Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘நோ’ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் சென்னை – மெரினாவில் போக்குவரத்து நெரிசல்
    மாநிலம்

    ‘நோ’ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் சென்னை – மெரினாவில் போக்குவரத்து நெரிசல்

    adminBy adminAugust 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘நோ’ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் சென்னை – மெரினாவில் போக்குவரத்து நெரிசல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்​னை​யின் அடை​யாளங்​களில் ஒன்​றாக விளங்கி வரும் மெரினா கடற்​கரைக்கு வார​நாட்​களில் 30 ஆயிரத்​துக்​கும் மேற்பட்டோர் வந்து செல்​கின்​றனர். அதுவே வார இறுதி நாட்​கள், விடு​முறை தினங்​களில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேர் வருகை தருகின்​றனர்.

    குடும்​பத்​துடன் சிறு​வர்​கள் விளை​யாடி மகிழ விளை​யாட்​டு​கள், முதி​யோர் நடைப​யிற்சி செய்ய நீண்ட நடைபாதை, இளைஞர்கள் நண்​பர்​களு​டன் அமர்ந்து சிற்​றுண்டி சாப்​பிட்டு பேசி மகிழ உணவகங்​கள் என அனைத்து தரப்​பினரை​யும் கவர்வதால் மெரி​னா​வுக்கு வர, சிறு​வர்​கள் முதல் முதி​யோர் வரை விரும்​பு​கின்​றனர்.

    இதனால் வார இறுதி நாட்​களான சனி மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமை​களில் மெரி​னா​வில் மாலை முதல் இரவு வரை கூட்​டம் அலைமோதி வரு​கிறது. காம​ராஜர் சாலை​யில் உழைப்​பாளர் சிலை முதல் கலங்​கரை விளக்​கம் வரை மெரி​னா​வுக்​குள் நுழை​யும் கடற்​கரை சாலை​யில் இருசக்கர வாக​னங்​களும், கார்​களும் நிரம்​பி வழிகின்​றன.

    பொது​மக்​கள் நடந்து செல்​லவே முடி​யாத படி வாகன நெருக்​கடி இருந்து வரு​கிறது. மெரினா நீச்​சல் குளம் முதல் நேதாஜி சிலைவரை உள்ள மெரினா கடற்​கரை சாலை​யின் ஓரங்​களில் வாக​னங்​கள் நிறுத்​து​வதற்கு அனு​மதி இல்​லை.

    அதை குறிப்​பிடும் வகை​யில் ஆங்​காங்கே ‘நோ’​பார்க்​கிங் அடை​யாளம் கொண்ட பலகைகளும் திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸா​ரால் வைக்கப்பட்டுள்ளன. இருந்​தா​லும் வார இறுதி நாட்​கள், விடு​முறை நாட்​களில் மெரி​னா​வுக்கு வரும் இருசக்கர வாகன ஓட்​டிகள் பெரும்​பாலானோர் இந்த பகு​தி​யில் தங்​களது வாக​னங்​களை நிறுத்​தி​விட்டு கடற்​கரைக்​குள் செல்​வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​படு​கிறது.

    இதனால் அப்​பகு​தி​யில் நீண்ட தூரத்​துக்கு இருசக்கர வாக​னங்​களும், ஆட்​டோக்​களும் சாலையை அடைத்து நிற்​கின்​றன. இவர்களை பின்​தொடர்ந்து வரும் கார்​களும், மற்ற இருசக்கர வாக​னங்​களும் சாலையை பயன்​படுத்த முடி​யாமல் சிரமத்​துக்கு உள்​ளாகின்​றனர்.

    இதனால் பொது​மக்​கள் சாலை​யின் நடுவே நடந்து செல்​லும் நிலை ஏற்​படு​கிறது. பார்க்​கிங் கிடை​யாது என போலீ​ஸா​ரால் எச்​சரிக்கை பலகை வைக்​கப்​பட்​டிருந்​தும், அதைமீறி சில வாகன ஓட்​டிகள் தங்​களது வாக​னங்​களை நிறுத்தி செல்வ​தால், நெரிசல் ஏற்​படு​கிறது.

    இதுகுறித்து பெரம்​பூரை சேர்ந்த ரவிக்​கு​மார் என்​பவர் கூறுகை​யில், “மெரி​னா​வுக்கு அடிக்​கடி குடும்​பத்​துடன் வந்து செல்​வது வழக்​கம். குறிப்​பாக வார இறுதி நாட்​களில் வர விருப்​பம். அவ்​வாறு வரும்​போது எப்​போதுமே மெரினா கடற்​கரை சாலை​யில், மெரினா நீச்​சல் குளத்​தில் இருந்து கடற்கரைக்கு செல்​வதற்கு நீண்ட நேர​மாகிறது. சாலை​யோரங்​களில் இருசக்கர வாகனங்களும், ஆட்​டோக்​களும் அடைத்து நிற்​ப​தால், பொது​மக்​கள் சாலை​யில் நடு​வில் நடந்து செல்​கின்​றனர்.

    நேதாஜி சிலையை தொடர்ந்து இருசக்கர வாக​னங்​களுக்கு பார்க்​கிங் வசதி ஏற்​படுத்​தப்​பட்​டிருக்​கும் போது அதற்கு முன்​பாகவே ‘நோ’ பார்க்​கிங்​கில் இவ்​வாறு வாக​னங்​களை நிறுத்தி செல்​வது அடுத்​தடுத்து வரும் வாகன ஓட்​டிகளை எரிச்​சல் அடைய செய்கிறது.

    வார இறு​தி​யில் சிறிது நேரம் குடும்​பத்​துடன் நேரத்தை மகிழ்ச்​சி​யாக செல​வழிக்​க​வும், பொழுது போக்கி மனதை இலகு​வாக்​கி செல்​ல​வும் வரும்​போது, மெரி​னா​வுக்கு நுழை​யும் போதே நீண்ட நேரம் காத்​திருப்​பது சோர்​வடைய செய்​கிறது. எனவே சம்​பந்​தப்​பட்ட துறை அதி​காரி​கள் ‘நோ’ பார்க்​கிங்​கில் வாக​னங்​கள்​ நிறுத்​தப்​படு​வதை தடுக்​க உரிய நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​.” என வலி​யுறு​த்​தி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பஸ் ஓட்டுநர்களை கண்காணிக்கும் ஏஐ தொழில்நுட்பம்: அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடிப்பு

    August 5, 2025
    மாநிலம்

    ஆண்டிப்பட்டி அரசு விழாவில் எம்.பி.யுடன் மோதல்: எம்எல்ஏவை கண்டித்து சுவரொட்டிகள்!

    August 5, 2025
    மாநிலம்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே பாதுகாப்பற்ற முறையில் நடைபெறும் பாலம் கட்டும் பணி: வாகன ஓட்டிகள் அச்சம்

    August 5, 2025
    மாநிலம்

    தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

    August 5, 2025
    மாநிலம்

    தென் தமிழகம் இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம்: முதல்வர் ஸ்டாலின் @ தூத்துக்குடி

    August 5, 2025
    மாநிலம்

    10 மாவட்டங்களில் இன்று கனமழை

    August 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பஸ் ஓட்டுநர்களை கண்காணிக்கும் ஏஐ தொழில்நுட்பம்: அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடிப்பு
    • ஆண்டிப்பட்டி அரசு விழாவில் எம்.பி.யுடன் மோதல்: எம்எல்ஏவை கண்டித்து சுவரொட்டிகள்!
    • ஒரு வொர்க்அவுட்டிற்குப் பிறகு நேராக சூடான மழை எடுத்துக்கொள்கிறீர்களா? இது ஏன் மிகவும் ஆபத்தானது என்பதை சிறந்த மருத்துவர் விளக்குகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஸ்ரீபெரும்புதூர் அருகே பாதுகாப்பற்ற முறையில் நடைபெறும் பாலம் கட்டும் பணி: வாகன ஓட்டிகள் அச்சம்
    • ‘நோ’ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் சென்னை – மெரினாவில் போக்குவரத்து நெரிசல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.