Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பழங்குடியின மக்களின் மொழிகளை பாதுகாக்க ரூ.3 கோடியில் ஒலி, ஒளி ஆவணங்களாக பதிவு: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
    மாநிலம்

    பழங்குடியின மக்களின் மொழிகளை பாதுகாக்க ரூ.3 கோடியில் ஒலி, ஒளி ஆவணங்களாக பதிவு: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

    adminBy adminSeptember 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பழங்குடியின மக்களின் மொழிகளை பாதுகாக்க ரூ.3 கோடியில் ஒலி, ஒளி ஆவணங்களாக பதிவு: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பழங்​குடி​யின மக்​களின் மொழிகளை பாது​காக்க ரூ.3 கோடி​யில் ஒலி, ஒளி ஆவணங்​களாக பதிவு செய்​யப்​பட்டு வரு​வ​தாக துணை முதல்​வர் உதயநிதி தெரி​வித்​துள்​ளார். ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலத்​துறை சார்​பில், ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின இளைஞர்​களுக்​கான 3 நாள் ஆதி கலைக்​கோல் பயிற்சி பட்​டறை சென்னை நந்​தம்​பாக்​கத்​தில் நேற்று தொடங்​கியது. இதனை துணை முதல்​வர் உதயநிதி தொடங்கி வைத்​து, கண்​காட்​சி​யில் அமைக்​கப்​பட்​டிருந்த அரசு சமூக நீதி கல்​லூரி விடுதி மாணவர்​களின் ஓவி​யம் மற்​றும் சிற்​பக்​கலை படைப்​பு​களை​யும், பாரம்​பரியமிக்க இசைக்​கருவி​களை​யும் பார்​வை​யிட்​டார்.

    பின்​னர் அவர் பேசி​ய​தாவது: கலை என்​பது மக்​களு​டைய வாழ்க்​கை​யில் ஒரு முக்​கிய​மான அங்​க​மாகும். ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின மக்​களு​டைய கலை வடிவங்​களை இளம்​தலை​முறை​யினர் தெரிந்து கொள்ள வேண்​டும். ஆதி​தி​ரா​விட மக்​களு​டைய நாட்​டுப்​புற பாடல்​கள் எல்​லாம், ஒடுக்​கப்​பட்ட மக்​களு​டைய விடு​தலைக்​கான குரல்​களாக இருந்​திருக்​கின்​றன. நாட்​டுப்​புறப் பாடல்​களை கேட்​டோம் என்​றால், சமூகக் கொடுமை​கள், இயற்கை சீற்​றங்​களில் இருந்து மக்​களைக் காப்​பாற்​றிய ஹீரோக்​களை அறிந்து கொள்​ளலாம்.

    அடித்​தட்டு மக்​களின் பாடலாக இருக்​கட்​டும், நடன​மாக இருக்​கட்​டும், இலக்​கிய​மாக இருக்​கட்​டும், ஓவிய​மாக இருக்​கட்​டும், அதில் ஒரு​வித​மான ஏக்​கம், கோபம், எதிர்​பார்ப்பு எல்​லாமே இருக்​கும். அடித்​தட்டு மக்​களு​டைய கலைகளில் இருப்​பவை​தான் தமிழகத்​தினுடைய உண்​மை​யான வரலாறு. மற்​றவர்​களை​விட கலைக்​கும், கலைஞர்​களுக்​கும் மதிப்​பும் மரி​யாதை​யும் எந்த நேரத்​தி​லும், எந்த இடத்​தி​லும் அதி​க​மாக கிடைக்​கும். ஆனால் அனைத்து கலைஞர்​களுக்​கும் சமமான இடம் கிடைக்​கிறதா என்​றால் இல்​லை.

    உயர்​தட்டு மக்​களு​டைய கலைகளுக்கு ஒரு மதிப்​பு. உழைக்​கின்ற, ஒடுக்​கப்​பட்ட, ஏழை, எளிய மக்​களு​டைய கலைகளுக்கு வேறு மாதிரி​யான மதிப்பு நம் சமு​தா​யத்​தில் இருந்து வரு​கிறது. இந்த ஏற்​றத்​தாழ்வை உடைக்​கும் முயற்​சிகளை தொடர்ந்து திமுக அரசு எடுத்து கொண்​டிருக்​கிறது. இன்​றைக்கு ஆதி​தி​ரா​விடர் மக்​களின் கலாச்​சா​ரத்தை பிர​திபலிக்​கும் இலக்​கியப் படைப்​பு​கள், ஆங்​கிலத்​தில் மொழிபெயர்க்​கப்​பட்டு வரு​கின்​றன. பழங்​குடி​யின மக்​களு​டைய மொழிகளை பாது​காக்க ரூ.3 கோடி​யில் ஒலி, ஒளி ஆவணங்​களாக பதிவு செய்​யப்​பட்டு தொடர்ந்து அந்த சேவை​களை​யும் அரசு செய்து கொண்​டிருக்​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

    இந்​நிகழ்​வில் அமைச்​சர்​கள் தா.மோ.அன்​பரசன், மா.ம​திவேந்​தன், தமிழ்​நாடு ஆதி​தி​ரா​விடர் வீட்டு வசதி மற்​றும் மேம்​பாட்​டுக்​கழக தலை​வர் நா.இளை​ய​ராஜா, துறை செயலர் க.லட்​சுமி பிரி​யா, ஆணை​யர் த.ஆனந்த், தமிழ்​நாடு ஆதி​தி​ரா​விடர் வீட்டு வசதி மற்​றும் மேம்​பாட்​டுக்​கழக மேலாண்மை இயக்​குநர் க.சு.கந்​த​சாமி, தமிழ்​நாடு எம்​ஜிஆர் திரைப்பட மற்​றும் தொலைக்​காட்சி நிறு​வனத்​தின் தலை​வர்​ டிராட்​ஸ்​கி மருது உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கண் தொடர்பான நோய்களை உடனே கண்டறிய சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும்: அஸ்​வின் அகர்​வால் வலியுறுத்தல்

    September 23, 2025
    மாநிலம்

    தனிக்கட்சி ஆரம்பிக்கப் போகிறேனா? – அண்ணாமலை சொன்ன ஷாக் பதில்!

    September 23, 2025
    மாநிலம்

    துறையூர் அருகே முதல்வர் திறந்து வைத்த ஒரே ஆண்டில் அரசுப் பள்ளி கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

    September 23, 2025
    மாநிலம்

    நெல்லையில் 1,100 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரி வழக்கு: பள்ளிவாசலின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம் 

    September 23, 2025
    மாநிலம்

    திமுக பொதுக்கூட்டம் நடந்த சாலையில் ஆம்புலன்ஸை விட வேண்டாம் என பேசிய நாகர்கோவில் மேயர்: வீடியோவால் சர்ச்சை

    September 23, 2025
    மாநிலம்

    புதை சாக்கடை அடைப்பை நீக்கியபோது 2 துப்புரவு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழப்பு

    September 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜிஎஸ்டி 2.0 அமல்: ஐஸ்கிரீம் முதல் ஏசி வரை – விலை குறைவு பட்டியல்
    • நீண்ட ஆயுள் உணவுகள்: நீண்ட ஆயுள் நிபுணர் 6 உணவுகளைப் பகிர்ந்து கொள்கிறார், அவை தொடர்ந்து நுகரப்படும்போது மனிதர்களில் ஆயுட்காலம் அதிகரிக்கும்
    • உ.பி.யில் ஜாதி கூட்டங்களுக்கு தடை: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு அமல்
    • அக்டோபர் மாதம் வெளியாகும் ‘மருதம்’!
    • கண் தொடர்பான நோய்களை உடனே கண்டறிய சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும்: அஸ்​வின் அகர்​வால் வலியுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.