Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, December 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘பட்டியல் விலக்கே தேவேந்திரர் இலக்கு’ என போராடி வருகிறோம்: சீமான்
    மாநிலம்

    ‘பட்டியல் விலக்கே தேவேந்திரர் இலக்கு’ என போராடி வருகிறோம்: சீமான்

    adminBy adminSeptember 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘பட்டியல் விலக்கே தேவேந்திரர் இலக்கு’ என போராடி வருகிறோம்: சீமான்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பரமக்குடி: ‘பட்டியல் விலக்கே தேவேந்திரர் இலக்கு’ என்ற முழக்கத்தை முன்வைத்து அதிகாரத்துக்காக போராடி வருகிறோம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரமக்குடியில் தெரிவித்தார்.

    ராமநாதபுரம் பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரன் 68-வது நினைவு தினத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் மரியாதை செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழ் சமூகத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றால் தமிழினம் தாழ்கிறது என்பது எங்களது நோக்கம். தாழ்த்தப்பட்டவர் என்ற சொல்லை கவனித்தாலே தெரியும். அதில் என்னை தாழ்த்தியவன் யார் என்ற கோபம் இமானுவேல் சேகரனுக்கும் எழுந்தது.

    சாதி ஏற்றத் தாழ்வுகளற்ற சமதர்ம சமுதாயம் படைக்க எண்ணியவர் அவர். அவரது கனவை சுமந்து எங்களது பயணத்தை தொடர்வோம். இதில் ‘பட்டியல் விலக்கே தேவேந்திரர் இலக்கு’ என்ற முழக்கத்தை முன்வைத்து அதிகாரத்துக்காக போராடி வருகிறோம். அரசு மக்கள் பிரச்சினைகளை கையில் எடுக்காதபோது, மக்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதை தவிர வேறு வழியில்லை. தேவேந்திர சமூக மக்களை பட்டியல் இழிவிலிருந்து வெளியேறுவோம் என உறுதி ஏற்கிறோம். இதற்கு தமிழ் கூறும் நல்லுலகம் எங்களை வலிமையான அரசியல் சக்தியாக மாற்ற வேண்டும்.

    அந்தந்த கட்சியில் இருக்கும் பிரச்சினைகளில் இன்னொரு கட்சியில் தலையிடுவது நாகரிகமற்றது. ஒரு கட்சியில் ஏற்படும் பிரச்சினையால் நாட்டுக்கு என்ன பிரச்சினை என்பது கருத வேண்டும். நாட்டில் நடக்கும் அநீதியை எதிர்த்து பேசுவது தவறு என்று கருதப்படுமானால் அந்த நாட்டை ஒரு குற்றவாளி ஆட்சி செய்வதாக பொருள் என அறிஞர் சொல்லியுள்ளார். அடக்குமுறையான அரசு நடக்கும்போது அந்த அரசை நடத்துபவன் குற்றவாளியல்ல, அந்த அதிகாரத்தை அளித்த மக்கள்தான் குற்றவாளிகள் என்கின்றனர்.

    தமிழகத்தில் போராடினால்தான் வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழகத்திலுள்ள குப்பையை சுத்தப்படுத்த ஆந்திர மாநிலக்காரருக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளனர். இதில் ஒரு கிலோ குப்பை அள்ள ரூ.12 கட்டணம் என்கின்றனர். அரசு கழிவறையை கழுவ ரூ.350 என கட்டணம் நிர்ணயித்து கொள்ளையடிக்கின்றனர். இதற்காக சென்னை மாநகராட்சியில் மாதத்திற்கு ரூ.270 கோடியும், பத்து மாதத்திற்கு ரூ.2700 கோடி என இடைத்தரகர் மூலம் கொள்ளையடிக்கின்றனர். குப்பையை கூட அள்ள தகுதியும் திறமையும் இல்லாத ஆட்சியாளர்கள் உள்ளனர்.

    நான் தமிழக முதல்வரானால் கச்சத்தீவை மீட்டு விடுவேன். ஆனால், 2024 தேர்தலில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என பிரதமர் மோடி பேசினார். அதோடு அந்த பேச்சை விட்டுவிட்டார். கச்சத்தீவை கொடுத்தது காங்கிரஸ், வேடிக்கை பார்த்தது திமுக. ஆனால் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதி மட்டும் கொடுக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து நெய்தல் பயணத்தில் பேசுவேன். நான் வாக்கு அரசியல் செய்பவனல்ல, மக்களின் வாழ்க்கைக்காக அரசியல் செய்பவன்” என்று அவர் பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அன்றைய ஊட்டச்சத்து உண்மை: உங்களுக்குத் தெரியுமா? உங்கள் மூளை ஆரோக்கியமான கொழுப்புகளை விரும்புகிறது
    • மாசுபாடு காரணமாக டெல்லியில் 2 லட்சம் சுவாச நோய் வழக்குகள், அரசாங்கத் தரவுகளை வெளிப்படுத்துகிறது: நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு ஏன் இப்போது கூடுதல் பாதுகாப்பு தேவை – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அஸ்வகந்தா பலன்கள்: அஸ்வகந்தா ஏன் அனைவருக்கும் இல்லை: நன்மைகள், அபாயங்கள் மற்றும் யார் அதை தவிர்க்க வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய குதிரைவாலியின் ஆரோக்கிய நன்மைகள்: சைனஸைத் தணிக்கவும், புற்றுநோயை இயற்கையாக எதிர்த்துப் போராடவும், எப்படி தயாரிப்பது மற்றும் பக்க விளைவுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் வாழ்க்கையின் ஆற்றலை மாற்றக்கூடிய மகாராஷ்டிராவில் உள்ள 5 சக்திவாய்ந்த ஜோதிர்லிங்க கோவில்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.