Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“பல்கலை.களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உயர் கல்வியை திமுக சீரழிக்கிறது” – ஓபிஎஸ்
    மாநிலம்

    “பல்கலை.களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உயர் கல்வியை திமுக சீரழிக்கிறது” – ஓபிஎஸ்

    adminBy adminMay 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “பல்கலை.களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உயர் கல்வியை திமுக சீரழிக்கிறது” – ஓபிஎஸ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உயர் கல்வியை திமுக சீரழித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உயர் கல்வியால்தான் நாட்டின் வளர்ச்சியை உருவாக்க முடியும். அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைவது உயர் கல்வியே இப்படிப்பட்ட உயர் கல்வி உன்னத நிலையை அடைய வேண்டுமென்றால் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டும், கட்டமைப்பு வசதிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், கடந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத அவல நிலை நிலவுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மட்டும் 50 விழுக்காடு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்தப் பணியிடங்களில் முப்பது விழுக்காடு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக பதிவாளர்களை அரசு உயர் கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது. இந்த முப்பது விழுக்காடு பணியிடங்களை நிரப்பும்போது, பத்து விழுக்காடு பணியிடங்கள் ஒய்வு பெற்ற பேராசிரியர்களைக் கொண்டும், பத்து விழுக்காடு பணியிடங்கள் தொழில் வல்லுநர்களைக் கொண்டும், பத்து விழுக்காடு பணியிடங்கள் வெளிநாட்டு பேராசிரியர்களைக் கொண்டும் நிரப்ப வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இதிலிருந்து, பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள உதவி பேராசிரியர். இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த நான்கு ஆண்டு காலமாக திமுக அரசு அக்கறை செலுத்தவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்றால். அங்கு தரமான கல்வியை எப்படி அளிக்க முடியும் என்ற கேள்வி இயற்கையாக எழுகிறது.

    இது ஒருபுறம் என்றால், மறுபுறம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. முதுநிலைப் பட்டம், முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்று அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்களாக வேண்டும் என்ற கனவில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் திமுக அரசின் இந்த முடிவினால் சிதைந்து போயிருக்கிறது. மொத்தத்தில், உயர் கல்வியிலும் அக்கறை இல்லாத, இளைஞர்களின் எதிர்காலத்திலும் அக்கறை இல்லாத அரசாக கொண்டிருக்கிறது. திமுக அரசின் மக்கள் கண்டனத்திற்குரியது.

    முதல்வர் ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை முறையாக உடனுக்குடன் நிரப்பி, அதன் மூலம் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாமக நெருக்கடியை சமாளிக்க அன்புமணி டெல்லியில் முகாம்: தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க முயற்சி

    July 1, 2025
    மாநிலம்

    சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன்

    July 1, 2025
    மாநிலம்

    ‘அஜித்குமார் மரணத்துக்கு காரணமானோரை கைது செய்யாதது ஏன்?’ – தமிழக பாஜக சரமாரி கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    June 30, 2025
    மாநிலம்

    செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டி!

    June 30, 2025
    மாநிலம்

    சிறு வணிகர்களுக்கான மின் கட்டண சலுகைகள் என்னென்ன? – தமிழக அரசு அறிவிப்பு

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாமக நெருக்கடியை சமாளிக்க அன்புமணி டெல்லியில் முகாம்: தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க முயற்சி
    • பளபளப்புக்குப் பின்னால்: போடோக்ஸ், குளுதாதயோன் மற்றும் வயதான எதிர்ப்பு மருந்துகளின் சொல்லப்படாத அபாயங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தெலுங்கு மாநிலங்களில் பாஜக தலைவர்கள் மாற்றம்: கட்சி எம்எல்ஏ ராஜினாமா
    • சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன்
    • ஜப்பானின் ‘தற்கொலை காடு’ பலவீனமான இதயமுள்ளவர்களுக்கு அல்ல-5 முதுகெலும்பு குளிர்ச்சியான உண்மைகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.