Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ராமதாஸ் கோரிக்கை
    மாநிலம்

    பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ராமதாஸ் கோரிக்கை

    adminBy adminSeptember 23, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ராமதாஸ் கோரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பருவமழைக்கு முன்பாக மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப் படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் தற்போது பரவலாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது. தலைநகர் சென்னையில் கட்டிடங்களின் அதிகரிப்பாலும்,நெருக்கடியாளும் போதுமான வடிகால் வசதிகள் முறையாக இல்லாததாலும், நெகிழி குப்பைகளின் பயன்பாட்டினாலும் கனிசமான மழைக்கே தலைநகர் சென்னை தண்ணீரில் தத்தளிக்கின்ற அபாயகரமான சூழல் முன்பு எல்லாம் நிலவியது.

    இதனால் வீடுகள், தெருக்கள், சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கும், புழங்குவதற்கும் மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். புறநகர் பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் நிலைமை இப்போதும் மோசமாக இருக்கிறது. ஓரிரு நாள் மழைக்கே இந்த நிலை என்றால் வடகிழக்கு பருவ மழை காலங்களில் அதிகப்படியான பாதிப்புகளால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். இதுபோன்ற இடர்பாடுகள் நிகழாமல் தவிர்க்க ஊள்ளாட்சி துறை கண்கானித்து பாதுகாப்பு பணிகளை தொடர்ந்து செய்திட வேண்டும்.

    மழை வெள்ளத்தால் பாதிப்பு அடையும் என கண்டு அறிந்த பகுதிகளை பேரிடர் மேலாண்மைத் துறை, உள்ளாட்சி, பொதுப்பணித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மற்றும் சுகாதார துறை இணைந்து முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    சென்னை மாநகரின் குடிநீர் தேவையை போக்கும் செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி, புழல் ஏரி மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் கண்காணிப்பை மேற்கொண்டு ஏரிகளின் கொள் அளவு நீரை பாதுகாப்பாக தேக்கம் செய்ய பொதுப்பணி துறை வழி செய்ய வேண்டும். வடிகால் வெள்ளம் கரைபுரண்டோடும் பகுதிகளை சீரமைத்து, குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    கடந்த கால அனுபவங்களை கொண்டும், தற்போதைய சுமாரான மழையால் ஏற்படும் பாதிப்புகளை கொண்டும் அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராமப்புறங்கள் என அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கும் பகுதிகள், வெள்ளம் சூழும் பகுதிகள்போன்றவற்றை கண்டு அறிந்து அப்பகுதிகளில் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் படி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வடிகால், கழிவு நீர் கால்வாய்கள், குளம், குட்டைகள் போன்றவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

    தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளியில் இயங்கும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல இடங்களில் மழையில் நெல்மணிகள் நனைந்து முளைப்புத்திறன் ஏற்பட்டு வீணாகின்ற செய்திகள் வந்து கொண்டு உள்ளன. இவற்றை நிவர்த்தி செய்ய அன்று வருகின்ற நெல் மூட்டைகளை அன்றே எடை போட்டு கொள்முதல் செய்து அரசின் பாதுகாப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    மூட்டைகளை மூடுவதற்கு போதிய விரிப்புகள் கொள்முதல் செய்ய வேண்டும். விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பயிர்களும் சேதமடையாமலிருக்க வெள்ளம் சூழும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் பாசன வாய்க்கால்கள், நீரோடைகளை சீரமைக்க வேண்டும்.

    உப்பளங்கள் போன்ற திறந்தவெளியில் இயங்கும் தொழிற்பகுதிகளிலும் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை காலத்தில் மின் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது அதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை உடனே ஏற்படுத்தி மழை காலத்தில் தங்கு தடை இன்றி மின் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் அதிக பாதிப்புகளை சந்திக்கும் காவிரி டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அணைகள், அணைக்கட்டுகள், தடுப்பணைகள், ஏரிகள் போன்றவற்றை கண்காணிப்பதுடன், அவைகளிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் ஆறுகள், கிளை ஆறுகள் மூலமாக தங்கு தடையின்றி வெளியேறி ஏரிகளில் நிரம்பவும், பாசனப்பகுதிகளில் பாய்ந்தோடவும், கடைமடை வரை செல்லவும் இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வெள்ளத்தால் சூழப்பட்டு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை கண்டு அறிந்து மக்களை போதிய வசதிகள் உடன் முகாமில் தங்க வைக்க முன்னேற்பாடுகள் தயாராக இருக்க வேண்டும். மழைக்கால நோய் தாக்குதல்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் குக்கிராமங்கள் தொடங்கி மாநகரங்கள் வரை மருத்துவ கட்டமைப்புகளை சீரமைத்து நோய் தொற்றுகளுக்கு தேவையான மருந்துகள் போதுமான அளவில் இருப்பு வைத்திருக்கவும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் திறம்பட பணியாற்றவும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சாலை விபத்தில் உயிரிழந்த திமுகவினர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் – ஸ்டாலின் வழங்கினார்

    September 23, 2025
    மாநிலம்

    “காய்த்த மரம்தான் கல்லடி படும்” – விஜய் விமர்சனத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

    September 23, 2025
    மாநிலம்

    கண் தொடர்பான நோய்களை உடனே கண்டறிய சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும்: அஸ்​வின் அகர்​வால் வலியுறுத்தல்

    September 23, 2025
    மாநிலம்

    தனிக்கட்சி ஆரம்பிக்கப் போகிறேனா? – அண்ணாமலை சொன்ன ஷாக் பதில்!

    September 23, 2025
    மாநிலம்

    பழங்குடியின மக்களின் மொழிகளை பாதுகாக்க ரூ.3 கோடியில் ஒலி, ஒளி ஆவணங்களாக பதிவு: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

    September 23, 2025
    மாநிலம்

    துறையூர் அருகே முதல்வர் திறந்து வைத்த ஒரே ஆண்டில் அரசுப் பள்ளி கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

    September 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நவரத்ரியின் போது வங்காளிகள் சாயல் அல்லாத உணவை சாப்பிடுவதற்கான காரணம் விளக்கினார்: மா துர்காவின் ஹோம்கமிங் உடன் மீன் மற்றும் இறைச்சியின் இணைப்பு
    • பிரதமர் மோடியாக நடிப்பது பெரிய பொறுப்பு: உன்னி முகுந்தன்
    • சாலை விபத்தில் உயிரிழந்த திமுகவினர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் – ஸ்டாலின் வழங்கினார்
    • கரேலா ஜூஸ் வெர்சஸ் வேப்பம் சாறு: இது கல்லீரல் போதைப்பொருள், இரத்த சர்க்கரை, தோல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மூன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்காக 10 விண்வெளி வீரர்களின் அனைத்து அமெரிக்க வகுப்பை நாசா அறிவிக்கிறது; பெண்கள் முதல் முறையாக ஆண்களை விட அதிகமாக உள்ளனர் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.