Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘பயிர்க் கடன் பெற சிபில் ஸ்கோர்’ உத்தரவை ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
    மாநிலம்

    ‘பயிர்க் கடன் பெற சிபில் ஸ்கோர்’ உத்தரவை ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

    adminBy adminJune 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘பயிர்க் கடன் பெற சிபில் ஸ்கோர்’ உத்தரவை ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருப்பூர்: தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர்க் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்த்து மட்டுமே வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூர் மாநகர ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் விவசாயிகள் சோளம், கத்தரி, நெல் உள்ளிட்ட பயிருடன் வந்து இன்று (ஜூன் 9) அளித்த மனுவின் விவரம்: கடந்த மே 26-ம் தேதி தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் மாநில பதிவாளர், விவசாயி கடன் அட்டை மூலம் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெறுவதற்கு, விவசாயிகளின் சிபில் ரிப்போர்ட் பார்த்து மட்டுமே கடன் வழங்க வேண்டும் எனஉத்தரவு பிறப்பித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசு கணக்கிட்டு வைத்துள்ள உற்பத்தி செலவின் அடிப்படையில் பயிர்க்கடன்கள் வழங்கப்படும். ஆனால் அந்த பயிர்க் கடன்கள் 2 மடங்கு குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.76 ஆயிரம் தமிழக விவசாயிகளுக்கு செலவாகிறது. ஆனால் ரூ. 36 ஆயிரம் மட்டுமே பயிர்க்கடன் வழங்குகிறது. எனவே கூடுதல் செலவுகளை சமாளிக்க, விவசாயிகள் தேசியமயமாக்கபப்ட்ட வங்கிகளில் பயிர்க் கடன் பெற வேண்டிய சூழ்நிலை எழுகிறது.

    விவசாயிகள் மூலதனக் கடன், கோழிப்பண்ணை, விசைத்தறி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த சிறு, குறு தொழில்களுக்கும், கல்வி,கடன், நகை கடன் ஆகியவற்றை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்று, விவசாயத்தில் உரிய வருமானம் இல்லாததால், செலுத்த முடியாமல் சிபில் ரிப்போர்ட் பிரச்சினையில் சிக்கியுள்ளனர். இனி கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் கடன்களுக்கும் சிபில் ரிப்போர்ட்டில் பதிவு செய்யப்படும் என்பது, விவசாயிகள் பயிர்க் கடன் பெறமுடியாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

    விவசாய கடன்களுக்கு தேசியமயமாக்கபப்ட்ட வங்கிகளின் சிபில் ரிப்போர்ட்டிலிருந்து விளக்கு அளிக்க வேண்டும் என இந்தியா முழுவதும் கோரி வரும் நிலையில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுப்பதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்க வேண்டும் என்பது, பின்னடைவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. கூட்டுறவுத் துறையின் இந்த நடவடிக்கை விவசாயிகளிடையே தமிழ்நாடு அரசின் மீது மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த பிரச்சினை மகாராஷ்டிராவில் எழும்போது, அனைத்து வங்கிகளும் சிபில் ரிப்போர்ட்டை வைத்து நிராகரிப்பது தவறு என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிரான மாநில அரசின் கூட்டுறவுத் துறையை சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அண்ணா பிறந்தநாள் விழா: குன்னூரில் திமுக, அதிமுக இடையே மோதல்!

    September 15, 2025
    மாநிலம்

    புதுச்சேரியில் கூட்டணியை வலுப்படுத்த பாஜக ஆலோசனை

    September 15, 2025
    மாநிலம்

    மாநிலத்துக்குள் மின்சார வர்த்தகம் மேற்கொள்ள ​பசுமை எரிசக்தி கழகத்துக்கு உரிமம் வழங்கல்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

    September 15, 2025
    மாநிலம்

    ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அலுவலக ஊழியர் லஞ்சம் கேட்டதாக அரசு மருத்துவர் புகாரால் பரபரப்பு

    September 15, 2025
    மாநிலம்

    “அரசியலில் சொகுசுக்கு இடமில்லை!” – ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    September 15, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: ஈரோடு, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மாரடைப்பு காரணங்கள்: அடைபட்ட தமனிகள் அல்ல: மாயோ கிளினிக் ஆய்வு இளைய பெண்களில் மாரடைப்புக்கான மறைக்கப்பட்ட காரணங்களை வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அண்ணா பிறந்தநாள் விழா: குன்னூரில் திமுக, அதிமுக இடையே மோதல்!
    • நாள்பட்ட தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறதா? இது மூளைக்கு ஒரு நேர வெடிகுண்டு – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புதுச்சேரியில் கூட்டணியை வலுப்படுத்த பாஜக ஆலோசனை
    • இதய ஆரோக்கியம்: உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பற்றி உங்கள் நாக்கு என்ன சொல்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.