Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பாஜகவினருடன் இணக்கமாக பணியாற்ற வேண்டும்: அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு பழனிசாமி உத்தரவு
    மாநிலம்

    பாஜகவினருடன் இணக்கமாக பணியாற்ற வேண்டும்: அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு பழனிசாமி உத்தரவு

    adminBy adminMay 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாஜகவினருடன் இணக்கமாக பணியாற்ற வேண்டும்: அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு பழனிசாமி உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதால், பாஜகவினருடன் கீழ்மட்ட அளவிலிருந்து மேல்மட்டம் வரை அதிமுகவினர் அனைவரும் இணக்கமாக பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

    தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேர்தலுக்கு தயாராவது, கட்சி வளர்ச்சி பணிகள் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடன் 2-வது நாளாக நேற்றும் பழனிசாமி சென்னையில் ஆலோசனை நடத்தினார்.

    காலையில் திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், கோவை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்களும் மாலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.

    இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி கிளை பொறுப்பாளர்கள் நியமனம் எப்படி நடைபெற்று வருகிறது என கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே நிர்வாகிகளை நியமித்து, மேற்கண்ட மாவட்ட செயலாளர்கள் அளித்த படிவங்களை எடுத்து, தகவல் தொழில்நுட்ப அணி உதவியுடன், அதே கூட்டத்தில் தொடர்புகொண்டார்.

    அவர்களிடம், அதிமுகவில்தான் இருக்கிறீர்களா, இந்த படிவத்தை பூர்த்தி செய்து வழங்க யாராவது நிர்பந்தித்தார்களா, எத்தனை ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறீர்கள் என பழனிசாமி சார்பில் விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களிடம், பாஜகவுன் கூட்டணி அமைந்த பிறகு, கீழ்மட்ட அளவில் அவர்கள் நம்மோடு எப்படி பழகுகின்றனர் என்றும் கேட்டறிந்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் அவர் பேசியதாவது:

    இந்தத் தேர்தல் நமக்கு முக்கியமான தேர்தல். கட்சியின் வெற்றிக்காக அடுத்த ஓராண்டு காலம் இரவு பகலாக ஓய்வின்றி உழைக்க வேண்டும். வாக்குச்சாவடி கிளை பொறுப்பாளர்கள் நியமன பணிகளை விரைந்து முடித்து, அனைவரும் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். திமுக தவிர்த்து, தவெக உள்ளிட்ட பிற கட்சிகளை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். பாஜகவினருடன் கீழ்மட்ட அளவிலிருந்து மேல்மட்டம் வரை அதிமுகவினர் அனைவரும் இணக்கமாக பணியாற்ற வேண்டும். அப்போது தான் 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றியை உறுதி செய்ய முடியும்.

    கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் யாரும் மோதல் போக்கை கடைபிடிக்க கூடாது. திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

    இக்கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கட்சியை தோற்கடித்தவருக்கா மீண்டும் கழகத்தில் சீட்? – ரகளைக்கு தயாராகும் சேந்தமங்கலம் ரத்தத்தின் ரத்தங்கள்!

    September 22, 2025
    மாநிலம்

    ஜிஎஸ்டி குறைப்புக்கு பின்னரும் ஆவின் பால் பொருட்கள் விலை குறைக்கப்படாதது ஏன்? – அன்புமணி

    September 22, 2025
    மாநிலம்

    அதிமுக அணிக்கு விஜய் வராவிட்டால் தவெகவை திமுக அழித்துவிடும்: ராஜேந்திர பாலாஜி

    September 22, 2025
    மாநிலம்

    இந்தியன் வங்கியில் உள்ளூர் அலுவலர் நியமனங்களில் தாமதம் ஏன்? – சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

    September 22, 2025
    மாநிலம்

    சென்னை ஆட்சியர் அலுவலகம் கிண்டிக்கு மாறுகிறது: இடம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

    September 22, 2025
    மாநிலம்

    நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கட்சியை தோற்கடித்தவருக்கா மீண்டும் கழகத்தில் சீட்? – ரகளைக்கு தயாராகும் சேந்தமங்கலம் ரத்தத்தின் ரத்தங்கள்!
    • ஒளிரும் தோல் சாறு: அந்த இறுதி பளபளப்பிற்காக இந்த சாற்றை நவரத்ரியில் குடிக்கவும்
    • 2006 முதல் 2014 வரை ஜிஎஸ்டியை எதிர்த்த ஒரே முதல்வர் நரேந்திர மோடி: ஜெயராம் ரமேஷ்
    • பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா டி20 சேசிங்கில் 8-0: சுவாரஸ்ய தகவல்
    • திரிபுராவில் பிரதமர் திறந்துவைக்கும் திரிபுர சுந்தரி கோயில்: மத்திய அரசால் ரூ.52 கோடியில் புனரமைப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.