Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பத்திரிகையாளர்களுக்கு சமூக அக்கறை மிகவும் அவசியம்: மூத்த பத்திரிகையாளர் அறிவுரை
    மாநிலம்

    பத்திரிகையாளர்களுக்கு சமூக அக்கறை மிகவும் அவசியம்: மூத்த பத்திரிகையாளர் அறிவுரை

    adminBy adminSeptember 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பத்திரிகையாளர்களுக்கு சமூக அக்கறை மிகவும் அவசியம்: மூத்த பத்திரிகையாளர் அறிவுரை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பத்திரிகையாளர்களுக்கு சமூக அக்கறைதான் மிகவும் அவசிய தேவை என்று ஆசிய ஊடகவியல் கல்லூரியில் நடைபெற்ற இதழியல் பயிற்சி பயிலரங்கில் மூத்த பத்திரிகையாளர் எஸ்.சாய்நாத் அறிவுறுத்தினார்.

    தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை, சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கான மையம், சென்னை சமூக பணி கல்லூரி, ஆசிய ஊடகவியல் கல்லூரி சார்பில் பத்திரிகை மற்றும் சமூகத் தொடர்பு குறித்து இதழியல் மாணவ-மாணவிகளுக்கு 2 வாரம் காலம் பயிற்சி பயிலரங்கம் நடத்தப்பட்டது.

    இப்பயிலரங்கின் நிறைவு விழா சென்னை தரமணியில் உள்ள ஆசிய ஊடகவியல் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் இந்திய ஊரக மக்கள் ஆவணம் அமைப்பின் நிறுவனரான மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத் நிறைவுரை ஆற்றி பேசியதாவது: ஒருவர் சிறந்த பத்திரிகையாளராகத் திகழ வேண்டுமானால் அவருக்கு தொழில்நுட்பத்திறன், பேரார்வம், நம்பகத்தன்மை, பொதுமக்களை சமாதானப் படுத்தும் திறன் போன்ற பண்புகள் தேவை.

    ஆனால். எல்லாவற்றுக் கும்மேலாக பத்திரிகையாளர்களுக்கு சமூக அக்கறைதான் மிகவும் அவசிய தேவை ஆகும். மொழியறிவு என்பது இரண்டாம்பட்சம்தான். மொழி என்பது தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே. மாறாக பத்திரிகையாளரின் எழுத்துத்திறனை காண்பிக்கக்கூடிய தளம் அல்ல. சட்டத்தில் தீண்டாமையை ஒழித்துவிட்டோம். ஆனால் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் இன்னும் தீண்டாமை இருந்து வருகிறது என்பதுதான் உண்மை.

    மதிய உணவு திட்டம் தமிழகத்தை தொடர்ந்து இந்தியாவின் இதர மாநிலங்களில் செயல்படுத்தப் பட்டபோது அவற்றை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது ஒடிசா மாநிலத்தில் ஒரு பள்ளியில் சத்துணவு வழங்கும்போது குழந்தைகள் சாதிவாரியாக பிரித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு மனவேதனை அடைந்தேன்.

    இந்தியாவின் குடியரசு தலைவர்களாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக, மாநிலங்களில் ஆளுநர்களாக, முதல்வர்களாக தலித் வகுப்பினர் பணியாற்றி உள்ளனர்; பணியாற்றியும் வருகின்றனர். ஆனால், தேசிய அளவிலான ஊடக நிறுவனங்களில் தலித் சமூகத்தினர் முக்கிய பதவிகளில் எத்தனை பேர் உள்ளனர்? சமுதாயத்தில் சமூக சமத்துவமின்மை இன்னும் நிலவுகிறது.

    இத்தகைய சூழலில் இளம் பத்திரிகையாளர்கள் புதிய சிந்தனையோடு சமுதாயத்தை பார்க்க வேண்டும். அவர்களின் இதயத்தில் சமூக அக்கறையும் கரிசனமும் தோன்றால் அது அவர்களின் சிந்தனையிலும் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, சென்னை சமூக பணிகள் கல்லூரி முதல்வர் எஸ்.ராஜா சாமுவேல் வரவேற்றார். ஆசிய ஊடகவியல் கல்லூரியின் இணை டீன் மோகன் ராமமூர்த்தி பயிலரங்க அறிக்கை வாசித்தார். டீன் நளினி ராஜன் அறிமுகவுரை ஆற்றினார். நிறைவாக, சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கான மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.சுசீந்திரா நன்றி கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நேரடி போட்டித் தேர்வின் மூலம் தேர்வான 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க ஐகோர்ட் உத்தரவு

    September 3, 2025
    மாநிலம்

    “இந்த அவல ஆட்சி இருந்து என்ன பயன்?” – மழைநீர் வடிகால் பள்ளத்தில் பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு இபிஎஸ் கண்டனம்

    September 3, 2025
    மாநிலம்

    காட்டுப்பள்ளியில் போலீஸார் மீது கல் வீச்சு சம்பவம்: வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைப்பு

    September 3, 2025
    மாநிலம்

    108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கு: டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    September 3, 2025
    மாநிலம்

    திருச்சி வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் முர்மு: ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு

    September 3, 2025
    மாநிலம்

    “கழுதைகள் எங்கே என்று யாராவது கவலைப்படுகிறார்களா?” – தெருநாய்கள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமெரிக்காவுக்கான போகஸ் சந்தை திட்டம் வேண்டும்: திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் வலியுறுத்தல்
    • தலைகீழ் வயதான நிபுணர் 7 பொதுவான உணவுகளைப் பகிர்ந்து கொள்கிறார், அவை எங்களை ரகசியமாக வயதாக ஆக்குகின்றன, மேலும் பழையதாக இருக்கும்
    • கானல் நீராகும் மத்திய பல்கலை. திருச்சி வளாகம் – கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகள்
    • விக்ரமை இயக்கும் விஷ்ணு எடவன்?
    • நேரடி போட்டித் தேர்வின் மூலம் தேர்வான 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க ஐகோர்ட் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.