Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தமிழ் மண்ணில் இடமில்லை” – செல்வப்பெருந்தகை
    மாநிலம்

    “பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தமிழ் மண்ணில் இடமில்லை” – செல்வப்பெருந்தகை

    adminBy adminJune 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தமிழ் மண்ணில் இடமில்லை” – செல்வப்பெருந்தகை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தமிழ் மண்ணில் இடமில்லை என கோவையில் இன்று (ஜூன் 7) நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று (ஜூன் 7) கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்காமல், வேறு மாநிலங்களுக்கு நிதியை கொடுக்கின்றனர். இதற்கு மத்திய அமைச்சர் முருகன் பதில் தெரிவிக்க வேண்டும்.

    தமிழக மக்களின் ரத்தம், வியர்வையை உறிஞ்சும் பாஜக அரசுப் பள்ளிக் கல்வி நிதி , பேரிடர் நிவாரண நிதி, தமிழக பங்களிப்பு நிதி போன்றவற்றை ஏன் கொடுக்கவில்லை? ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றது. மக்களைப் பதற்றத்தோடும், அச்சத்தோடு வைத்திருக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ், பாஜக நினைக்கிறது. இதற்காகத் தான் முருகன் மாநாட்டை நடத்துகின்றனர். முருகன் மாநாட்டைக் குஜராத், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற இடங்களில் நடத்தி இந்து கடவுள்களைச் சமமாக வைத்திருப்பதைக் காட்ட வேண்டும். வடமாநிலங்களைப் போல், தென் மாநிலத்தில் கலவரத்தைத் தூண்ட முடியுமா என அவர்கள் காத்திருக்கின்றனர்.

    மறுசீரமைப்பு காரணமாகத் தென்மாநிலங்களில் உள்ள மாநிலங்கள் பாதிக்கப்படும். பாஜக விரும்பியதை போல மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென் மாநிலத்தின் வாக்குகளே தேவையில்லை. தென் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் தேவை இல்லை என்ற நிலை ஏற்படும். இதற்காகத் திட்டமிட்டு சதி வேலையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

    அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி வராததை வருவதாக, பூச்சாண்டி கட்டுவதாக மறுசீரமைப்பு குறித்துப் பேசியிருக்கிறார். அப்படியானால் நாடாளுமன்றத்தில் எதற்காக ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இப்போது எம்.பிக்கள் 10 நிமிடத்திற்கு மேல் பேச முடிவதில்லை. எம்பிக்களின் எண்ணிக்கை உயர்ந்தால் இரண்டு நிமிடம் கூட நேரம் கிடைக்காது. இதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு புரிகின்றதா? இல்லையா? அல்லது புரிந்துகொண்டு இப்படிப் பேசுகின்றாரா எனத் தெரியவில்லை.

    மறுசீரமைப்பு பாஜக திட்டமிட்டது போல நடந்தால், தமிழக பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும். தென்னிந்தியப் பிரதிநிதித்துவம் குறைந்து போகும். வடமாநில பிரதிநிதித்துவம் உயரும் எனவும், வட மாநில பிரதிநிதிகளே அனைத்தையும் முடிவு செய்து கொள்வார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். புள்ளியியல் துறை மத்திய அரசிடம்தான் இருக்கிறது.

    மத்திய அமைச்சர் அமித் ஷா வருகை மூலம் தமிழகத்தில் ஏதாவது குழப்பம் செய்யலாமா? கால் ஊன்றலாமா என பாஜகவினர் முயற்சி எடுத்துப் பார்க்கின்றனர். அவர்களின் எந்த திட்டமும் நிறைவேறாது. பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தமிழ் மண்ணில் இடமில்லை” என்று அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “ஒரே கொள்கை எனில் திமுகவிலேயே அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து விடலாமே!” – பழனிசாமி பேச்சு

    August 7, 2025
    மாநிலம்

    மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் ‘டோர் டெலிவரி’ – ஆக.12-ல் தொடக்கம்

    August 7, 2025
    மாநிலம்

    திமுக மாநகர போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்க தேர்தலுக்கு இடைக்காலத் தடை

    August 7, 2025
    மாநிலம்

    திமுக ஆட்சியை விமர்சிக்க திருமாவளவன் தயக்கம்: தமிழிசை கருத்து

    August 7, 2025
    மாநிலம்

    இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் என்பது மாயை: இபிஸ் அடுக்கும் காரணங்கள்

    August 7, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தி.மலை, வேலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

    August 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய மோடி, நட்டாவுக்கு என்டிஏ அதிகாரம்!
    • “ஒரே கொள்கை எனில் திமுகவிலேயே அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து விடலாமே!” – பழனிசாமி பேச்சு
    • கீறல் இந்த கொடிய மூளை தொற்றுநோயை ஏற்படுத்தும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ‘வாக்கு திருட்டு’ 
    • மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் ‘டோர் டெலிவரி’ – ஆக.12-ல் தொடக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.