அதனால், குறிப்பிட்ட கலங்கல் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தநிலையில், பாலம் அமைக்க, கடந்த மார்ச் மாதம் நகர உள்கட்டமைப்பு மேம்படுத்தும் திட்டத்தில் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம், தற்போது 350 மீட்டர் நீளத்துக்கு சிறிய அளவிலான உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டுமான பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாதுளங்குப்பத்தை சேர்ந்த பானு கூறியதாவது: கலங்கலில் உபரிநீர் வெளியேறும்போது பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அப்பகுதியை கடந்த செல்வதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கும் நிலை இருந்தது. தற்போது, பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

