Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பருவதமலையில் இருந்து கீழே இறங்கியபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 2 பெண்களின் உடல்கள் மீட்பு
    மாநிலம்

    பருவதமலையில் இருந்து கீழே இறங்கியபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 2 பெண்களின் உடல்கள் மீட்பு

    adminBy adminAugust 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பருவதமலையில் இருந்து கீழே இறங்கியபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 2 பெண்களின் உடல்கள் மீட்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவண்ணாமலை: சென்​னை​யில் இருந்து ஆன்​மிகச் சுற்​றுலா சென்ற குழு​வினர் பரு​வதமலை​யில் இருந்து கீழே இறங்​கிய​போது, மழை வெள்​ளத்​தில் சிக்கி 2 பெண்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். திரு​வண்​ணா​மலை மாவட்​டம் கலசப்​பாக்​கம் அடுத்த தென்​ம​காதேவ மங்​கலம் கிராமத்​தில் உள்ள பிரசித்தி பெற்ற மல்​லி​கார்​ஜுனர் மற்​றும் பிரம்​மாம்​பிகை கோயில் 4,560 அடி உயர​முள்ள பரு​வத மலை​யில் உள்​ளது. இந்​தக் கோ​யிலுக்கு நேற்று முன்​தினம் அதி​காலை சென்னை திரு​வேற்​காடு பகு​தியி​லிருந்து 15 பேர் வாக​னத்​தில் வந்​துள்​ளனர்.

    இவர்​கள், மலை​யேறிச் சென்று சுவாமி தரிசனம் முடித்​து​விட்டு நேற்று முன்​தினம் மாலை கீழே இறங்கி வந்​துள்​ளனர். ஓடையை கடக்க முயற்சி இந்​நிலை​யில், அன்​றைய தினம் பெய்த கனமழை​யி​னால் காட்​டாற்று வெள்​ளம் பெருக்​கெடுத்​துள்​ளது. குறிப்​பாக, வனத்​துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள ஓடை​யில் மழைவெள்​ளம் அதிக அளவில் பெருக்​கெடுத்து ஓடி​யுள்​ளது.

    இதைக் கடந்​து​தான் வெளியே வர முடி​யும். எனவே, அனை​வரும் ஒரு​வருக்கு ஒரு​வர் கைகளை கோத்​துக்​கொண்டு ஓடையைக் கடக்க முயன்​றுள்​ளனர். அப்​போது, சென்னை வடபழனியைச் சேர்ந்த ராஜி​யின் மகள்சங்​கத்​தமிழ்​(36), திரு​வேற்​காடு பகு​தி​யைச் சேர்ந்த மனோகரனின் மனைவி இந்​தி​ரா(58) ஆகிய இரு​வரும் மழை வெள்​ளத்​தில் அடித்துச் செல்​லப்​பட்​டனர்.

    இதுகுறித்து உடனடி​யாக வனத்​துறை​யினருக்கு தகவல் தெரி​வித்​துள்​ளனர். பின்​னர், தீயணைப்பு வீரர்​கள் வரவழைக்​கப்​பட்டு தேடும் பணி​யில் ஈடு​பட்​டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்​சி​யர் க.தர்ப்​பக​ராஜ், மாவட்​டக் காவல் கண்​காணிப்​பாளர் சுதாகர், வரு​வாய்த் துறை​யினர் மற்​றும் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் ஆகியோர் சம்பவ இடத்​துக்கு சென்று மீட்பு பணி​களை பார்​வை​யிட்​டனர்.

    நேற்று முன்​தினம் இரவு வரை பெண்​களின் உடல்​களைக் கண்​டு​பிடிக்க முடிய​வில்​லை. பின்​னர் நேற்று காலை சம்பவ இடத்​துக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழு​வினர், மழை வெள்​ளத்​தில் அடித்துச் செல்​லப்​பட்ட பெண்​களின் உடல்​களைத் தேடும் பணி​யில் ஈடு​பட்​டனர். அப்​போது சம்பவ இடத்​தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலை​வில் மழை வெள்​ளம் சென்ற பாதை​யில் இந்​தி​ரா​வின் உடலை தீயணைப்பு வீரர்​கள் மீட்​டனர்.

    அதைத் தொடர்ந்​து, சுமார் 7 கி.மீ. தொலை​வில் உள்ள கோயில்​மா​தி​மங்​கலம் கிராமத்​தில் உள்ள ஏரி அரு​கில் சங்​கத்​தமிழின் உடலை தீயணைப்பு துறை​யினர் மீட்​டனர். இரண்டு உடல்​களை​யும் கைப்​பற்​றிய போலீ​ஸார், பிரேதப் பரிசோதனைக்​காக திரு​வண்​ணா​மலை அரசு மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவதுபோல் போலி பிம்பம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்

    August 12, 2025
    மாநிலம்

    ஆட்டோ, பைக் டாக்ஸி, கார் கட்டணத்துக்கு புதிய கொள்கை: தமிழக அரசு விரைவில் அறிமுகம் செய்கிறது

    August 12, 2025
    மாநிலம்

    நோயாளிகளின் விவரங்கள், ஆவணங்கள் முறையாக பராமரிக்க வேண்டும்: மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

    August 12, 2025
    மாநிலம்

    சென்னையில் 135 மின்சார ஏசி பேருந்துகள் சேவை: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    August 12, 2025
    மாநிலம்

    திருவனந்தபுரத்தில் இருந்து 5 எம்பிக்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

    August 12, 2025
    மாநிலம்

    சட்டவிரோத வருவாயை பிரிக்கவே மாதந்தோறும் கூட்டம்: கனிமவள அதிகாரிகள் மீது நீதிபதி கடும் அதிருப்தி

    August 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவதுபோல் போலி பிம்பம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்
    • போல்ட் சுவாச சோதனை மூலம் வீட்டில் உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை எவ்வாறு சரிபார்க்க வேண்டும்: சி.எம்.சி வேலூர் மருத்துவரின் உதவிக்குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கோயிலை இடித்து கட்டியதாக புகார்: உ.பி.யில் முஸ்லிம் தர்காவை சேதப்படுத்திய இந்துத்துவா அமைப்பினர்
    • ஆட்டோ, பைக் டாக்ஸி, கார் கட்டணத்துக்கு புதிய கொள்கை: தமிழக அரசு விரைவில் அறிமுகம் செய்கிறது
    • அதிகப்படியான தேன் சாப்பிடுவது அதன் சொந்த பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது: இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் 5 வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.