூறியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி ஐஏஎஸ் அகாடமி தொடங்க இருக்கிறோம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இதில் இலவசமாக படிக்கலாம். இதன் வேந்தராக நாசே ராமசந்திரன் நியமிக்கப் பட்டுள்ளார். செயலாளராக பீட்டர் அல்போன்ஸ், இணை செயலாளர்களாக கே.வி.தங்கபாலு, கே.எஸ்.அழகிரி ஆகியோர் செயல்படுவார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளில் இதனை தொடங்க இருக்கிறோம்.

    ராஜேந்திர சோழனுக்கு விழா எடுத்து இருக்கிறோம் என பிரதமர் மோடி வட மாநிலத்தில் பேச வேண்டும். 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.3 லட்சம் கோடி கொடுத்து இருப்பதாக மோடி கூறுகிறார். அமித்ஷா ரூ.6.80 லட்சம் கோடி என்று சொல்லிகிறார். எல்.முருகன் ரூ.12 லட்சம் கோடி என்று சொல்லிகிறார். இதில் யார் சொல்வது உண்மை ?

    காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது தான் அதிக நிதி தமிழகத்துக்கு கொடுத்துள்ளது. உயிர் காக்கும் மருத்துவ கருவிக்கு கூட ஜி.எஸ்.டி வரி விதித்தது தான் மத்திய பாஜக அரசு. 11 ஆண்டு ஆட்சி காலத்தில் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் மோடி உண்மைக்கு புறம்பாக கூறி வருகிறார்.

    முதல்வர் ஸ்டாலின் ஏன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழிசை தனியார் மருத்துவ மனையில் தான் பணி செய்தார். அவர் ஏன் அரசு மருத்துவமனையில் பணி செய்யவில்லை ?. டெல்லி தலைமையுடன் ஆலோசனை நடத்தி காலியாக இருக்கும் மாவட்ட தலைவர்கள் பதவிகள் ஒரு வாரத்தில் நியமிக்க திட்டமிட்டுள்ளோம். இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலிமையாக இருக்கிறது. எங்கள் கூட்டணி எஃகு கோட்டையாக உள்ளது. இங்கு ஒரு செங்கலை கூட உருவ முடியாது.

    ஓ.பன்னீர்‌ செல்வம் தர்மயுத்தம் செய்ததற்கு வழிகாட்டியது யார்? பின்னர் அதிமுக-வை 4 ஆக உடைத்தனர். பின்னர் ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்க்க வலியுறுத்தியது யார்? இப்போது அவரை முழுமையாக கைவிட்டு விட்டனர். இதுதான் ஆர்எஸ்எஸ், பாஜக-வின் சித்தாந்தம். அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாஜகவும் திமுகவும் இணைந்து நடத்துவது அரசியல் ஆதாய நாடகம்: விஜய் விமர்சனம்

    July 28, 2025
    மாநிலம்

    சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவர் தேவையில்லை: கொலையான ஜெயராஜ் மனைவி தரப்பு வாதம்

    July 28, 2025
    மாநிலம்

    அதிமுகவில் இணைந்த ‘ராமநாதபுரம் இளைய மன்னர்’ நாகேந்திரன் சேதுபதி!

    July 28, 2025
    மாநிலம்

    “திமுக ஆட்சியில் வருமானமும், மத்திய அரசு செய்த உதவிகளும் அதிகம்” – எடப்பாடி பழனிசாமி

    July 28, 2025
    மாநிலம்

    அதிமுக பூத் கமிட்டியில் ‘பொய் கணக்கு’ – இபிஎஸ் வருகையை ஒட்டி சிவகங்கையில் சுவரொட்டிகள்

    July 28, 2025
    மாநிலம்

    வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட் அமர்வு பரிந்துரை

    July 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • எலுமிச்சை தண்ணீரை தினமும் குடிப்பது சிறந்த நீரேற்றம் உதவிக்குறிப்பாக இருக்க 8 காரணங்களை அமெரிக்க குடல் மருத்துவர் விளக்குகிறார்
    • பாஜகவும் திமுகவும் இணைந்து நடத்துவது அரசியல் ஆதாய நாடகம்: விஜய் விமர்சனம்
    • தடுக்கப்பட்ட மூக்கை இயற்கையாகவே அழிக்க உடனடி வீட்டு வைத்தியம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவர் தேவையில்லை: கொலையான ஜெயராஜ் மனைவி தரப்பு வாதம்
    • உடலில் உயர் யூரிக் அமிலத்தின் ஆரம்ப அறிகுறிகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.