Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நோய்வாய்ப்பட்ட பெற்றோரை மனைவி பராமரிப்பதை கணவனுக்கு இழைக்கும் கொடுமை என்பதா? – விவாகரத்து மனு தள்ளுபடி
    மாநிலம்

    நோய்வாய்ப்பட்ட பெற்றோரை மனைவி பராமரிப்பதை கணவனுக்கு இழைக்கும் கொடுமை என்பதா? – விவாகரத்து மனு தள்ளுபடி

    adminBy adminJune 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நோய்வாய்ப்பட்ட பெற்றோரை மனைவி பராமரிப்பதை கணவனுக்கு இழைக்கும் கொடுமை என்பதா? – விவாகரத்து மனு தள்ளுபடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மனைவி தனது நோய்​வாய்ப்​பட்ட பெற்​றோரை பராமரிப்​பதை கணவருக்கு இழைக்​கும் கொடுமை​யாகவோ, மன உளைச்​சல் ஏற்​படுத்​தி​ய​தாகவோ கருத முடி​யாது என்று கூறி​யுள்ள உயர் நீதி​மன்​றம், விவாகரத்து கோரிய கணவரின் மேல்​முறையீட்டு மனுவை தள்​ளு​படி செய்தது.

    சென்னை வடபழனி​யில் மென்​பொருள் நிறு​வனம் நடத்தி வரும் குமரன் என்​பவருக்​கும், சென்னை நந்​தனத்​தில் தனது அத்தையுடன் வசித்து வந்த பட்​ட​தாரி பெண் செல்விக்​கும் கடந்த 2017 ஜூனில் திரு​மணம் நடந்​தது. (பெயர்​கள் மாற்​றப்​பட்​டுள்​ளன.) திரு​மணத்​துக்கு பிறகு, இரு​வரும் நந்​தனத்​தில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்​குடித்​தனம் சென்​றனர்.

    அப்​போது, குமரன் தென் ஆப்​பிரிக்கா​வுக்கு சென்​றிருந்த நேரத்​தில், செல்வி தனது நோய்​வாய்ப்​பட்ட தந்தை மற்​றும் தாயை ஊரில் இருந்து வீட்​டுக்கு அழைத்து வந்​து, மருத்​துவ சிகிச்சை அளித்து வந்​துள்​ளார். உதவிக்​காக தனது அத்​தையை​யும் அங்கு அழைத்து வந்​தார். அந்த வீட்​டின் மேல்​தளம் காலி​யான நிலை​யில், செல்​வி​யின் பெற்​றோர் அங்கு குடிபெயர்ந்​தனர். தரைதளத்​தில் குமரன் – செல்வி வசித்​தனர்.

    இந்த நிலை​யில், குழந்தை பெற்​றுக்​கொள்ள மனைவி சம்​ம​திக்​க​வில்​லை என விவாகரத்து கோரி குடும்ப நல நீதி​மன்​றத்​தில் குமரன் வழக்கு தொடர்ந்​தார். ஆனால், கணவருடன் சேர்ந்து வாழ விரும்​புவ​தாக தெரி​வித்த செல்​வி, “எனது பெற்​றோரை மருத்​துவ சிகிச்​சைக்​காக ஊரில் இருந்து அழைத்து வந்​தேன் என்ற ஒரே காரணத்​துக்​காக, கணவர் விவாகரத்து கோரு​கிறார். இதற்​கிடையே, தந்தை இறந்​து​விட்ட நிலை​யில், கணவர் தன்னை தனி​யாக விட்டு பிரிந்து சென்று விட்​டார்” என்று கூறி சென்னை முதலா​வது கூடு​தல் குடும்ப நல நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

    இந்த வழக்கை விசா​ரித்த குடும்ப நல நீதி​மன்​றம், ‘குமரனின் கூற்​றில் உண்மை இல்​லை’ என்று கூறி, விவாகரத்து வழங்க மறுத்​து, சேர்ந்து வாழ உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் குமரன் மேல்​முறை​யீடு செய்​தார். நீதிப​தி​கள் ஜெ,நிஷா​பானு, ஆர்​.சக்​திவேல் அமர்​வில் இந்த மனு மீதான விசா​ரணை நடந்​தது.

    நீதிப​தி​கள் கூறிய​தாவது: வயதான பெற்​றோரை இறுதி காலத்​தில் பராமரிக்​கும் பொறுப்​பும், கடமை​யும் மகன், மகள் ஆகிய இரு​வருக்​கும் உள்​ளது. ஒரு மகளாக அந்த பெண் தனது நோய் ​வாய்ப்​பட்ட தந்​தையை தனது வீட்​டுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்​துள்​ளார். இதை கணவனுக்கு மனைவி இழைக்​கும் கொடுமை​யாகவோ, மன உளைச்​சலாகவோ கருத முடி​யாது. இரு​வரும் கடந்த 2020 ஏப்​ரல் வரை மகிழ்ச்​சி​யாக குடும்​பம் நடத்தி வந்த நிலை​யில், குழந்தை பெற மனைவி சம்​ம​திக்​க​வில்லை என்று கூறு​வதை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது.

    தனது தந்​தையை இழந்து தவித்த மனை​விக்கு ஆறு​தல் கூறு​வதற்​கு​கூட மனமில்​லாமல் கணவர் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்​தது ஏற்​புடையது அல்ல. எனவே, விவாகரத்து கோரிய கணவரின் மனுவை தள்​ளு​படி செய்து சென்னை குடும்ப நல நீதி​மன்​றம் பிறப்​பித்​த உத்​தரவை நாங்​களும் உறுதி செய்​கிறோம். இவ்​வாறு உத்தரவிட்டு குமரனின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்​ளு​படி செய்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறையில் 412 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

    August 20, 2025
    மாநிலம்

    தேவாலயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் மெட்டில் கிறிஸ்தவ பாடல் ஒலிபரப்பு? – குமரி போலீஸார் தீவிர விசாரணை

    August 20, 2025
    மாநிலம்

    மதுரையில் நாளை தவெக 2-வது மாநில மாநாடு

    August 20, 2025
    மாநிலம்

    குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமதாஸ்: ஆக.31-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்

    August 20, 2025
    மாநிலம்

    பிரச்சார கூட்டங்களில் ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநர் நோயாளியாக அனுப்பப்படுவார்: இபிஎஸ் எச்சரிக்கை 

    August 20, 2025
    மாநிலம்

    முன்னாள் படைவீரர்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம் தொடக்கம்

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம் வென்றார் மணிகா
    • வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறையில் 412 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்
    • 9-5 வேலையை ஆரோக்கியமாக மாற்ற 4 உதவிக்குறிப்புகள், ஒரு சிறந்த அமெரிக்க இருதய அறுவை சிகிச்சை நிபுணரின் கூற்றுப்படி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பெங்களூருவில் தெருநாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதித்த 4 வயது சிறுமி உயிரிழப்பு
    • படப்பிடிப்பில் விபரீதம்: குழந்தைகள் உள்பட 120 பேர் மருத்துவமனையில் அனுமதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.