Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோருகிறது தவெக: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை
    மாநிலம்

    நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோருகிறது தவெக: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை

    adminBy adminSeptember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோருகிறது தவெக: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘கரூர் சம்​பவம், விபத்​து​போல தெரிய​வில்​லை. திட்​ட​மிட்ட சதி​போலவே தெரி​கிறது. எனவே, சிபிஐ அல்​லது சிறப்பு புல​னாய்வு குழு​வைக் கொண்டு உரிய முறை​யில் விசா​ரணை நடத்த வேண்​டும்’ என்று உயர் நீதி​மன்ற விடு​முறைக் கால நீதிப​தி​யிடம் தவெக​வினர் முறை​யிட்டனர்.

    உயர் நீதி​மன்​றத்​துக்கு தற்​போது தசரா விடு​முறை என்​ப​தால், விடு​முறைக்கால நீதிப​தி​யான தண்​ட​பாணியை சென்னை ராஜா அண்​ணா​மலைபுரம் பசுமைவழிச் சாலை​யில் உள்ள அவரது இல்​லத்​தில் தவெக வழக்​கறிஞர் அணி​யினர் நேற்று சந்​தித்​தனர். அப்​போது, நீதிப​தி​யிடம் தவெக வழக்​கறிஞர் அறிவழகன், இணை பொதுச் செய​லா​ளர் சிடிஆர். நிர்​மல்​கு​மார் ஆகியோர் முறை​யிட்​ட​தாவது: கரூரில் நடை​பெற்ற விஜய் பிரச்​சார கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயி​ரிழந்த சம்​பவம், விபத்​து​போல தெரிய​வில்​லை.

    திட்​ட​மிட்ட சதி​போலவே தெரி​கிறது. பிரச்​சா​ரம் நடந்​து​கொண்டு இருந்​த​போது, திடீரென எங்​கிருந்தோ கற்​கள் வீசப்​பட்​டன. போலீ​ஸார் தடியடி நடத்​தி​யுள்​ளனர். எனவே, இதுதொடர்​பாக சிபிஐ அல்​லது சிறப்பு புல​னாய்வு குழு​வைக் கொண்டு உரிய முறை​யில் விசா​ரணை நடத்த வேண்​டும். கண்​காணிப்பு கேமரா காட்​சிகளை பாது​காக்க உத்​தர​விட வேண்​டும். நடந்த சம்​பவம் தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணை நடத்த வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் முறை​யிட்​டனர்.

    இதை கேட்ட நீதிபதி தண்​ட​பாணி, ‘‘சம்​பவம் நடந்த இடமான கரூர், மதுரை உயர் நீதி​மன்ற எல்​லைக்​குள் இருப்​ப​தால் இதுதொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில்​தான் மனு தாக்​கல் செய்ய வேண்​டும். அவ்​வாறு மனு தாக்​கல் செய்​தால், 29-ம் தேதி (இன்​று) பிற்​பகல் 2.15 மணிக்கு வழக்கு விசா​ரணைக்கு எடுத்​துக் கொள்​ளப்​படும்’’ என்று தெரி​வித்​தார். தவெக சார்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் இன்று காலை மனு தாக்​கல் செய்​யப்​படும் என தெரி​கிறது. அதை தொடர்ந்​து, தசரா விடு​முறைக் கால சிறப்பு அமர்​வில் மனு இன்று மதி​யம் விசா​ரணைக்கு எடுத்​துக் கொள்​ளப்​படு​கிறது.

    இதற்​கிடையே, கரூரை சேர்ந்த செந்​தில்​கண்​ணன் என்​பவர் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் சங்​கரன் நேற்று நீதிபதி செந்​தில்​கு​மார் முன்பு ஆஜராகி, ‘‘கரூர் சம்​பவம் குறித்த முழு​மை​யாக விசா​ரணை நடந்​து, இந்த சம்​பவத்​துக்கு யார் பொறுப்பு என்​பது உறு​தி​யாக தெரி​யும் வரை தவெக சார்​பில் பொதுக்​கூட்​டம், ஊர்​வலம் நடத்த தடை விதிக்க வேண்​டும்’’ என முறை​யிட்​டார். இந்த வழக்கை மாலை 4.30 மணிக்கு விசா​ரிப்​ப​தாக நீதிபதி அறி​வித்​தார். ஆனால், மனு தாக்​கல் செய்யதாமதம் ஆனதால், நேற்று மாலை விசா​ரணை நடை​பெற​வில்​லை. அதே​போல, சென்னை மாநக​ராட்சி பாஜக கவுன்​சிலர் உமா ஆனந்​தன் சார்​பில் வழக்​கறிஞர் வெங்​கட்​ராமன், ‘‘கரூர் சம்​பவம் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும்’’ என்று நீதிபதி செந்​தில்​கு​மாரிடம் முறை​யீடு செய்​தார். இது பொதுநல வழக்​காக இருப்​ப​தால், தான்​ வி​சா​ரிக்​க இயலாது என்​று கூறி, வழக்​கை வி​சா​ரிக்​க நீதிப​தி மறுத்​துவிட்​டார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை தொடக்கம்: புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு – முழு விவரம்

    September 29, 2025
    மாநிலம்

    ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் உறுதி

    September 29, 2025
    மாநிலம்

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க மீண்டும் கரூர் செல்ல விஜய் திட்டம்

    September 29, 2025
    மாநிலம்

    விஜய் பிரச்சாரத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெறவில்லை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தகவல்

    September 29, 2025
    மாநிலம்

    நீதிமன்றம் முன்கூட்டியே அறிவுறுத்தியும் கரூரில் நடந்த துயரம்: பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்ன?

    September 29, 2025
    மாநிலம்

    தமிழக அரசும், விஜய்யும் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும்: கரூரில் பழனிசாமி கருத்து

    September 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை தொடக்கம்: புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு – முழு விவரம்
    • ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் உறுதி
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க மீண்டும் கரூர் செல்ல விஜய் திட்டம்
    • நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோருகிறது தவெக: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை
    • விஜய் பிரச்சாரத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெறவில்லை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.