Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நோயாளிக்கு சக்கர நாற்காலி மறுப்பு விவகாரம்: கோவை அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?
    மாநிலம்

    நோயாளிக்கு சக்கர நாற்காலி மறுப்பு விவகாரம்: கோவை அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

    adminBy adminSeptember 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நோயாளிக்கு சக்கர நாற்காலி மறுப்பு விவகாரம்: கோவை அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: கோவை அரசு மருத்துவமனையில் வயதான நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காத விவகாரத்தில் ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து டீன் நடவடிக்கை எடுத்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில், தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

    இங்கு நடக்க முடியாத நோயாளிகளை ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டு, ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட இடங்களுக்கு சக்கர நாற்காலி (வீல்சேர்) மூலம் அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் அழைத்து செல்வார்கள்.

    நோயாளிகளை முறையாக சக்கர நாற்காலிகளில் ஏற்றி செல்கிறார்களா என்பதை மேற்பார்வையாளர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த வடிவேல்(84) என்பவர், நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார்.

    அவரது வலது காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில், மகன் காளிதாஸ் கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்து வந்தார். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 3-வது தளத்தில் செயல்படும் நரம்பு அடைப்பு அறுவை சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்றார்.

    வடிவேலை பரிசோதித்த மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட கால் பாதம் பகுதியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர். பின்னர், தரை தளத்துக்கு வருவதற்காக சக்கர நாற்காலியை எடுத்து வரும் ஊழியரை அழைத்துள்ளனர். அதற்கு அவர் ரூ.100 தர வேண்டும் என கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

    ஆனால் 2 மணி நேரத்துக்கும் மேல் ஆகியும் சக்கர நாற்காலி வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ் தந்தையை லிப்டில் தரைத்தளத்துக்கு அழைத்து வந்து, வெளியே வந்தவுடன் தனது தோளில் தூக்கிக்கொண்டும், தரதரவென இழுத்துக்கொண்டும் வந்தார். பின்னர் தந்தையை ஆட்டோவில் ஏற்றி அழைத்து சென்றார்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதவிர சக்கர நாற்காலியில் சாப்பாட்டு கேரியர்களை எடுத்து செல்லும் வீடியோவும், மூதாட்டி ஒருவர் சக்கர நாற்காலி இன்றி தவித்த வீடியோவும் வெளியாகின. அலட்சியமாக நடந்து கொண்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.

    இதையடுத்து, சக்கர நாற்காலி வழங்காததை கண்காணிக்காத தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் எஸ்தர் ராணி, மணிவாசகம் ஆகியோரை 5 நாட்கள் பணியிடை நீக்கம் செய்து அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலி நேற்று உத்தரவிட்டார். டீன் கீதாஞ்சலி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

    கோவை அரசு மருத்துவமனையில் கூடுதலாக சக்கர நாற்காலிகள் வாங்குவதற்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்ல பணம் கேட்டது தொடர்பாக விசாரணை மேற்கோள்ளப்படும்’’ என்றார்.கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி வழங்காததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையை சிரமத்துடன் தூக்கிச் சென்ற காளிதாஸ்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தூய்மை பணியாளர்கள் கைது விவகாரம்: விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    September 11, 2025
    மாநிலம்

    ‘எடப்பாடி பழனிசாமி பற்றி உதயநிதி சொன்னது உண்மையே’ – டிடிவி தினகரன்

    September 11, 2025
    மாநிலம்

    பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் ஆஜர்!

    September 11, 2025
    மாநிலம்

    ‘இமானுவேல் சேகரனார் இன்றளவும் சமூக நீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளி’ – முதல்வர் ஸ்டாலின்

    September 11, 2025
    மாநிலம்

    அரியலூரில் இருந்து சென்னைக்கு 3 புதிய பேருந்து சேவைகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    September 11, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமுக்காக பள்ளிக்கு விடுமுறை அளித்தது தவறுதான்: அமைச்சர் அன்பில் மகேஸ்

    September 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தூய்மை பணியாளர்கள் கைது விவகாரம்: விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
    • நீங்கள் ஏற்கனவே வீட்டில் வைத்திருக்கும் விஷயங்களைப் பயன்படுத்தி சரளைகளில் களைகளை அகற்ற 4 எளிய வழிகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எலோன் மஸ்க் ஸ்டார்லிங்க் திருப்புமுனையை அறிவிக்கிறது: 2 ஆண்டுகளில் செயற்கைக்கோள்களுடன் நேரடியாக இணைக்க தொலைபேசிகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியில் திருச்சி வீரர் ஹேம்சுதேசன்!
    • ‘எடப்பாடி பழனிசாமி பற்றி உதயநிதி சொன்னது உண்மையே’ – டிடிவி தினகரன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.