Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பாஜகவும் அதிமுகவும் எதுவும் செய்யவில்லை; வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்: பிரேமலதாவிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்
    மாநிலம்

    பாஜகவும் அதிமுகவும் எதுவும் செய்யவில்லை; வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்: பிரேமலதாவிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்

    adminBy adminJune 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாஜகவும் அதிமுகவும் எதுவும் செய்யவில்லை; வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்: பிரேமலதாவிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பாஜக, அதிமுக கூட்டணி தேமுதிகவுக்காக எதுவும் செய்யவில்லை என்றும் எனவே 2026 சட்டப்பேரவை தேர்தலில் மிகவும் வலுவான கூட்டணியை தேமுதிக அமைக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேமுதிகவில் புதிதாக நியமிக்கப்பட்ட சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், தொகுதி கண்காணிப்பாளர்கள் உடனான மண்டலவாரியான கூட்டம் சென்னையில் 3-வது நாளாக நேற்றும் நடைபெற்றது.

    கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை வகித்தார். துணை செயலாளர் எம்.ஆர்.பன்னீர் செல்வம் தலைமையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில் பேசிய நிர்வாகிகள், “பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது பிரதமர் மோடியை நம்பினோம். ஆனால் அவர்கள் தேமுதிகவுக்காக எதுவும் செய்யவில்லை. அவர்களும் நம்மை ஏமாற்றி விட்டார்கள். அதேபோல் அதிமுகவின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்தில் அவர்கள் ஆட்சி அமைக்க தேமுதிக முக்கிய பங்காற்றியது. அப்படி இருந்தும் மாநிலங்களவை சீட் கொடுப்பதாக அதிமுக நம்மை ஏமாற்றி விட்டது.

    இதனால் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு மிகவும் கவனத்துடன் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும். தேமுதிகவுக்கு அக்கூட்டணியில் முக்கியத்துவம் இருக்க வேண்டும். சட்டப்பேரவையில் தேமுதிக உறுப்பினர் குரல் ஒலிக்க வேண்டும்.” என்று கருத்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரேமலதா, “உரிய நேரத்தில் நல்ல சிறப்பான கூட்டணி அமைக்கப்படும். அதை ஜனவரியில் நடக்க உள்ள மாநாட்டில் அறிவிப்போம். அது வரையில் கட்சியை பலப்படுத்தும் பணிகளை நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும்.

    நான் பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் நடைபெற உள்ள முதல் மாநாட்டில் மறைந்த தலைவர் விஜயகாந்துக்கு அளித்த ஆதரவை போல் எனக்கும் ஆதரவு அளிக்க வேண்டும். மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாஜகவை விமர்சிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை: நயினார் நாகேந்திரன் கருத்து

    September 14, 2025
    மாநிலம்

    வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக எந்த போராட்டத்துக்கும் தயார்: பாமக தலைவர் அன்புமணி உறுதி

    September 14, 2025
    மாநிலம்

    தேசிய லோக் – அதாலத் மூலம் ரூ.719 கோடி இழப்பீடு: ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு

    September 14, 2025
    மாநிலம்

    பொதுமக்களின் குரல் உங்களுக்கு கேட்கிறதா முதல்வரே? – திருச்சி பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் கேள்வி

    September 14, 2025
    மாநிலம்

    அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதுதான் திமுக அரசின் சாதனை: இபிஎஸ் விமர்சனம்

    September 14, 2025
    மாநிலம்

    வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்த விவகாரம்: நில அளவை துறை உதவி வரைவாளர் கைது

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாஜகவை விமர்சிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை: நயினார் நாகேந்திரன் கருத்து
    • உடைந்த இதய நோய்க்குறி என்றால் என்ன, அதிலிருந்து யாராவது உண்மையில் இறக்க முடியுமா? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக எந்த போராட்டத்துக்கும் தயார்: பாமக தலைவர் அன்புமணி உறுதி
    • தேசிய லோக் – அதாலத் மூலம் ரூ.719 கோடி இழப்பீடு: ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு
    • பொதுமக்களின் குரல் உங்களுக்கு கேட்கிறதா முதல்வரே? – திருச்சி பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் கேள்வி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.