Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»”பாகிஸ்தானுக்கு நதி நீரை நிறுத்தியது சரியான நடவடிக்கையே” – மதுரை ஆதீனம் கருத்து
    மாநிலம்

    ”பாகிஸ்தானுக்கு நதி நீரை நிறுத்தியது சரியான நடவடிக்கையே” – மதுரை ஆதீனம் கருத்து

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ”பாகிஸ்தானுக்கு நதி நீரை நிறுத்தியது சரியான நடவடிக்கையே” – மதுரை ஆதீனம் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: “பாகிஸ்தான் நாட்டிற்கு தண்ணீரை நிறுத்தியது சரியான நடவடிக்கையே. அந்நாட்டுக்கு தண்ணீர் மட்டும் அல்ல, காற்றையும் வழங்கக்கூாது” என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

    மதுரை ஆதீன மடத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை மதுரை ஆதீனம் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும். அந்த நாட்டுடன் உலக நாடுகள் எந்த தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. மத தீவிரவாதத்தில் ஈடுபடுவது பாகிஸ்தான், அதனை தூண்டி விடுவது சீனா.

    காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். இதனால் பாகிஸ்தான் இருக்குமா? இல்லையா? என்பது தெரியவில்லை.

    நேரு காலத்தில் பல இடங்களை இழந்துள்ளோம். இந்த முறை பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். நல்லவராக இருப்பதை விட வல்லவராகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் பிரதமர் மோடி நம்பர் ஒன்னாக உள்ளார்.

    இந்தியா எப்போதும் சமாதானத்தை தான் விரும்புகிறது. ஆனால் துங்கும் புலியை தூண்டிவிட்டால் ஏற்படும் பின்விளைவுகளை பாகிஸ்தான் கட்டாயம் அனுபவிக்கும். உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. பாகிஸ்தானில் தான் தீவிரவாதிகள் வளர்க்கப்படுகின்றனர்.

    தீவிரவாதத்துக்கு எதிராக நதி நீரை நிறுத்துவது சரியான நடவடிக்கை தான். அவர்களுக்கு காற்று கூட வழங்கக்கூடாது. மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் வழங்குவது சரியானது தான். ஆனால் பாகிஸ்தான் நாட்டினருக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லை. இந்தியர்களை சுட்டு வீழ்த்துகின்றனர். வாஜ்பாய் ஆட்சியின் போது கொடுக்கப்பட்டது போல், இந்த முறை பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படும்.

    இன்றைய தலைமுறையினர் சினிமா மோகத்தில் சிக்கியுள்ளனர். செல்போனில் நல்ல கருத்துக்கள் ஏராளம் கிடைக்கிறது. அதை பயன்படுத்துவதில்லை. சினிமா மோகம் காரணமாக கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். நடிகர் விஜய் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

    சுதந்திர போராட்ட தியாகி சவார்கர் குறித்து ராகுல்காந்தி தவறாக பேசியிருக்கக்கூடாது. ராகுலுக்கு வயது போதாது. காங்கிரஸ் ஆட்சியில் தான் ஈழத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.” இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வட இந்தியர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கக் கூடாது என வலியுறுத்தி ஆக.19-ல் போராட்டம்: வேல்முருகன்

    August 14, 2025
    மாநிலம்

    “முதல்வர் ஸ்டாலினுக்கு திரைப்படம் பார்ப்பதற்கே பொழுதுகள் போதவில்லை” – அன்புமணி விமர்சனம்

    August 14, 2025
    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சென்னையில் கைதான 950 பேர் விடுவிப்பு

    August 14, 2025
    மாநிலம்

    “அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளதால்…” – பழனிசாமி பேச்சு

    August 14, 2025
    மாநிலம்

    “ஆளுநர் ஆர்.என்.ரவியின் அறிக்கையை படித்தால் அமித் ஷாவே சிரிப்பார்!” – அமைச்சர் கே.என்.நேரு

    August 14, 2025
    மாநிலம்

    “தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்துக்கு அதிகாரத்தில் உள்ளோரின் ஆசியே காரணம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • எடை இழப்பு: படிக்கட்டுகளைத் தவிர்ப்பது முதல் உச்ச உடற்பயிற்சியை அடைவது வரை: 3 விஷயங்களை மாற்றுவது எப்படி இந்த மனிதனை 120 முதல் 86 கிலோ வரை செல்ல உதவியது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘சக்தித் திருமகன்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்!
    • வட இந்தியர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கக் கூடாது என வலியுறுத்தி ஆக.19-ல் போராட்டம்: வேல்முருகன்
    • இரத்த சோகை அபாயத்தில் உள்ள நகர்ப்புற பெண்கள்: அதை எவ்வாறு கண்டறிவது மற்றும் தடுப்பது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பு: 44 பேர் உயிரிழப்பு, 200 பேரை காணவில்லை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.