Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்
    மாநிலம்

    பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்

    adminBy adminJuly 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “மக்களின் மீது அனைத்து வரிகளையும் சுமத்தி, ஆண்டொன்றுக்கு ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் வருமானத்தை ஈட்டும் திமுக அரசு, ஆட்சி முடியும் தருவாயிலும் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது கடும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள் 2012 முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.12,500 தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. இவர்கள் இந்த சொற்ப ஊதியத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இவர்கள் தங்களது பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல், அவர்களை கைது செய்து சமூக நலக் கூடங்களில் தங்க வைத்திருப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

    எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “இஸ்லாமிய தாய்மார்கள் சிந்தும் கண்ணீரே திமுக ஆட்சியை வீழ்த்தும்!” – சீமான்

    July 9, 2025
    மாநிலம்

    பரந்தூர் விமான நிலையத்துக்கான நிலம் எடுக்கும் பணி தொடக்கம் – போராட்டக் குழு கண்டனம்

    July 9, 2025
    மாநிலம்

    திருப்பூர்: தொழிலாளர்களின் தற்காலிக குடியிருப்பில் 9 சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்

    July 9, 2025
    மாநிலம்

    மதுரையில் விரைவில் தவெக மாநாடு – இடம் தேர்வு செய்யும் கட்சிக் குழு?

    July 9, 2025
    மாநிலம்

    கடலூர் ரயில் விபத்து விசாரணை: கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் உள்பட 13 பேர் ஆஜராக நோட்டீஸ்

    July 9, 2025
    மாநிலம்

    சொத்து வரி முறைகேடு புகார்: மதுரை மாநகராட்சி 5 மண்டல தலைவர்கள் ராஜினாமா ஏற்பு

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 10 இன தோற்றங்கள் ஒவ்வொரு புதிய மணமகளும் சாரா டெண்டுல்கரிடமிருந்து நகலெடுக்க வேண்டும்
    • “இஸ்லாமிய தாய்மார்கள் சிந்தும் கண்ணீரே திமுக ஆட்சியை வீழ்த்தும்!” – சீமான்
    • மேட்சா சியா புட்டு என்றால் என்ன, இது கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது
    • பரந்தூர் விமான நிலையத்துக்கான நிலம் எடுக்கும் பணி தொடக்கம் – போராட்டக் குழு கண்டனம்
    • வயதானதை தாமதப்படுத்தக்கூடிய 5 காலை பழக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.