Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பாஜகவுக்கு மீனவர் நலனில் கடுகளவு கூட அக்கறை இல்லை – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
    மாநிலம்

    பாஜகவுக்கு மீனவர் நலனில் கடுகளவு கூட அக்கறை இல்லை – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    adminBy adminJune 28, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாஜகவுக்கு மீனவர் நலனில் கடுகளவு கூட அக்கறை இல்லை – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மீனவர்கள் நலனில் கடுகளவு அக்கறை கூட பாஜகவுக்கு இல்லை என்பதைத் தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அறிக்கை படம்பிடித்துக் காட்டுகிறது என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 11 ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை மூடி மறைப்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருக்கிறார்.

    நெருக்கடி நிலை காலத்தில், ஒன்றிய காங்கிரஸ் அரசு கச்சத்தீவு குறித்து இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தினால் தான் மீனவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, கைது செய்யப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். 1974 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்தின் போது, நெருக்கடி நிலை அமலில் இல்லை. இந்த ஒப்பந்தம் குறித்து 1974 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி மக்களவையில் அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன்சிங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அறிக்கை தாக்கல் செய்து உரையாற்றியிருக்கிறார்.

    இந்த விவாதத்தில் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பங்கேற்று கருத்துகளை கூறியிருக்கிறார்கள். நாடாளுமன்றத்திற்கு தெரியாமல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாக பொறுப்புள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

    காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, பிரதமர் வாஜ்பாய் 6 ஆண்டுகால ஆட்சியிலும், பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியிலும் கச்சத்தீவை மீட்பது குறித்து இலங்கை பிரதமர்களோடு எப்போதாவது பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களா? உண்மையிலேயே மீனவர்களின் பிரச்சினைக்கு கச்சத்தீவு காரணமாக இருந்தால் அதுகுறித்து இலங்கை அரசிடம் பேசியிருக்கலாம்.

    மாறாக, நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளேடுகளுக்கு அளித்த பேட்டியில், கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பதே தமிழகத்தின் கோரிக்கையாக இருக்கிறதே என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது, ‘சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையில் என்னென்ன செய்ய முடியும் என்பதை செய்வது தான் எங்களது நோக்கம்” என்று கூறியிருக்கிறார்.

    கச்சத்தீவை மீட்க வேண்டுமென்று சொன்னால், இந்திய அரசு, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையில் என்று கூறுவது போகாத ஊருக்கு வழி தேடுவதாகும். இதன்மூலம் கச்சத்தீவை மீட்பதற்கு அக்கறையில்லை என்பதைத் தான் இது உறுதிபடுத்துகிறது.

    ஆனால் கச்சத்தீவை வழங்கியது குறித்து, ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த போது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பதிலில், இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட எந்த பகுதியும் வழங்கப்படவில்லை என்றும், எந்த பகுதியும் கையகப்படுத்தப்படவில்லை என்றும் பதில் கூறியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    அதேபோல, பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் உச்சநீதிமன்றத்தில் கச்சத்தீவு குறித்து தொடுக்கப்பட்ட வழக்கில் அன்று தலைமை வழக்கறிஞராக இருந்த முகுல் ரொக்டகி தாக்கல் செய்த மனுவில், கச்சத்தீவு இந்திய அரசால் வழங்கப்பட்டது. அதை மீட்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. கச்சத்தீவை மீட்பதற்காக இலங்கை அரசுடன் போரையா தொடுக்க முடியும் ? என்று கூறியதை பா.ஜ.க.வினர் எவராவது மறுக்க முடியுமா ?

    கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2024 டிசம்பர் வரை 10 ஆண்டுகளில் சுமார் 400 படகுகள் உட்பட 3179 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறையும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இருநாட்டு பிரதிநிதிகளை கொண்ட கூட்டு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டது.

    மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய இக்குழு 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒருமுறைகூட கூடவே இல்லை. மீனவர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு அக்கறையில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

    தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு அருகில் கைது செய்யப்படுவதில்லை. ஆனால், இரவு நேரங்களில் சர்வதேச எல்லையை அறியாமல் இலங்கை கடற்பகுதியில் செல்லும் போது கைது செய்யப்படுகிறார்கள். எனவே, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையில், இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கிற உரிமையை பெற்றுத் தர இலங்கை அரசோடு பேச ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சி செய்ய வேண்டும். இதைப்போன்ற ஒரு பேச்சுவார்த்தை டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியின் போது, 2013 இல் இலங்கை அரசோடு நடத்தப்பட்டதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.

    எனவே, 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தை காரணம் காட்டி பிரச்சினையை திசைதிருப்பக் கூடாது. இதன்மூலம் மீனவர்கள் நலனில் கடுகளவு அக்கறை கூட பாஜகவுக்கு இல்லை என்பதைத் தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அறிக்கை படம்பிடித்துக் காட்டுகிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருச்சி மாநகராட்சியில் மக்கள் பிரச்சினைகள் – திமுக அரசை கண்டித்து ஜூலை 3ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

    June 28, 2025
    மாநிலம்

    காஷ்மீர் மாணவருக்கு தாடியை அகற்ற அழுத்தமா? – கோவை தனியார் மருத்துவக் கல்லூரி மறுப்பு

    June 28, 2025
    மாநிலம்

    “அதிமுகவுக்குள் மோதலை உருவாக்கி கட்சியை காலி செய்ய பாஜக முயற்சி” – முத்தரசன்

    June 28, 2025
    மாநிலம்

    தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்: ஐகோர்ட்

    June 28, 2025
    மாநிலம்

    ‘உருது’ பாட ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

    June 28, 2025
    மாநிலம்

    “ராமதாஸ் மீது விசிக, காங். திடீர் பாசம் காட்டுவது திமுகவின் சூழ்ச்சி” – அன்புமணி ஆவேசம்

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருச்சி மாநகராட்சியில் மக்கள் பிரச்சினைகள் – திமுக அரசை கண்டித்து ஜூலை 3ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
    • வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்க முடியுமா? டாக்டர் வினைபுரியும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒரு புலி, 4 குட்டிகளை விஷம் வைத்து கொன்றதாக கர்நாடகாவில் 3 பேர் கைது
    • முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சு சொதப்பியது எப்படி? – பிரசித் கிருஷ்ணா ஓபடன் டாக்
    • காஷ்மீர் மாணவருக்கு தாடியை அகற்ற அழுத்தமா? – கோவை தனியார் மருத்துவக் கல்லூரி மறுப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.