Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் மீண்டும் கிராமங்களில் பரவுவதால் பதற்றம்
    மாநிலம்

    பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் மீண்டும் கிராமங்களில் பரவுவதால் பதற்றம்

    adminBy adminJuly 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் மீண்டும் கிராமங்களில் பரவுவதால் பதற்றம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காஞ்சிபுரம்: ஏக​னாபுரத்தை மைய​மாக வைத்து நடை​பெற்று வந்த பரந்​தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்​டம் விரிவடைந்து நேற்று வளத்​தோட்​டம் பகு​தி​யில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற பொது​மக்​கள் பரந்​தூர் விமான நிலை​யத் திட்டத்தை கைவிட வேண்​டும் என்று வலி​யுறுத்தி கோஷங்​களை எழுப்​பினர்.

    காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்​தூர் சுற்​று​வட்​டார கிராமங்​களை உள்​ளடக்கி பசுமை வெளி விமான நிலை​யம் அமைக்க மத்​திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வரு​கின்​றன.

    பரந்​தூர் மற்​றும் அதனை சுற்​றி​யுள்ள 13 கிராமங்​களில் இருந்து 5300 ஏக்​கர் நிலம் கையகப்​படுத்​தப்பட உள்​ளது. ஏகா​னாபுரம் உள்​ளிட்ட சில கிராமங்​கள் முழு​மை​யாக கையகப்​படுத்​தப்பட உள்​ளன. விவசாய நிலங்​கள், வீடு​கள், மனை​கள், ஏரி, குளங்​கள் என பல்​வேறு வகை​யான நிலங்​கள் இந்த விமான நிலை​யத்​துக்​காக கையகப்​படுத்​தப்பட உள்​ளன.

    இந்த விமான நிலை​யம் அமைப்​ப​தற்​கான இடங்​களை தேர்வு செய்து நிலம் கையகப்​படுத்​தும் பணி​களை தமிழ்​நாடு தொழில் முதலீட்டு கழகம் எடுத்து வரு​கிறது. இந்த அமைப்பு சார்​பில் அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​பட்​டு, பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

    புதிய விமான நிலைய திட்​டத்​துக்​காக நிலங்​களை கையகப்​படுத்தி பத்​திரப் பதிவு செய்​து, நில உரிமை​யாளர்​களின் வங்கி கணக்​கில் பணம் வரவு வைக்​கும் முயற்​சியை விமான நிலைய திட்ட அதி​காரி​கள் எடுத்து வரு​கின்​றனர். இது​வரை 19 பேரிடம் இருந்து நிலங்​கள் வாங்​கப்​பட்​டுள்​ளன. நிலங்​கள் வாங்​கப்​பட்​டதைத் தொடர்ந்து போராட்​டம் தீவிரமடைந்​தது.

    தங்​கள் கோரிக்​கைக்கு மதிப்​பில்லை என்று கூறி ஏகனாபுரம் பொது​மக்​கள் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இவர்​களுக்கு பல்வேறு அரசி​யல் கட்​சிகள் ஆதரவு தெரி​வித்து வரு​கின்​றனர். சட்​டப்​போ​ராட்​டம் நடத்​து​வதற்​கான நடவடிக்​கை​களி​லும் போராட்டக் குழு​வினர் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

    விரிவடை​யும் போராட்​டம்: பரந்​தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்​டக் குழு, ஏகனாபுரத்​தில் நடத்தி வரும் போராட்​டம் 1,095-வது நாளை எட்​டி​யுள்ள நிலை​யில் வளத்​தோட்​டம் மக்​களும் போராட்​டத்தை தொடங்​கி​யுள்​ளனர். 200-க்​கும் மேற்பட்​டோர் இந்​தப் போராட்​டத்​தில் பங்​கேற்​றனர்.

    போராட்​டத்​தில் பங்​கேற்​றவர்​கள் விமான நிலை​யத் திட்​டத்தை கைவிடக்கோரி கோஷங்​களை எழுப்​பினர். இந்​தப் போராட்​டத்​தில் ஏகனாபுரம் மக்​கள் மற்​றும் போராட்​டக் குழு​வினர் உட்பட பலர் பங்​கேற்​றனர். அரசி​யல் கட்சி நிர்​வாகி​களும் பங்​கேற்​றனர்.

    இது குறித்து இந்​தப் பகுதி பொது​மக்​கள் கூறும்​போது, “இந்த நிலத்தை நம்​பி​தான் எங்​கள் வாழ்​வா​தா​ரம் உள்​ளது. எங்​களை இங்கிருந்து அப்​புறப்​படுத்த முடி​யாது. நாங்​கள் தொடர்ந்து போராட்​டத்​தில் ஈடு​படு​வோம். உயிரை கொடுத்​தாவது எங்​கள் இடத்தை பாது​காப்​போம்” என்​றனர். இந்​தப் போராட்​டம் காரண​மாக காஞ்​சிபுரம், பரந்​தூர் மற்​றும் சுற்​று​வட்​டார கிராமப் பகுதிகளில் பதற்​றம் நிலவியது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் உறுதி

    July 25, 2025
    மாநிலம்

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு

    July 25, 2025
    மாநிலம்

    டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் வழக்கு: செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    July 25, 2025
    மாநிலம்

    ‘நாடு போலீஸ் ராஜ்ஜியத்துக்கு செல்கிறதோ?’ – சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அச்சம்

    July 25, 2025
    மாநிலம்

    ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னையில் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம்

    July 25, 2025
    மாநிலம்

    டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் கைதான அபுபக்கர் சித்திக்கை 5 நாள் விசாரிக்க அனுமதி

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘தலைவன் தலைவி’ விமர்சனம்: குடும்ப உறவுகளை அலசும் கலகல ஃபேமிலி என்டர்டெய்னர்! 
    • ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் உறுதி
    • எடை இழப்புக்கு ஓக்ரா நீர்: நன்மைகள், அதை எவ்வாறு தயாரிப்பது, குடிக்க சிறந்த நேரம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரி, உதவி அதிகாரிகள் நியமனம்
    • நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.