Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்
    மாநிலம்

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

    adminBy adminSeptember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திண்​டுக்​கல்: பசும்​பொன் முத்​து​ராமலிங்​கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்​டும் என்று அதி​முக பொதுச் செயலாளர் பழனி​சாமி கூறி​னார். திண்​டுக்​கல் மாவட்​டத்​தில் நேற்று 2-வது நாளாக பொது​மக்​களிடையே பழனி​சாமி பிரச்​சா​ரப் பயணத்தை மேற்​கொண்​டார். முன்​னாள் அமைச்​சர்​கள் திண்​டுக்​கல் சி.சீனி​வாசன், நத்​தம் ஆர்​.​விஸ்​வ​நாதன் முன்னிலை வகித்தனர்.

    ஆத்​தூர் தொகு​திக்கு உட்​பட்ட சின்​னாளபட்​டி​யில் பழனி​சாமி பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் ரூ.350 கோடி​யில் திண்​டுக்​கல்​லில் அரசு மருத்​து​வக் கல்​லூரி அமைக்​கப்​பட்​டது. இது​போன்ற ஏதாவது பெரிய திட்​டத்தை இங்​குள்ள அமைச்​சர் கொண்டு வந்​திருக்​கிறா​ரா? தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது.

    வெடிகுண்டு கலாச்​சா​ரம் வந்​து​விட்​டது. தமிழக அரசு செயலற்று இருப்​ப​தால், மக்​கள் நிம்​ம​தி​யாக வாழ முடிய​வில்​லை. அனைத்து ஊராட்​சிகள், ஒன்​றி​யங்​களில் உள்ள நிதியை ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் வேறு பணிக்கு செல​வழிக்​கிறார். இது வன்​மை​யாகக் கண்​டிக்​கத்​தது.

    திமுக மக்​களுக்​கான கட்சி அல்ல. ஒரு குடும்​பத்​துக்​காக உள்ள கட்​சி. திமுக​வில் உண்​மை​யாக உழைப்​பவர்​களுக்கு மரி​யாதை இல்​லை. முதல்​வரின் குடும்​பத்​தை சேர்ந்​தவர்​களுக்கு மட்​டுமே மரி​யாதை வழங்​கப்​படு​கிறது.

    திமுக ஆட்​சி​யில் முடக்​கப்​பட்ட திட்​டங்​கள் அனைத்​தும், மீண்​டும் அதி​முக ஆட்சி அமைந்​தவுடன் செயல்​படுத்​தப்​படும். விண்ணை முட்​டும் அளவுக்கு உயர்ந்​து​விட்ட விலை​வாசி​யைக் கட்​டுப்​படுத்த திமுக அரசு எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்கவில்லை.

    இந்​திய சுதந்​திரப் போராட்​டத்​தில் தீவிர​மாகப் பங்​கேற்ற பசும்​பொன் முத்​து​ராமலிங்க தேவர், வாழ்​நாள் முழு​வதும் அனைத்து தரப்பு மக்​களுக்​காக​வும் வாழ்ந்​தவர். தனது சொத்​தில் பெரும் பகு​தியை சாதி மதம் பார்க்​காமல் மக்​களுக்கு தான​மாக வழங்கியவர்.

    தென் மாவட்ட மக்​களின் இதயத்​தில் வாழும் பசும்​பொன் முத்​து​ராமலிங்க தேவருக்கு நாட்​டின் உயரிய விரு​தான பாரத ரத்னா விருது வழங்க வேண்​டும். அதே​போல, தேசி​ய​மும் தெய்​வீக​மும் தனது இரு கண்​கள் என வாழ்ந்​து​ காட்​டிய பசும்​பொன் முத்​து ராமலிங்​கத் தேவர் பெயரை மதுரை விமான நிலை​யத்​துக்கு சூட்ட வேண்​டும். இதற்​கான முயற்​சிகளை அதி​முக முன்னெடுக்கும். இவ்​வாறு பழனிசாமி பேசினார்.

    5-ம் கட்ட பிரச்​சா​ரம்: இதனிடையே அதிமுக தலைமை வெளி​யிட்​ட அறிக்​கை​: கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தனது 5-ம் கட்ட பிரச்​சா​ரப் பயணத்தை வரும் 17-ம் தேதி தரு​மபுரி​யில் தொடங்​கு​கிறார். அன்று தரு​மபுரி, பாப்​பிரெட்​டிபட்​டி, அரூர் தொகு​தி​களி​லும், வரும் 18-ம் தேதி பாலக்​கோடு, பென்​னாகரம், 19-ம் தேதி நாமக்​கல் மாவட்​டம் ராசிபுரம், சேந்​தமங்​கலம், 20-ம் தேதி நாமக்​கல், பரமத்தி வேலூர், 21-ம் தேதி திருச்​செங்​கோடு, குமார​பாளை​யம் தொகு​தி​களி​லும் பிரச்​சா​ரம் செய்​கிறார்.

    தொடர்ந்​து, வரும் 23-ம் தேதி நீல​கிரி மாவட்​டம் குன்​னூர், உதக மண்​டலம், 24-ம் தேதி கூடலூர், 25-ம் தேதி திண்​டுக்​கல் மாவட்​டம் வேட சந்​தூர், கரூர், 26-ம் தேதி கரூர் மாவட்​டம் அரவக்​குறிச்​சி, கிருஷ்ண​ராயபுரம், குளித்​தலை தொகு​தி​களி​லும் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள உள்​ளார். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் நேற்று பொதுமக்களிடையே பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மஞ்சூர் – கோவை மலைப்பாதையில் காரை வழிமறித்து ஆவேசமாக தாக்கிய காட்டு யானை: குழந்தையுடன் தம்பதி உயிர் தப்பினர்

    September 8, 2025
    மாநிலம்

    “பாஜக தலைவர்களை சந்திக்க செல்லவில்லை” – டெல்லி புறப்பட்ட செங்கோட்டையன்

    September 8, 2025
    மாநிலம்

    சென்னை கமலாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் போலீஸ் சோதனை

    September 8, 2025
    மாநிலம்

    உ.பி.யில் சட்ட மாணவரை 60 முறை அறைந்த சக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

    September 8, 2025
    மாநிலம்

    செங்கோட்டையனின் ஆதரவாளர் சத்தியபாமாவின் கட்சி பதவி பறிப்பு – பின்னணி என்ன?

    September 8, 2025
    மாநிலம்

    ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பெசன்ட்​ நகரில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்: அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர் பவனி கோலாகலம்
    • ‘பேட் கேர்ள்’ விமர்சனம் – ‘புரட்சிகர’ முயற்சியும், தாக்கமும் எப்படி?
    • மஞ்சூர் – கோவை மலைப்பாதையில் காரை வழிமறித்து ஆவேசமாக தாக்கிய காட்டு யானை: குழந்தையுடன் தம்பதி உயிர் தப்பினர்
    • ஒரு நாளைக்கு 10,000 படிகள் மற்றும் ஜப்பானிய இடைவெளி நடைபயிற்சி: AIIMS இரைப்பை குடல் ஆய்வாளர் இரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் பயனுள்ள வழியை வெளிப்படுத்துகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திருமணமான மகள்களுக்கும் சொத்தில் சமபங்கு: சட்டம் இயற்ற தயாராகும் உத்தர பிரதேச அரசு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.