Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பள்ளிப்பட்டு விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகளால் அவதி 
    மாநிலம்

    பள்ளிப்பட்டு விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகளால் அவதி 

    adminBy adminAugust 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பள்ளிப்பட்டு விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகளால் அவதி 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பள்ளிப்பட்டு வட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகளால் பொதுமக்கள், விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்று, பள்ளிப்பட்டு வட்டம். ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள இந்த வட்டத் தில, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய இரு பேரூராட்சிகள் மற்றும் 33 ஊராட்சிகள் உள்ளன. இந்த வட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

    மலையும் மலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கிய பள்ளிப்பட்டு வட்டத்தில் உள்ள வனப்பகுதிகள், பள்ளிப்பட்டு வட்ட பகுதி களை ஒட்டியுள்ள ஆந்திர வனப்பகுதிகளில் இருந்து இரை தேடி வரும் குரங்குகள் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வருவதால் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள், விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்ததாவது: பள்ளிப்பட்டு வட்டத்தில் உள்ள நெடியம், பண்டரவேடு, புண்ணியம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் ஆந்திர வனப்பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான குரங்குகள் இரை தேடி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. அவ்வாறு வரும் குரங்குகளின் அட்டகாசத்தால் பள்ளிப்பட்டு வட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்ட பகுதிகளில்

    அட்டகாசம் செய்யும் குரங்குகள்.

    குறிப்பாக, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய பேரூராட்சி பகுதிகள் மற்றும் நெடியம், கொளத்தூர், கர்லம்பாக்கம், குமார ராஜுபேட்டை, பண்டரவேடு, புண்ணியம், வடகுப்பம், சூரராஜூப்பட்டடை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளுக்கு நாள்தோறும் வனப்பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான குரங்குகள் வருகின்றன.

    அவ்வாறு வரும் குரங்குகள், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள தென்னை மரங்களில் ஏறி, இளநீர், தேங்காய்களை பறித்து வீணாக்குகின்றன. கரும்பு தோட்டங்களை நாசமாக்குகின்றன. மாந்தோப்புகளில் புகுந்து மாம்பழங்களை கடித்து வீணாக்குகின்றன. அதேபோல், காய்கறி தோட்டங்களிலும் நுழையும் குரங்குகள் காய்கறி பயிர்களை சேதப்படுத்துகின்றன.

    இந்த குரங்குகள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ள உணவு பொருட்களை அபகரித்து உண்கின்றன. வீட்டு உபயோகப் பொருட்களை நாசம் செய்கின்றன. சாலை களில் சுற்றித் திரியும் இந்த குரங்குகளால் பாத சாரிகள், வாகன ஓட்டிகள் பல்வேறு இன் னலுக்குள்ளாகி வருகின்றனர்.

    நெடியம் பகுதியில் மலையில் அமைந்துள்ள செங்கல்வராய சுவாமி கோயில் வளாகத்தில் சுற்றித் திரியும் குரங்குகளின் அட்டகாசத்தால் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வரு கின்றனர். இப்படி பல ஆண்டுகளாக அட்டகாசம் செய்து வரும் குரங்குகள் குறித்து, வனத் துறையினரிடம் பல முறை புகார் அளித்தும் பல னில்லை. ஆகவே, இனியாவது பள்ளிப்பட்டு வட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகளின் அட்ட காசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாமக வழக்கு விவகாரம்: ராமதாஸ், அன்புமணியிடம் தனது அறையில் பேச நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு

    August 8, 2025
    மாநிலம்

    விநாயகர் சதுர்த்தி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும்: இந்து முன்னணி அழைப்பு

    August 8, 2025
    மாநிலம்

    தேசிய தலைமை வங்கி பதவியில் சிறுபான்மையினர் புறக்கணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. ஆதங்கம்

    August 8, 2025
    மாநிலம்

    சமூக பொறுப்பு திட்டத்தில் சீரமைக்கப்பட்ட மணப்பாக்கம் ஏரி: பாசன வசதி பெறும் 150 ஏக்கர் விளை நிலங்கள்

    August 8, 2025
    மாநிலம்

    நமத்துப் போன நம்பிக்கை இல்லா தீர்மானம்! – திமுக துணை மேயரை நம்பி ஏமாந்த அதிமுக

    August 8, 2025
    மாநிலம்

    தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கும் விவகாரம்: மாநகராட்சி ஆணையருக்கு தேசிய எஸ்சி ஆணையம் நோட்டீஸ்

    August 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாமக வழக்கு விவகாரம்: ராமதாஸ், அன்புமணியிடம் தனது அறையில் பேச நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு
    • அறைகளுக்குள் நடந்து, ஏன் என்பதை மறந்துவிடுவது? ‘வீட்டு வாசல் விளைவு’ உங்கள் மூளை உண்மையில் என்ன செய்கிறது என்பதை விளக்குகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விநாயகர் சதுர்த்தி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும்: இந்து முன்னணி அழைப்பு
    • கெட்ட மூச்சு அல்லது இன்னும் ஏதாவது? உங்கள் சுவாசம் சமிக்ஞை செய்யக்கூடிய 9 மருத்துவ சிக்கல்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசா மூத்த புட்ச் வில்மோர் ஓய்வு பெறுகிறார்: பதிவு ஸ்டார்லைனர் தாமதத்திற்குப் பிறகு சில மாதங்களுக்குப் பிறகு ஏஜென்சியை விட்டு வெளியேறுகிறார்; 3 பயணங்களுக்கு மேல் சுற்றுப்பாதையில் 464 நாட்கள் உள்நுழைந்தது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.