Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பட்டாசு ஆலைகளில் விதிகளை அமல்படுத்தாத அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி
    மாநிலம்

    பட்டாசு ஆலைகளில் விதிகளை அமல்படுத்தாத அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி

    adminBy adminJuly 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பட்டாசு ஆலைகளில் விதிகளை அமல்படுத்தாத அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பட்டாசு ஆலைகளில் விபத்து தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்தாத அதிகாரிகளை கைது செய்தால்தான் சிவகாசி பகுதிகளில் தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் கோவில்பட்டி, சங்கரன்கோவில் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய பட்டாசு தீப்பெட்டி ஆலைகள் செயல்படுகின்றன. இதில் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பணிபுரிகின்றார்கள்; பட்டாசு தொழிலில் ஆபத்தான வெடி மருந்து பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் பல கட்டுப்பாடுகள் உண்டு. பொதுவாக பத்துக்கு பத்து அறையில் 4 வாசல்கள் அமைத்து 4 பேர் மட்டுமே பணி புரிய வேண்டும்.

    இந்த சிறிய அறைகளை 10 லட்சம் வரையில் குத்தகைக்கு எடுத்து தொழில் செய்யும் சிறிய தொழில் முனைவோரால் குத்தகைக்கு கொடுத்த பத்து லட்சத்தை எப்படியாவது திரும்ப எடுத்தாக வேண்டும் என்பதால் விதிமுறைகளை மீறி பயிற்சி அற்றவர்களையும், 4 பேர் பணிபுரிய வேண்டிய அறையில் 20 பேர் வரையும் இத்தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். பயிற்சி அற்றவர்கள் செய்யும் தவறுகளும், சிறிய அறைகளில் பன்மடங்கு பணியாளர்கள் பணி செய்வதும் எளிதாக விபத்து ஏற்படுவதற்கும், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கும் காரணமாகி விடுகிறது. இதன் தொடர்ச்சியாகவே கடந்த வாரம் சின்னக் காமன்பட்டியில் ஏற்பட்ட விபத்தில் பத்து பேர் உயிரிழந்தனர்; இன்று ஏற்பட்ட விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள 32 அறைகள் தரைமட்டமாகி உள்ளன; ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நடக்கிறது; அதனால் உயிரிழப்புகள் தொடர் நிகழ்வுகள் ஆகின்றன. இதனால் சிவகாசி நவீன கொலைக்களமா? என்ற கேள்வி எழுகிறது. பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்போது வரையிலும் முறையான இழப்பீடுகள் வழங்கப்படாமல் பல இழுத்தடிப்புகளுக்கு பிறகு ஒரு சில லட்சங்கள் பெறுவதே மிக கடினமாக உள்ளது.

    உலகின் பல பகுதிகளிலும் பட்டாசு ஆலைகள் உண்டு. அந்நாடுகளில் சட்ட விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதால் விபத்துக்கள் தடுக்கப்படுகின்றன. ஆனால், நமது தேசத்தில் தொழிலாளர்களை பாதுகாக்க விதிமுறைகளை அமலாக்க வேண்டிய மத்திய, மாநில அரசு துறை அதிகாரிகள் ஊழலில் ஊறி திளைப்பதால் முறையான கண்காணிப்புகள் இல்லாமல் போய் விடுகின்றன.

    எனவே இனிமேல் இது போன்ற விபத்துக்களை தடுக்க விதிமுறைகள் அமலாக்காத அதிகாரிகளை பொறுப்பாக்கி, கைது செய்து தண்டிக்கப்பட்டால் தான் சிவகாசி பகுதிகளில் தொழிலாளர்களும் பாதுகாக்கப்படுவார்கள்; பட்டாசு தொழில்களும் பாதுகாக்கப்படும். இன்று பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த பால குரு சாமி என்பவரின் குடும்பத்திற்கு குறைந்தது ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, இதயமும் கெட்டுவிட்டது: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேச்சு

    July 6, 2025
    மாநிலம்

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு

    July 6, 2025
    மாநிலம்

    கீழடி விவகாரத்தில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை: சகாயம் விமர்சனம்

    July 6, 2025
    மாநிலம்

    ”ரத்தத்தின் ரத்தமே வா! மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!” – தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்

    July 6, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் – வீடுதோறும் விண்ணப்பங்கள் வழங்கும் பணி சென்னையில் நாளை தொடக்கம்

    July 6, 2025
    மாநிலம்

    கீழதாயில்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்து – உரிய இழப்பீடு வழங்க தேமுதிக வலியுறுத்தல்

    July 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரன்வீர் சிங் ஜோடியாக சாரா அர்ஜுன்!
    • காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, இதயமும் கெட்டுவிட்டது: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேச்சு
    • தனுஷுக்கு நாயகியாகும் பூஜா ஹெக்டே?
    • பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு
    • மீண்டும் மீண்டும் வரும் யுடிஐக்கள் என்ன: அவற்றை வளைகுடாவில் வைத்திருக்க 5 எளிய வழிகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.