Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் ஏமாந்து போவீர்கள்: திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எச்சரிக்கை
    மாநிலம்

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் ஏமாந்து போவீர்கள்: திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எச்சரிக்கை

    adminBy adminAugust 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் ஏமாந்து போவீர்கள்: திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எச்சரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருச்சி: தமிழகத்​தில் அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் மற்​றும் அரசு சார்ந்த பொதுத்​துறை நிறு​வனங்​களில் மொத்​தம் 10.50 லட்​சம் பேர் பணி​யாற்றி வரு​கின்​றனர். இவர்​களது கோரிக்​கை​களில் முதன்​மை​யானது பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வ​தாகும்.

    அரசு ஊழியர்​கள், அவர்​களது குடும்​பத்​தினர் என சுமார் 40 லட்​சம் வாக்​காளர்​கள் உள்ள நிலை​யில், பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் குறித்த கோரிக்கை சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் முக்​கியப் பங்கு வகிக்​கும் என்று கூறப்​படு​கிறது. இதுகுறித்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்க தலைமை ஒருங்​கிணைப்​பாளர் பிரெடெரிக் எங்​கெல்ஸ் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: தமிழக அரசில் கால​முறை ஊதி​யத்​தில் பணிபுரி​யும் அரசு ஊழியர், ஆசிரியர்​களில் 1,98,331 பேர் பழைய ஓய்​வூ​திய திட்​டத்​தி​லும், 6,24,140 பேர் புதிய ஓய்​வூ​தியதிட்​டத்​தி​லும் உள்​ளனர்.

    சிபிஎஸ் திட்​டத்​தில் கடந்த மார்ச் 31-ம் தேதிவரை 45,625 பேர் ஓய்வு பெற்​றுள்​ளனர். 7,864 பேர் பணி​யின்​போது உயி​ரிழந்​து​விட்​டனர். 2003-க்​குப் பின் பணி​யில் சேர்ந்த அரசு ஊழியர், ஆசிரியர்​களுக்கு ஓய்​வூ​தி​யம், குடும்ப ஓய்​வூ​தி​யம், பணிக்​கொடை எது​வும் கிடை​யாது. இதர மாநிலங்​களில் அரசு ஊழியர், ஆசிரியர்​களுக்கு ஓய்​வு​பெறும் நாளில் இருப்​பில் உள்ள 40 சதவீத தொகைக்கு சந்தை மதிப்​புக்கு ஏற்ப ஓய்​வூ​தி​யம் கிடைக்​கும். பணிக்​கொடை மற்​றும் குடும்ப ஓய்​வூ​தி​யம் உண்​டு.

    கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது பழைய ஓய்​வூ​தி​யத்திட்​டம் அமல்​படுத்​தப்​படும் என வாக்​குறுதி அளித்​து​விட்​டு, ஆட்​சிக்கு வந்து 4 ஆண்​டு​களுக்கு மேலாகி​யும் கோரிக்​கையை நிறைவேற்​றாமல் இருப்​பது நியாயமல்ல. அடுத்த ஆண்டு ஏப்​ரல் அல்​லது மே மாதம் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில், அதற்கு முன் பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும். எங்​களுக்கு தேவை வாக்​குறுதி அல்ல, பழைய ஓய்​வூ​திய திட்​டத்​துக்​கான அரசாணை தான் வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

    தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணை பொதுச் செயலாளர் கோ.நாகராஜன் கூறும்​போது, “பு​திய ஓய்​வூ​திய திட்​டம் தொடர்​பாக மத்​திய அரசு எந்த அழுத்​தத்​தை​யும் கொடுக்​காத நிலை​யில், பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை ஒரே கையெழுத்​தில் நிறைவேற்​றி​விட முடி​யும். வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மீண்​டும் வாக்​குறுதி மட்​டும் கொடுத்து வென்​று​விடலாம் என்று கரு​தி​னால், நிச்​ச​யம் ஏமாந்து போவார்​கள். எனவே, இந்த ஆட்​சிக் காலத்​திலேயே பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும். இல்​லா​விட்​டால் வரும் தேர்​தலின்​போது அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களின் நம்​பிக்​கையை பெற முடி​யாது” என்​றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வேற்றுமையில் ஒற்றுமை என்பதே பாரதத்தில் சிறப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

    August 17, 2025
    மாநிலம்

    விவசாயிகள் விண்ணப்பித்ததும் பயிர் கடன் வழங்கும் திட்டம் – முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கம்

    August 17, 2025
    மாநிலம்

    எம்எல்ஏ விடுதிக்குள் அத்துமீறியதாக அமலாக்கத் துறை மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவு

    August 17, 2025
    மாநிலம்

    டிட்டோஜேக் ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் நாளை பேச்சுவார்த்தை

    August 17, 2025
    மாநிலம்

    “தோற்றுப் போனால் அதிமுக வாக்கு வங்கியை பாஜக கபளீகரம் செய்துவிடும்!” – திமுகவில் இணைந்த வா.மைத்ரேயன் நேர்காணல்

    August 17, 2025
    மாநிலம்

    ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? – அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்

    August 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அஸ்வின் கருத்தால் எழுந்த சர்ச்சை: டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்தத்தில் விதிமீறலா? – சிஎஸ்கே அணி நிர்வாகம் விளக்கம்
    • நம்பிக்கை இன்றி நடித்த அனுபமா!
    • வேற்றுமையில் ஒற்றுமை என்பதே பாரதத்தில் சிறப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்
    • நிணநீர் அமைப்பு என்றால் என்ன: அது அடைக்கப்பட்டுள்ளதற்கான 7 அறிகுறிகள் – இந்தியாவின் நேரங்கள்
    • பேகா ஓபன் ஸ்குவாஷ்: இறுதி போட்டியில் அனஹத் சிங்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.