Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் 
    மாநிலம்

    பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் 

    adminBy adminAugust 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காஞ்சி / செங்கை / திருவள்ளூர்: ​காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு திருவள்ளூர் மாவட்​டங்​களில் கிராம சபைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. ஏகனாபுரம் கிராமத்​தில் நடை​பெற்ற கிராம சபைக் கூட்​டத்​தில் பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு எதி​ராக தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

    சுதந்​திர தினத்தை முன்​னிட்டு காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் உள்ள அனைத்து ஊராட்​சிகளி​லும் கிராம சபைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. கீழம்பி ஊராட்​சி​யில் நடை​பெற்ற கிராம சபைக் கூட்​டத்​தில் ஆட்​சி​யர் கலைச்​செல்வி பங்​கேற்​றார்.

    இந்த ஊராட்​சி​யில் 16 தீர்​மானங்​கள் வாசிக்​கப்​பட்​டன. இதனைத் தொடர்ந்து தூய்மை பணி​யாளர்​களுக்கு பொன்​னாடை போர்த்தி கவுர​வித்​தார். பொது​மக்​களிடம் இருந்​தும் மனுக்​களை பெற்றார். இந்த நிகழ்ச்​சி​யில் மாவட்ட வரு​வாய் அலு​வலர் செ.வெங்​கடேஷ், காஞ்​சிபுரம் ஒன்​றிய குழுத்​தலை​வர் மலர்க்​கொடி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்​தலை​வர் நித்​தியா சுகு​மார் உட்பட பலர் பங்​கேற்​றனர். இதனைத் தொடர்ந்து ஏகாம்​பர​நாதர் கோயி​லில் சமபந்தி விருந்து நடை​பெற்​றது. இதில் ஆட்​சி​யர் கலைச்​செல்வி பங்​கேற்​றார்.

    காஞ்​சிபுரம் மாவட்​டம் ஏகனாபுரம் கிராமத்​தில் நடை​பெற்ற கிராம சபைக் கூட்​டத்​தில் பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு எதி​ராக தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. ஏகனாபுரம் கிராமத்​தில் பரந்​தூர் விமான நிலை​யத்தை எதிர்த்து 1,100 நாட்​களாக போராடி வருகின்​றனர்.

    இந்த திட்​டத்தை கைவிட வேண்​டும் என்று தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. காட்​டாங்​கொளத்​தூர் ஒன்​றி​யம், வீராபுரம் ஊராட்சியில் நடை​பெற்ற கிராம சபைக் கூட்​டத்​தில் மாவட்ட ஆட்​சி​யர் தி.சினேகா சிறப்பு பார்​வை​யாள​ராக கலந்​து​கொண்​டு, கிராம மக்​களு​டன் கலந்​துரை​யாடி​னார்.

    இந்த கூட்​டத்​தில் கிராம ஊராட்சி நிர்​வாகம் மற்​றும் பொது நிதி செல​வினம் குறித்து விவா​திக்​கப்​பட்​டது. கிராம ஊராட்​சி​யின் தணிக்கை அறிக்கை கிராமசபை​யின் பார்​வைக்கு வைத்து ஒப்​புதல் பெறப்​பட்​டது. அதனைத் தொடர்ந்​து, கிராம பொது​மக்​கள் சாலை வசதி, குடிநீர் வசதி, கழி​வுநீர் கால்​வாய், ஜி.எஸ்​.டி. சாலை​யில் நடை மேம்​பாலம் போன்ற பல்​வேறு கோரிக்​கைகளை ஆட்​சி​யரிடம் தெரி​வித்​தனர். ஆட்​சி​யர் இக்​கோரிக்​கைகளை உடனடி​யாக சரி செய்​வ​தாக உறு​தி​யளித்து சம்​பந்​தப்​பட்ட துறை அலு​வலர்​களுக்கு நடவடிக்கை மேற்​கொள்​ளு​மாறு அறி​வுறுத்​தி​னார். மேலும், பொதுமக்கள் பேருந்து நிலை​யம் வேண்டி கோரிக்கை விடுத்​தனர்.

    இக்​கோரிக்​கையை கேட்​டறிந்து எம்​.எல்.ஏ தொகுதி மேம்​பாட்டு நிதியி​லிருந்து உடனடி​யாக கட்​டித் தரு​வ​தாக அவர் தெரி​வித்​தார். இதே​போல் மாவட்​டம் முழு​வதும் 359 கிராம ஊராட்​சிகளி​லும் கிராம சபைக் கூட்​டங்​கள் நடை​பெற்​றன. திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் உள்ள 526 ஊராட்​சிகளில் பெரும்​பாலானவற்​றில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்​டம் நடை​பெற்​றது. திருத்​தணி அருகே தரணிவ​ராகபுரம் ஊராட்​சி​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில், ஆட்​சி​யர் பிர​தாப் சிறப்பு பார்​வை​யாள​ராக பங்​கேற்​று, பொது​மக்​களிடம் கலந்​துரை​யாடி​னார்.

    இக்​கூட்​டத்​தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்​குநர் ஜெயக்​கு​மார், உதவி இயக்​குநர் (ஊராட்​சிகள்) யுவ​ராஜ் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். சோழ​வரம் அருகே அத்​திப்​பேடு ஊராட்​சி​யில், எண்​ணூர் – மாமல்​லபுரம் சாலைக்​காக அகற்​றப்​பட்ட ஊராட்சி மன்ற கட்​டிடம், கிராம சேவை கட்​டிடம் உள்​ளிட்ட 5 கட்​டிடங்​களை அமைக்க ஒதுக்​கீடு செய்​யப்​பட்ட இடத்​தில்​ உள்​ள ஆக்​கிரமிப்​பை அகற்​ற வரு​வாய்​ துறையினர்​ நடவடிக்​கை எடுக்​கவில்​லை எனக்​ கூறி, பொதுமக்​கள்​, கி​ராம சபை கூட்​டத்​தை புறக்​கணித்​தனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ”அமெரிக்க வரி உயர்வால் தமிழகத்துக்கு பாதிப்பு” – மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தல்

    August 16, 2025
    மாநிலம்

    நாடு சிறந்த தேசியவாதியை இழந்துவிட்டது: இல.கணேசன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

    August 16, 2025
    மாநிலம்

    திட்டக்குடிக்கு திட்டங்களை தந்தது எங்கள் ஆட்சி தான்! – சொல்கிறது கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக

    August 16, 2025
    மாநிலம்

    மேம்பாலம் கட்டும் பணிக்காக அண்ணா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

    August 16, 2025
    மாநிலம்

    மலேசியா – கேரளா விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் சென்னையில் தரையிறக்கம்

    August 16, 2025
    மாநிலம்

    நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு: ஜி.கே. வாசன் இரங்கல்

    August 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ”அமெரிக்க வரி உயர்வால் தமிழகத்துக்கு பாதிப்பு” – மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தல்
    • சமஸ்கிருத விளைவு என்ன? இந்த பண்டைய நடைமுறை நினைவகத்தையும் கவனத்தையும் எவ்வாறு கூர்மைப்படுத்துகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மும்பையில் கனமழைக்கான ரெட் அலர்ட்: விக்ரோலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் உயிரிழப்பு
    • நாடு சிறந்த தேசியவாதியை இழந்துவிட்டது: இல.கணேசன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
    • 5 உலகின் மிகக் குறைந்த மதிப்புமிக்க நாணயங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.